“ரெய்டுகள்” – நடந்ததும் …நடத்தி வைப்பவர்களும்…!!!

மிக துல்லியமாக விவரங்களை சேகரித்து,
தகவல் ஏதும் வெளியில் கசிந்து விடாதபடி
மிக கவனமாக ரகசியம் காக்கப்பட்டு, அனைத்து
ஓட்டைகளையும் சீல் வைத்து அடைத்து,

மிக புத்திசாலித்தனமாக யோசித்து, நிதானமாக திட்டமிட்டு –
அதை அற்புதமாக செயல்படுத்தி இருக்கிறது வருமான வரித்துறை.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்ட விதம் குறித்து சில தகவல்கள்
படிக்க கிடைத்தது…

————–

ஒரு மிகப்பெரிய ஆபரேஷனுக்காக, நாடு முழுவதும் இருந்து
நூற்றுக்கணக்கான வருமான வரி இலாகா அதிகாரிகளும், சாட்சிகளாக
ஆவணங்களை பதிவு செய்ய இதர இலாகாக்களைச் சேர்ந்த கெசட்
பதிவு பெற்ற அதிகாரிகளும், அதிக அளவில் கார் ஓட்டுநர்களும்
திரட்டப்பட்டிருக்கிறார்கள்.

ஒரு மிகப்பெரிய ஆபரேஷனில் அவர்கள் பங்கேற்று
செயல்படப்போகிறார்கள் என்பதைத்தவிர, தாங்கள் எங்கே
போகப்போகிறோம் – குறி எது, யார் என்பது கடைசி சில நிமிடங்கள்
வரை அவர்கள் யாருக்கும் தெரியாது….!

ஒரு மிகப்பெரிய கால்டாக்சி நிறுவனத்திடம் 150 -க்கும் மேற்பட்ட
வாகனங்கள் முன்னதாகவே சொல்லி வைத்து பெறப்பட்டிருக்கின்றன.
யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க ஒரு திருமண நிகழ்ச்சிக்காக
என்று சொல்லப்பட்டு, ‘Srini weds Mahi’ என்று கார்களில் ஸ்டிக்கர்களும்
ஒட்டப்பட்டு, வரிசை எண்களும் ஒட்டப்பட்டன.



“திருமணம்” நிகழவிருந்த இடத்திற்கு முதல்நாள் இரவே, 150 கார்களும்
ஓட்டுநர்களும் வரவழைக்கப்பட்டு, அங்கேயே தங்க வைக்கப்பட்டனர்.

750 வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு, அதிகாலை 4 மணிக்கு
அந்த இடத்திற்கு வந்து கூடும்படி முன் கூட்டியே உத்திரவு
பிறப்பிக்கப்படுகிறது.

“ரெய்டு” செல்லும் இடத்தில் என்ன செய்ய வேண்டும், எத்தகைய தேடல்
முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், எதை எதை எப்படி
ஆவணப்படுத்த வேண்டும் என்பது போன்ற குறிப்புகள் எல்லாம்
அந்த அதிகாலையில் தான் விவரமாக சொல்லப்படுகின்றன.

பின்னர் ஒவ்வொரு குழுத்தலைவரிடமும், ஒரு சீல் இடப்பட்ட கவர்
கொடுக்கப்படுகிறது. அந்த கவரின் உள்ளே, அவர்கள் ரெய்டு செய்ய
வேண்டிய இடத்தில் வசிப்பவரின் பெயர், விலாசத்துடன் கூடிய
“சர்ச் வாரண்ட் (search warrant ) இருக்கிறது. ஆனால், அதை உடனே
திறந்து பார்க்க அவர்களுக்கு அனுமதி இல்லை.

ஒரு குறிப்பிட்ட பகுதியை, (ரெய்டு நடத்த வேண்டிய கட்டிடம் இருக்கும் ஏரியா)
சென்றடைந்த பிறகு தான், அவர்கள் அந்த கவரை திறந்து பார்த்து,
பின், ரெய்டு நடத்த வேண்டிய இடத்திற்கு செல்ல வேண்டும்.
அந்த நிமிடம் வரை அவர்களுக்கு தாங்கள் யார் வீட்டில்/அலுவலகத்தில்
ரெய்டு செய்யப்போகிறோம் என்பது தெரியாது….

ரெய்டு துவங்கும் முன்னர், வீட்டில் இருப்பவருக்கு, தங்களது அடையாள அட்டையை காண்பித்து, அவர்களிடம் தாங்கள் யார் என்பதை தெளிவாக தெரிவித்து விட்டு, சர்ச் வாரண்டையும் காண்பித்து விட்டு தான்,
தங்கள் பணியை துவக்க வேண்டும்.

தேடுதலைத் துவங்கும் முன்னர், வீட்டில் இருப்பவரிடம், தாங்கள் எதையும் கொண்டு வரவில்லைஎன்பதை பரிசோதித்துக் கொள்ளும் உரிமை அவர்களுக்கு இருப்பதை தெரியப்படுத்த வேண்டும்….தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக்
கொள்ள வேண்டும்….
(பிற்பாடு, ரெய்டு செய்தவர்களே கொண்டு வந்து வைத்தனர் ( planted )
என்கிற சந்தேகமோ, குற்றச்சாட்டோ வராமலிருக்க இந்த ஏற்பாடு.

அதே போல் வீட்டில் இருப்பவர்களை எந்தவிதத்திலும் துன்புறுத்தக்கூடாது என்பதும் கூறப்பட்டிருக்கிறது. வீட்டிலிருந்து வெளியுலகினர் யாரையும் தொடர்பு கொள்ள முடியாதபடி, தொலை தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்படுகின்றன.
வெளியார் வீட்டிற்கு வருவதும், வீட்டில் உள்ளவர்கள் வெளியேறுவதும்
முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது.

ஒவ்வொரு குழுவும் எங்கே சென்றிருக்கிறது என்பது மற்ற குழுவினருக்கு தெரியாது. பிற மனிதர்களிடமோ, மீடியாக்களிடமோ பேசுவதிலிருந்து, ரெய்டு குழுவினர் தடை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

——————

இவ்வளவு பிரமாதமாக திட்டமிட்டு செயலாற்றியதன் விளைவாக,
ஆயிரக்கணக்கான கோடிகள் பெறுமானமுள்ள, சட்டவிரோதமான
பண பரிவர்த்தனைகள், பினாமி சொத்துக்கள், தங்க,வைர நகைகள்
ஆகியவை கைப்பற்றப்பட்டிருக்கின்றன. பினாமி சொத்துக்கள் என்று நிரூபிக்கப்படும் சொத்துக்கள் அனைத்தையும், அரசு தன் வசம் எடுத்துக்கொள்ள
சட்டம் உரிமை அளிக்கிறது.

ரெய்டுகள் முழுமையாக முடிவடைந்த பிறகு, அதனைப்பற்றிய விளக்கமான அறிக்கை வெளியிடப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது…

—————–

மிகத்திறமையான அதிகாரிகள்… அற்புதமான திட்டமிடல்,
செயலாற்றல் – எல்லாமே நமக்கு மகிழ்ச்சியையும், திருப்தியையும் அளிக்கின்றன.

ஒரே ஒரு விஷயம் தான் நெருடுகிறது….
இத்தனை ஆற்றலையும், கட்டுப்படுத்தும் / நிர்வகிக்கும் பொறுப்பை –
எதற்கும் துணிந்த சுயநலவாத, அரசியல்வாதிகளிடம்
போய் ஒப்படைத்திருக்கிறதே -நமது அரசியல் அமைப்பு…!!!

இதற்கென்ன தீர்வு….????

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to “ரெய்டுகள்” – நடந்ததும் …நடத்தி வைப்பவர்களும்…!!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    //”ஒரே ஒரு விஷயம் தான் நெருடுகிறது…. இத்தனை ஆற்றலையும், கட்டுப்படுத்தும் / நிர்வகிக்கும் பொறுப்பை – எதற்கும் துணிந்த சுயநலவாத, அரசியல்வாதிகளிடம் போய் ஒப்படைத்திருக்கிறதே -நமது அரசியல் அமைப்பு…!!! இதற்கென்ன தீர்வு….????”//

    இந்த நடைமுறைகள் தெரிந்திருந்தாலும், இடுகையில் படிக்கும்போது நன்றாக இருக்கு.

    ஆனால், இடுகையை வேறு தளத்துக்குக் கொண்டுசெல்வது உங்களுடைய கடைசி ஓரிரு வரிகள். பாராட்டுக்கள் கா.மை. சார்.

    அரசியல்வாதிகள் கையில் இருப்பதால்தான் அவர்கள் வேண்டியவர், வேண்டாதவர் என்று பாகுபடுத்திச் செயல்பட முடிகிறது. நமக்கு பிரதமர் காந்தி அல்லவே. நெறிமுறைகள் பிறழும் அரசியல்வாதிகள் தானே. அதற்கு ஒரு தீர்வு கிடைத்தால் நன்றாக இருக்கும்.

  2. Sakthivel's avatar Sakthivel சொல்கிறார்:

    Income tax dept, should be given separate entity and powers like election commission and court and I.A.S, I.P.S and I.R.S officials should submit periodic reports to an authority like Lok Athalet.

  3. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    “லஞ்ச பணம், தேர்தல் நிதிக்கு அளிக்கப்படும் பணம், நன்கொடையாக அளிக்கப்படும் பணம் என பலவும் வருமான வரிக்குள் வருவது இல்லை.” – ப சிதம்பரம் – இன்றைய செய்தியில்.

    சில முக்கியமான ‘government body’ அமைப்புகளை(CBI, IT) தனித்த அதிகார அமைப்புகளாக கொண்டு வர வேண்டும். அவைகளையும், பிரதமர், முதல்வர்கள், நீதிபதிகள் உட்பட அனைத்து அதிகாரம் படைத்தவர்களையும் Lok Athalet அமைத்து அதன் கீழ் கொண்டு வர வேண்டும்.

    என்ன செய்து என்ன அவர்களுக்கா தெரியாது எப்படி சந்துபொந்துகளில் புகுந்து வெளிவருவது என்று.

    மேலே உள்ள செய்தியில் சிதம்பரம் நல்ல விஷயம் தான் சொல்கிறார். ஆனால், அவர் பிள்ளை?

  4. avudaiappannav's avatar avudaiappannav சொல்கிறார்:

    paaratta padavendum ……
    kurtam kandupidikka mudiyaathu

  5. புது வசந்தம்'s avatar புது வசந்தம் சொல்கிறார்:

    நல்ல பதிவு. நல்ல விசயம் நடந்துள்ளது. பாராட்டப்பட வேண்டியது தான். ஆனால், கோடி கணக்காண புதிய பணம் எப்படி வந்தது ? ரிசேர்வ் வங்கியே எனக்கு எதுவும் தெரியாது என சொல்லி விடும். அப்புறம் என்ன ? எல்லாம் மாயை …தான்.

  6. D. Chandramouli's avatar D. Chandramouli சொல்கிறார்:

    If tax evasion is found out, it is not enough that the tax with penalty is collected. It is rather easy for the culprits to pay the evaded tax and also the penalty. What is more important is that they should be brought before the court and punished behind bars according to the law.

  7. ravikumar's avatar ravikumar சொல்கிறார்:

    All parties are painting Political color for this Tax evasion. It is a pathetic situation that entire TN media and parties have become rotten to justify these Tax evasion.

  8. chandramouly.venkatasubramanian's avatar chandramouly.venkatasubramanian சொல்கிறார்:

    well done,what is the fate of the raids conducted already?Regularisation of cash,benami assets should not b done.Stringent action is required

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.