.
.
இந்தியாவின் மிகவும் பழமையான செய்தித்தாள் 1898-ஆம் ஆண்டு
தனது வைர விழாவை ( ??? ) கொண்டாடியபோது எடுக்கப்பட்ட
சில அற்புதமான கருப்பு வெள்ளை புகைப்படங்கள் கீழே –
இந்த புகைப்படங்கள் அனைத்தும் டைம்ஸ் ஆப் இந்தியாவின் மும்பை அலுவலகத்தில் 1898-ல் எடுக்கப்பட்டவை.
டைம்ஸ் ஆப் இந்தியா புகைப்படங்களை காணும்போது,
அந்த காலத்தில் நிலவிய அச்சுத்துறையின் நிலையை மிக
சுலபமாக புரிந்து கொள்ளலாம்.
“அச்சு கோத்தல்” ( composing ) –
“திருத்தம் பார்த்தல்” (proof reading )-
போன்றவை இன்றைய தலைமுறை கேள்விப்படாதவையாக இருக்கும்…!!!
இந்த விஷயங்களைப் பற்றியே நிறைய எழுதலாம்….
(தேர்தல்கள் முடிவடையட்டும்…..!!! )
இப்போதைக்கு புகைப்படங்கள் மட்டும் கீழே –
( நடுத்தர வயதுடைய மற்றும் முதிய நண்பர்கள் இதனை மிகவும்
ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்…)


செய்தியாளர்கள், உதவி ஆசிரியர்கள் பணிபுரியும் இடம்

பிளாக் தயாரிக்கும் இடம்

செய்திகளை அச்சுக் கோக்கும் இடம்



ஜெனரல் மேனேஜரின் அறை ….


மும்பை அலுவலகத்தின் முன்புறத் தோற்றம்….




“நடுத்தர வயதுடைய மற்றும் முதிய நண்பர்கள் இதனை மிகவும்
ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்”. True. So much development came in all fields. in 1950/60s four intervals in our cinema theatres. We have no opportunity to visit any newspaper office. If possible, I request you to publish the photos of any present day news paper office ?
Fantistic pics!
Dear Sir,
As a civil Engineer I enjoy these pictures,
Structure with cast iron columns.
the floor heights no need of AC.
yogi
என்ன ஒரு சூழ்நிலை … ! அற்புதம் .. அனைத்து உழைக்கும் வர்க்கமும் தங்களது வேலையில் கண்ணும் – கருத்துமாக — புகைப்படத்தின் வாயிலாக ” ஒரு சரித்திரம் ” … !! ஆமாம் அய்யா .. மருத்துவ படிப்புக்கும் — நுழைவு தேர்வுக்கு மட்டும் அவ்வளவு முக்கியத்துவம் .. ? மற்ற படிப்புகள் எல்லாம் சும்மாவா … ? ஒரு மருத்துவர் மட்டும் தனித்து இயங்க முடியுமா … ? இன்னும் நிறைய கேள்விகள் இந்த ஒரு துறை பற்றி … !!!
உங்கள் கேள்வி: மருத்துவ படிப்புக்கும் — நுழைவு தேர்வுக்கு மட்டும் அவ்வளவு முக்கியத்துவம் .. ? மற்ற படிப்புகள் எல்லாம் சும்மாவா … ? எனக்கு ஒரு சிந்தனையை ஏற்படுத்தியது.
மருத்துவப் படிப்பு, பொறியியல், வக்கீல் தொழில் ஆகியவைகளுக்கு (இன்னும் பல இருக்கலாம்) இந்தியா முழுமைக்கும் பொதுத் தேர்வு தேவை. தாழ்த்தப்பட்டவர்களுக்கு grace மதிப்பெண்கள் வழங்கப்படலாம். இது நீதித்துறையையும் மருத்துவத் துறையையும் மேம்படுத்தும்.
இன்னொரு சிந்தனை, மக்களின் வாழ்வியல் இடம் காணப்பட்டுப் பதியவேண்டும். இலங்கையில் உள்ளது போன்று, அந்த அந்த இடத்தில் வாழ்பவர்கள்தான் அந்தக் கல்லூரிகளில் படிக்க இயலும். இப்படி இருக்கும்போது, யாரும் இடம் பெயரவேண்டிய அவசியம் இராது.
அரசு காப்பீடு, அரசு மருத்துவமனைக்கு மட்டும்தான் செல்லும். அரசுக் கல்லூரிகளில் படித்தவர்களுக்குத்தான் அரசு வேலைக்கு முன்னுரிமை. அரசு அலுவலர்கள் மக்கள் அரசு சார்ந்த பள்ளிகளில் படிக்கவில்லையென்றால், அரசு அலுவலர்களின் ப்ரொமோஷன், இன்’கிரிமென்ட் போன்றவை 4 மடங்கு தாமதமாகும் போன்று இருந்தால்தான், அரசு சார்ந்த மருத்துவமனை, பள்ளிகள் கல்லூரிகள் வளம் பெறும்.
மேலே உள்ள படங்களில் மக்கல் அணிந்துள்ள உடைகள் அந்தக் காலத்தையும், வட்டாரத்தையும் பிரதிபலிக்கின்றன.
இந்தியர்கள் இந்தியர்களாக வாழ்ந்த காலம்…