………………………………………………………

……………………………………………………….

…………………………………………………………
வரிவிதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில்
இந்தியாவிலிருந்து ஐ-போன்களை – 5 விசேஷ விமானங்களில் – அமெரிக்காவுக்கு கொண்டு
சென்றது ஆப்பிள் நிறுவனம்.
வரிவிதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐ-போன்களை அமெரிக்காவுக்கு கொண்டுசெல்லும் பணிகளில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தியதைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இதன் ஒருபகுதியாக, தனக்குச் சொந்தமான 5 விமானங்களில்,
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐ-போன்களை இடமாற்றம் செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், அதிக வணிகத்தை மேற்கொள்ளும் இந்தியா
உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு அதிக வரியை விதித்து வருகிறார்.
அதிக வரி வசூலிக்கும் இந்தியா, சீனா, மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பை
ஏப். 5 முதல் அமலுக்குக் கொண்டுவந்தார். இதன்படி இந்த நாடுகளில்
இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும்.
மேலும், இந்தியா மீது 27% வரி விதிக்கும் டிரம்ப்பின் அறிவிப்பு
ஏப்ரல்- 9 முதல் அமலுக்கு வரும் நிலையில், முன்கூட்டியே
ஐ-போன்களை அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றுள்ளது ஆப்பிள் நிறுவனம்.
வரி விதிப்பில் இருந்து தப்பிக்கும் வகையில் தற்காலிகத் தீர்வை அந்நிறுவனம் எடுத்துள்ளது. அதாவது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐ-போன்களை அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்ல ஆப்பிள் முடிவு செய்துள்ளது. அதன்படி ஆப்பிள் நிறுவனம், முதற்கட்டமாக 3 விமானங்களிலும், பின்னர் 2 விமானங்களிலும் முழுக்க
ஐ-போன்களை எடுத்துச் சென்றுள்ளது.
திருத்தப்பட்ட வரி விதிப்பால் சர்வதேச வணிகக் கொள்கைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில்,
- அமெரிக்க சந்தைகளில் சில்லறை விற்பனையில் எந்தவித மாற்றங்களையும் கொண்டுவந்துவிடக் கூடாது என்பதற்காக ஆப்பிள்
இந்த முயற்சியை எடுத்துள்ளது.
இது தற்காலிகத் தீர்வாக இருக்குமே தவிர, நிரந்தர தீர்வாக அமையாது எனவும் ஆப்பிள் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஐ-போன்கள் அமெரிக்காவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால், இந்திய பயனர்கள்
முன்பை விட, கூடுதல் விலை கொடுத்து ஐ-போன்களை வாங்க
வேண்டிய சூழல் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.
( செய்தி – https://www.dinamani.com/trade/2025/Apr/08/apple-ships-iphones-from-india-to-avoid-us-tariffs )
…………………………………………….



நிஜமான சாமியாரா இல்லை ….