இன்று மகாகவி சுப்ரமணிய பாரதியின் நினைவு தினம்.

அவரை நினைவு கூறும் இந்நாளில்,
இந்திய சுதந்திரப்போராட்டத்தில்
தீவிரமாக ஈடுபட்ட இன்னும் சிலரை, முக்கியமாக தமிழ் நாட்டை
சேர்ந்த சிலரையும் நினைவுகூர்ந்து அவர்களுக்கு நம்
வணக்கத்தையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வோமே.
( இன்னும் எத்தனையோ ஆயிரமாயிரம் பேர் உண்டு – இப்போதைக்கு கிடைத்த புகைப்படங்களை மட்டும் தான் இங்கு பதிவிட முடிந்தது. அவர்கள் அத்தனை பேருக்கும் சேர்த்து நமது வந்தனங்கள்….)
– முடிந்தால், முதலில் புகைப்படத்தை மட்டும் பார்த்து,
அவர்களை உங்களால் நினைவுகூற முடிகின்றதா என்று
சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்களேன்….!
மாமன்னர் புலித்தேவன்
வீரபாண்டிய கட்ட பொம்மன்
மருது சகோதரர்கள்
தீரன் சின்னமலை
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.
தியாகி சுப்ரமணிய சிவா
மணியாச்சி வாஞ்சிநாதன்
கொடி காத்த திருப்பூர் குமரன்
இந்திய தேசிய ராணுவ கேப்டன் லக்ஷ்மி (நேதாஜி அருகே)
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
கர்மவீரர் காமராஜ்
தோழர் ப.ஜீவானந்தம்
எளிமையின் சின்னம் கக்கன்
ஒரு பாரதி பாடல் –
















ஐன்றைய இடுகையின் வெளிப்பாடு : பாரதியின் ” நெஞ்சு பொறுக்குள்ளயே” பாடலை நினைவு படுத்தினாலும் தங்களின் தலைப்பு வரிகளில் நம்பிக்கை கொள்வோம். ஜனவரி முப்பது தியாகிகள் தினமாக கொள்வதை போல் இன்றைய தினத்தை தாங்கள் காட்டிய தமிழர்களின் நினைவுக்காக அனுசரித்து ……
நண்பர்களே,
ஒரு யோசனை சொல்ல நினைத்தேன்.
இடுகையில் விடுபட்டு விட்டது.
உங்கள் வீட்டு செல்லங்களுக்கு
இந்த புகைப்படங்களைக் காட்டி அறிமுகப்படுத்துங்களேன்.
அந்த தியாகிகளைப்பற்றி இரண்டு வார்த்தைகளில்
அவர்களுக்கு விளக்குங்களேன்.
இல்லையென்றால் அடுத்த சந்ததிக்கு,
இந்த சுதந்திரப் போராட்ட வீரர்களை எல்லாம்
யார் என்றே தெரியாமல் போய் விடும்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
பிங்குபாக்: இவர்கள் எல்லாரையும் அடையாளம் தெரிகிறதா….? | Classic Tamil
இவர்கள் எல்லாரையும் அடையாளம் தெரிகிறதா….? நல்ல கேள்வி …! இதே கேள்வியை இன்றைய அரசியல்வாதிகளிடமும் — மாணவர்களிடமும் கேட்டால் – கிடைக்கும் பதில் தெரியலையே …. யார் இவர்கள்…. எந்த படத்தில் நடித்தவர்கள் என்று கேட்க கூடிய நிலையில்தான் … நம்நாடு இருக்கிறது …!! நல்ல பாடலை குறிப்பிட்டு உள்ளீர்கள் ….. சுதந்திரம் அடைந்து ஒரு ஒன்பது ஆண்டு இடைவெளியில் { வெளிவந்த 1956 — ம் ஆண்டு } வெளிவந்த “சதாரம் ” என்கிற படத்தில் வரும் : ” லாபமா — நஷ்டமா ” என்ற பாடலில் வரும் வரிகள் இன்றைய அரசியலுக்கும் பொருந்துவது ஆச்சர்யம் …..!!! திருந்தாத அரசுகள் …? காணி நிலம் வேண்டும் என்று பாரதியார் கேட்டதற்கும் …. இன்றைய அரசு நிலம் கேட்பதற்கும் உள்ள வித்தியாசமே — சுதந்திர போராட்டத்தை அடிக்கடி நினைக்க தூண்டி … என்று தணியும் மீண்டும் ஒரு சுதந்திர தாகத்தை —- என்று பாட தோன்றாதா ?
We salute every one of these patriotic men. Would we ever see the likes of them in the current political set up? The last sixty years of India have gone down the drain in Tamil Nadu, and the only comforting feeling (if we can say so) is that many other States have fared even worse!