…………………………………………………………..

………………………………………………………………
கொஞ்ச நாட்கள் மும்பாக,தென்காசி மாவட்டத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்டபோது திமுக எம்பி கனிமொழி –
தமிழையும் தமிழர்களையும் கொச்சைப்படுத்தக் கூடிய, பெரியாரை இழிவுபடுத்தக்கூடிய
சில” கூலிக்காரர்”-களை எதிர்த்து அரசியல் செய்ய
வேண்டிய சூழல் உள்ளது” என சீமானின் பெயரை
குறிப்பிடாமல் மறைமுகமாக பேசியிருந்தார்.
அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில்
சீமான் அவர்களிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது…
அங்கே சீமான் சீறியதை காணொளி ஒன்றில் பார்த்தேன்.
படு கோபம் – படு சுவாரசியம் …..
நீங்களும் தான் பாருங்களேன் ….கீழே –
……………………………………………………………………………………………..
……………………………………………………………………………………………………………………………………………………………………………………..



சீமான் பேசியதில் ஒன்றுகூட தவறாக எனக்குப்படவில்லை. கூலி கருணாநிதி என்று சொல்லியதாகட்டும், கூலி அண்ணாத்துரை என்று சொல்லியதாகட்டும், ஒரு அப்பாவுக்கு இரண்டு சாதி என்று சொல்லியதாகட்டும்… ஒன்றுகூட தவறாக எனக்குத் தோன்றவில்லை.
ஆனாலும் கனிமொழி பாவம். யாருக்கும் தெரியாமல் பாஜக உறவை மத்தியில் வைத்துக்கொண்டு, இங்கு பாஜக எதிர்ப்பு அரசியல் செய்து, ஆனாலும் அங்கீகாரம் கிடைக்காமல் உதயநிதியின் கால்களில் விழுந்துகிடக்கவேண்டியிருக்கிறது. ஏன் அரசியலுக்கு வந்தோம் என்று நொந்துகொண்டிருப்பார்.