செத்தும் கொடுத்த …..

செத்தும் கொடுத்த …..

மாநிலங்கள்  அவையில் இன்றைய தினம் மத்திய
செய்தி மற்றும் விளம்பரத்  துறை அமைச்சரால்
கொடுக்கப்பட்ட தகவல் இது –

காலம் சென்ற தலைவர்கள் இரண்டு பேர் –
அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த ஆண்டு
பத்திரிகைகளில் மத்திய அரசு விளம்பரங்கள்
கொடுத்த வகையில்  செலவு –

19 நவம்பர் 1917 ல் பிறந்தவர்
பெயரில்  செலவு  –           2.46 கோடிகள்

20 ஆகஸ்டு 1944 ல் பிறந்தவர்
பெயரில் செலவு –            4.79 கோடிகள்

ஆக மொத்த செலவு –         7.25 கோடிகள்

லால் பகதூர் சாஸ்திரியும்,
மொரார்ஜி தேசாயும் கூடத்தான்.
இந்த நாட்டில் பிரதமர்களாக இருந்து மறைந்த
புகழ் பெற்ற தலைவர்கள்.

எளிமையின் – நேர்மையின்
எடுத்துக் காட்டாக வாழ்நாளின் இறுதிவரை
இருந்தவர்கள் அவர்கள்.
ஆனால் – இன்று வரை அவர்கள் நினைவைப்
போற்றி சல்லிக்காசு கூட செலவு செய்ததில்லை அரசு.

காரணம்  ?

இவர்கள் – இன்றைய காங்கிரஸ் தலைவருக்கு
எந்த விதத்திலும் சொந்தமில்லையே !

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to செத்தும் கொடுத்த …..

  1. shandu's avatar shandu சொல்கிறார்:

    Those are the useless expenses which cause the indian economy to down

    and nobody is here to raise the questions?

  2. Ponraj Mathialagan's avatar Ponraj Mathialagan சொல்கிறார்:

    உங்களுக்கு அவங்க பேரை சொல்ல பிடிக்கலியா? இல்லை விருப்பம் இல்லையா? முதலாமவர்: இந்திரா காந்தி, இரண்டாமவர்: ராஜீவ் காந்தி. …!!! இப்போது உங்கள் கட்டுரையின் தலைப்பை “செத்தும் கெடுத்த” என்று மாற்றிகொள்ளுங்கள்…!!!

  3. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    வருக நண்பர் பொன்ராஜ் மதியழகன்,

    இதைத்தான் –
    இத்தகைய ஒரு மறுமொழியை

    யாரிடமிருந்தாவது
    எதிர்பார்த்து தான் அப்படி
    ஒரு தலைப்பையும் -பெயர் விடுதலையும்
    செய்திருந்தேன்.
    சரியாக உணர்ந்து, பிடித்து விட்டீர்கள்.
    நன்றி..

    -வாழ்த்துக்களுடன்
    காவிரிமைந்தன்

  4. ramanans's avatar ramanans சொல்கிறார்:

    // முதலாமவர்: இந்திரா காந்தி, இரண்டாமவர்: ராஜீவ் காந்தி!! //

    இது கூட எமக்குத் தெரியவில்லை என்றால் அப்புறம் காவிரி மைந்தனை இவ்வளவு நாள் படித்ததற்கு பொருளே இல்லாமல் போய் விடுமே!

    பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள். அதனாலேயே இந்த மௌனம். 😦

  5. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நன்றி ரமணன்.

    -வாழ்த்துக்களுடன்
    காவிரிமைந்தன்

  6. senthil's avatar senthil சொல்கிறார்:

    Indira & Rajiv

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.