………………………………………..

………………………………………..
வலைத்தளத்தில் ஒரு இடுகையைப் படித்தேன்…. உள்ளத்தைத் தொடும் உண்மை….கீழே –
……………………………………………..
*ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது*.
*இது இந்தியாவின் உண்மை*.
*அடுத்த 10 – 15 ஆண்டுகளில் இந்தியாவின் ஒரு தலைமுறை உலகை விட்டு போக இருக்கிறது வயது மூப்பின் காரணமாக*.
*ஆம்*…
*அது நாமாகவோ*,
*நம் தாயாகவோ, தந்தையாகவோ,
பாட்டி, தாத்தா,பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா*, *சித்தி, மாமி என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்*
இந்த உண்மையை உணர்ந்து கொண்டு மேலே படியுங்கள்.
*நான் கூறும் இந்த தலைமுறை மக்கள் (நம் பெரியவர்கள்) முற்றிலும் வேறுபட்டவர்கள்*.
இவர்கள் இரவில் சீக்கிரம் தூங்குபவர்கள்,
அதிகாலையில் சீக்கிரமே எழுபவர்கள்,
காலையில் நடைப்பெயர்ச்சிக்கு செல்பவர்கள்
வீட்டு தோட்டம் செடிகளுக்கும் தண்ணீர் கொடுப்பவர்கள்..
*கடவுளை வழிபடுவதற்காக, தானே பூக்களைப் பறித்து – பிரார்த்தனை செய்பவர்கள்*,
*தினமும் கோவிலுக்குச் செல்பவர்கள்*.
*வழியில் சந்திப்பவர்களுடன் பேசுபவர்கள்*,
*அவர்களின் மகிழ்ச்சியையும் துயரத்தையும்* *விசாரிப்பவர்கள்*
*இரு கைகளை கூப்பி* *வணங்குபவர்கள்*.
*வழிபாடு இல்லாமல் உணவை எடுத்துக் கொள்ளாதவர்கள்*
*அவர்கள் உலகம் வித்தியாசமான உலகம்*.
திருவிழாக்கள், விருந்தினர் உபச்சாரம், உணவு, தானியங்கள், காய்கறிகள், அக்கறை, யாத்திரை, பழக்கவழக்கங்கள்
அவர்களின் அனைத்துமே குடும்பத்தையும், உற்றார் உறவினர் நலனையும்
*அது மட்டுமில்லாமல் ஊரார் நலனையும்*, *அவர்களுக்கான விருந்தோம்பலையும் சுற்றி சுற்றியே வருகிறது*.
செய்தித்தாள்கள், லேண்ட் லைன் தொலைபேசி மீது அலாதி பிரியம் கொண்டவர்கள் …
தொலைபேசி எண்களை டைரியில் பராமரிப்பவர்கள்….
ஒரு நாளைக்கு இரண்டு-மூன்று முறை செய்தித்தாளைப் படிப்பவர்கள் ….
*எப்போதும் ஏகாதசி , அமாவாசை மற்றும் பௌர்ணமி ஆகியவற்றை நினைவில் கொள்பவர்கள் இந்த மக்கள்*,
*கடவுள் மீது வலுவான நம்பிக்கை உள்ளவர்கள்*
*சமூக பயம் உள்ளவர்கள்*,
*பழைய செருப்புடன் உலா வருபவர்கள்*
*பனியன், சோடா புட்டி கண்ணாடி என சதா எளிய தோற்றத்தில் உலா வருபவர்கள்*.
*கோடையில், ஊறுகாய்*, *வடாம் தயாரிப்பவர்கள்*
*வீட்டில் உள்ள உரலில்* *இடித்த மசாலாப்* *பொருள்களைப்* *பயன்படுத்துபவர்கள்*
*எப்போதும் நாட்டு தக்காளி, கத்திரிக்காய், வெந்தயம், கீரைகளைத் தேடி தேடி வாங்குபவர்கள்*.
*இவர்கள் அனைவரும் நம்மை மெதுவாக விட்டு செல்ல இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா*?
*உங்கள் வீட்டிலும் இப்படி யாராவது இருக்கிறார்களா*?
*ஆம் எனில்*, *அவர்களை மிகவும் அன்பாக கவனித்துக் கொள்ளுங்கள்*.
*மரியாதை கொடுங்கள்*
*அவர்களிடம் வாழ்வியலை கற்று கொள்ளுங்கள்*
*இல்லையெனில்*, *அவர்களோடு ஒரு முக்கியமான வாழ்வியல் என்னும் அதி முக்கிய வாழ்க்கைப்பாடமும் மறைந்தே போய்விடும்*
*அதாவது, மனநிறைவு*, *எளிமையான வாழ்க்கை, உத்வேகம் தரும் வாழ்க்கை*,
*கலப்படம் மற்றும் புனைவு இல்லாத வாழ்க்கை*,
*மதத்தின் வழியைப் பின்பற்றும் வாழ்க்கை மற்றும் அக்கறையுள்ள* , *ஒரு ஆத்மார்த்தமான வாழ்க்கை*
*எல்லாம் அவர்களுடன் மறைந்து விடும்*.
*எனவே இதற்காகவாவது உங்கள் குடும்பத்தில் யார் மூத்தவராக இருந்தாலும், அவர்களுக்கு மரியாதை , நேரம் மற்றும் அன்பு கொடுங்கள்*.
*நம் முன்னோர்களே நமது அடையாளம்*.
*அவர்களே நமது முகவரி*
*மற்றும் நமது பெருமை*
*அவர்களிடமிருந்து அனைத்து பழக்க வழக்கங்களை, வாழ்வியல் நெறிமுறைகளை நாம் கற்க வேண்டும்*.
*அப்போதுதான் நாம் நம் குழந்தைகளுக்கும்*, *நம்மைவிட வயதில் சிறியவர்களுக்கும் நாம் வழிகாட்டியாக இருக்க முடியும்*.
அவர்களின் “சகாப்தம்” முடியும் முன்னரே, இந்த உண்மைகளை உணர்ந்து தெளிவோம்….
( நன்றி – பாஸ்கர் …)
…………………………………………………………………………………………………………………………………………………………………



அருமை அருமை ங்க 🌹
மிக்க நன்றி ங்க 🙏