டி.ஆர்.பாலுவும் – பசுமாடு – எருமை மாடு
விளக்கமும்
டி.ஆர்.பாலு தஞ்சையில் பேசும்போது கூறியது –
1) பாலை பசுமாடும் கொடுக்கிறது, எருமைமாடும்
கொடுக்கிறது. இந்த பாலின் விலையும் அந்த பாலின்
விலையும் ஒன்றா? அதே போன்றுதான் 2ஜி மற்றும்
3ஜி இரண்டும் அலைக்கற்றைதான்.
ஒரே விலையில் இரண்டையும் வாங்கிவிட முடியுமா?
2) ” கருணாநிதி ஊமைகளை பேசவைத்தவர்.
அவர் செவிடர்களை கேட்க வைத்தவர். இனி தமிழ்
நாட்டில் எப்போதும் அவர் ஆட்சி தான் “.
———————————————————————————
பாலு அவர்களுக்கு விளக்கம் –
1) அதையே தான் தணிக்கையாளர்களும் சொல்கிறார்கள்.
எப்படி பசும்பாலின் விலைக்கு எருமைப்பாலை
வாங்க முடியாதோ – அதே போல்,
அதிகம் பேரால் பயன்படுத்த முடியாத
3ஜி யே ஏலத்தில் இவ்வளவு விலை போகுமானால் –
மிகக் குறுகிய காலத்தில்
40 கோடி இணைப்புகளை பெற்றுத்தந்துள்ள
2ஜி க்கு ஏலத்தில் எவ்வளவு அதிகம் பணம்
வந்திருக்க வேண்டும் ?
அதைத்தான் இழப்பு என்கிறார்கள்.
இதை – தெரியாமல் செய்வது வேறு.
டிராய் முதற்கொண்டு, நிதி அமைச்சகம்,
சட்ட அமைச்சகம், பிரதமர் ஆகிய அத்தனை பேரின்
ஆலோசனைகளையும் மீறி வேண்டுமென்றே –
கையூட்டு பெற்றுக்கொண்டு,
சுயலாபம் கருதி, செயல்பட்டதால் தான் –
இதை
ஊழல் என்றும்,
சுரண்டல் என்றும்
கொள்ளை என்றும் சொல்கிறார்கள்.
தூங்குபவர்களை எழுப்பலாம் –
கண்ணை மூடிக்கொண்டு விழிக்க மறுப்பவர்களை
யாரால் எழுப்ப முடியும் ?
அவர் சொல்லிய இரண்டாவது விஷயம் –
நித்தியானந்தாவிற்கு மாற்று இல்லாமல் தமிழகமே
தத்தளித்து கொண்டிருந்தது ! இனி மக்களுக்கு
கவலையே இல்லை !
பேச முடியாதவர்களையும்,
கேட்க இயலாதவர்களையும்,
பார்க்க இயலாதவர்களையும்
இனி பாலுவே கலைஞரிடம் அழைத்து சென்று
குணப்படுத்தி விடுவார் !



[…] […]