………………………………………………………

………………………………………………………….
…………………………………………………………
……………………………………………………………………………………………………………………………………………………………………..
………………………………………………………

………………………………………………………….
…………………………………………………………
……………………………………………………………………………………………………………………………………………………………………..
Very difficult to assess the situation in TN. With current associates, even though anti incumbency votes are there, DMK alliance will get 40 plus percentage. I feel பத்திரிகைகள் விலைபோனது போல, அனைத்து எதிர்ப்பு இயக்கங்களும், ஜாக்டோஜியோ உட்பட, விலைக்கு வாங்கப்பட்டு திமுக தேர்தலைச் சந்திக்கும். என் அனுமானத்தின்படி, 15-10 சதவிகித வாக்குகளை அதிமுக-பாஜக வைத்திருக்கும். புதிய இளைஞர்கள் விஜய்க்கு வாக்களித்தாலும் தவெக 7 சதத்தைத் தாண்டும் என்று நம்பவில்லை. 5 சதம் இருக்கலாம். நாம் தமிழர் 6-7 சதம். இப்படி எதிர்கட்சிகள் சிதறிக்கிடக்கிறது.
பாஜக அதிமுக கூட்டணி workout ஆகும் என்று எனக்குத் தோன்றவில்லை. அண்ணாமலைக்குப் பிறகு, அதிமுக வாக்குகள் திமுகவுக்குப் போகலாமே தவிர பாஜகவிற்கு வராது, பாஜக வாக்குகள் அதிமுகவிற்குப் போகும். இதுலதான் அண்ணாமலை தவறு செய்துவிட்டார்னு நான் நினைக்கிறேன். தனித்து பாஜகவுக்கு 20 சதத்திற்கு மேல் வாக்கு வர இன்னும் இரண்டு தேர்தலாவது ஆகும் என்று எனக்குத் தோன்றுகிறது. அதனால் அதிமுக மீது சாஃப்டாக அண்ணாமலை இருந்திருந்திருக்கலாம்.
அதிமுகவிற்கு எடப்பாடிதான் இப்போது கதி. வேறு யாரையும் அதற்கு தலைவராக நினைத்துப்பார்க்க முடியவில்லை. ஓபிஎஸ், சசிகலா கும்பல் எல்லோருமே gone cases. TTV வேலைக்காகாது. கூட்டணிக்கு எடப்பாடி நம்பிக்கைக்குரியவர் அல்லர் என்பதுதான் என் எண்ணம். ஆனால் அதிமுகவிற்கு அவர் மாத்திரமே ஒரு சாய்ஸ். இதனால்தான் இறைவனின் ஏற்பாடாகவே (எம்ஜிஆர், ஜெ வளர்த்த கட்சி), சசிகலா எடப்பாடியை முன்னிறுத்தியது.
அண்ணாமலை, பாஜகவை தனித்து வளர்ப்பதற்காக இரண்டு கழகங்களையும் தூர ஒதுக்கி இரண்டையும் விமர்சித்துவந்திருக்கிறார். அதனால் அவரால் திமுகவிற்கு எதிராக எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று சொல்லமுடியுமா? தெரியவில்லை. அண்ணாமலை, ஹெச் ராஜா போன்ற ஒரு சிலரைத் தவிர உருப்படியான தலைவர்கள் தமிழக பாஜகவில் இல்லை. முருகன், தமிழிசை போன்றவர்களால் பாஜக தமிழகத்தில் வளராது. நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்திருந்தால் அர்த்தம் இருக்கிறது. சட்டமன்றத்திற்கு எதற்கு? பாஜக தனித்து நின்றால் வாக்கு சதவிகிதத்தைத் தக்கவைத்துக்கொள்ளலாம் இல்லை அதிகரிக்கலாம். திமுக கொள்ளையடித்தால் என்ன கெட்டுவிட்டது? மக்கள் அதற்கு வாக்களித்தால், திமுக கொள்ளையடிக்கட்டும் என்று நினைப்பதாகத்தானே அர்த்தம்?