…………………………………………..

…………………………………………..
கொஞ்சம் பொறுமையும் நேரமும் இருந்தால் – நிறைய சுவாரஸ்யங்கள் ….
………………………………………….
ஜெயலலிதா அவர்களின் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்தபோது ஏற்பட்ட வித்தியாசமான அனுபவங்கள் …விஜயகுமார், ஐபிஎஸ்
…………………………………………..
.
……………………………………………………………………………………………………………………………….



Encounter என்பது அப்படி யோசிக்க வேண்டிய விஷயமா? என்கவுண்டர் செய்யாவிட்டால், சட்டத்தின் சந்து பொந்துகள் வழியாக எத்தனை குற்றவாளிகள் தப்பிவிடுகிறார்கள்? பணமும் அதிகாரமும் இருந்தால், வாய்தா மேல் வாய்தா, கீழ்கோர்ட், மேல் கோர்ட் என்று படியேறித் தப்பிவிடுகிறார்களே… பிச்சைக்காரனாக இருந்தவன் பத்தாயிரம் கோடி சொத்து சேர்த்துவிடுகிறான், 1 லட்ச ரூபாய் தவறில் மாட்டினால், வெறும் 1 லட்சம் என்று விட்டுவிடாமல், கடுமையான தண்டனையை கோர்ட் வழங்கி, மேல் முறையீடு என்றெல்லாம் காலத்தைக் கடத்தாமலிருந்தால், ஏன் என்கவுண்டர் வேண்டும் என்ற எண்ணம் பொதுமக்களுக்கு வரப்போகிறது?
அதுபோல, அமெரிக்காவில் இருப்பதுபோல, குற்றத்திற்கு, அதன் ஆழத்தைப் பார்த்து, 300 வருடங்கள், 1000 வருடங்கள் என்று தண்டனை கொடுத்தால்தான் சரியாக இருக்கும். இல்லையென்றால் இவன் பிறந்தநாள், அவன் செத்த நாள் என்று சாக்கிட்டு குற்றவாளிகளை அந்த அந்தக் கட்சி அரசுகள் விடுதலை செய்துவிடுகின்றன.
வீரப்பன் கேஸையே எடுத்துக்கொள்ளுங்கள்…அவன் என் சாதி என்று ஒரு கட்சி ஆதரவுக்கு வந்துவிடுகிறது, அதற்குப் பயந்து இன்னொரு கட்சியும் அவன் மீது கை வைக்க யோசிக்கிறது. சமூகக் குற்றவாளிகளைத் தண்டிப்பதில் அரசு யோசிக்காமல் தைரியமாகச் செயல்படவேண்டும் ஜெ. அவர்கள் செய்ததுபோல. இரும்புப் பெண்மணி என்று சும்மாவா சொன்னார்கள்?