தாமதிக்கப்படும்  தீர்ப்புகளே –  குற்றங்கள் மீண்டும் மீண்டும் நிகழ காரணம் …

…………………………………………………………………………..

………………………………………

ஒவ்வொரு சம்பவத்தின் போதும், கற்பழித்த கூட்டுக் கயவர்களின் பின்னணியைப் பார்த்தால் –

ஒவ்வொரு தறுதலையின் மீதும் ஏகப்பட்ட கொலை, கற்பழிப்பு, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன…. எல்லா மிருகங்களும் மீண்டும் மீண்டும் ஜாமீனில் வெளியே வந்து – குற்றச்செயல்களை தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்… இவர்கள் மீது நிலுவையில் இருக்கும் வழக்குகள் உரிய வேகத்தில் தீர்மானிக்கப்பட்டு, அவர்கள் தண்டிக்கப்பட்டிருந்தால், இப்படி மேலும் மேலும் குற்றங்கள் தொடர்ந்திருக்குமா ….???

இந்த நாட்டில் -ஏன் இந்த அவலம் …???

எத்தனை  நீதி மன்றங்கள் ?        எத்தனை   வழக்குரைஞர்கள் ?
இருந்தும்   ஏன்  லட்சக்கணக்கில் முடிக்கப்படாத  வழக்குகள் ?
தீர்ப்புகள்  வருடக்கணக்காக  இழுத்தடிக்கப்படும் நிலை  ஏன் ?


தாமதிக்கப்படும்  தீர்ப்பு   மறுக்கப்பட்ட நியாயம் என்பது  சட்டம்   படித்தவர்களுக்கு 

தெரியாதா ?  பின்  ஏன் இந்த   நிலை ?

சுயநலம்  –  அப்பட்டமான  சுயநலம்.      

வருடக்கணக்காக  ஒத்திவைப்புகள் (வாய்தா)  கொடுக்கப்படுவதேன் ? 

 3 ஒத்தி வைப்புக்களுக்கு மேல்  அனுமதிக்க முடியாது  என்று  நீதிபதிகள்  வழக்குகளை  தொடர்ந்து  நடத்தி முடிக்க முடியாதா ?

தங்கள்  வரும்படி  தொடர்வதற்காகவே  வாய்தா  வாங்கும்  வழக்கறிஞர்களுக்கு  நீதிபதிகளும் ஒத்துழைப்பு  அளிப்பது  ஏன் ?

கட்சிக்காரர்களிடம் வழக்கறிஞர்கள் வாங்கும் சம்பளத்திற்கு (துவக்கத்திலும், பின்னர்  ஒவ்வொரு வாய்தாவின் போதும், பின்னர்  வழக்கு  முடிவடையும்போதும் ) யாராவது – என்றாவது –  ஒப்புகைச்சீட்டு (ரசீது) கொடுப்பது உண்டா ?    

இதுவரை  எந்த  வழக்கறிஞர் வீட்டிலாவது,   அலுவலகத்திலாவது,   என்றாவதுவருமான வரி  அதிகாரிகள் சென்று சோதனை  செய்ததாக கேள்வியாவது பட்டிருக்கிறோமா ?

–   ஏன்  ?        என்று   மாறும் இந்த நிலை ?

“இன்னும்  எத்தனை  காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே -சொந்த நாட்டிலே ? 

நம் நாட்டிலே ? ” –  என்று   நாமக்கல்  கவிஞர் பாடி  60  ஆண்டுகளுக்கு மேல்  ஆகியும்

எந்தவித முன்னேற்றமும் இல்லையே !

வாய்தாவுக்கு வாய்தா  வருமானம் என்பதை தடை செய்து, 

ஒரு வழக்கு முழுவதற்குமான  ஒரே சம்பளம் என்றும்,

வழக்கறிஞர்கள்  வாங்கும்  பணத்திற்கு உரிய ரசீது கொடுக்க வேண்டும் என்றும்சட்டம் கொண்டு வரமுடியாதா ?

3 வாய்தாவிற்கு பிறகு மேற்கொண்டு நீட்டிக்கப்படாமல்  வழக்கு  தொடர்ந்து  நடத்தி முடிக்கப்பட வேண்டும்  என்று    தீர்மானிக்க  முடியாதா ?

வருமானத்தையே  குறியாக  கொண்ட  வழக்குரைஞர்  மத்தியிலிருந்து   நீதிபதிகளை நியமிக்காமல் – மூத்த -முதிர்ந்த அனுபவம் கொண்ட சட்டக்கல்லூரி   பேராசிரியர்களை  நீதிபதிகளாக  நியமிக்கக் கூடாதா?

ஏன்  முடியாது ?  

எல்லாமே  முடியும்  –  மனம்  இருந்தால் !!!


யாருக்கு ….???   செய்யக்கூடிய அதிகாரத்தில்  இருப்போர்க்கு …1!! 

………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக