……………………………………………………..

……………………………………………………..
.
……………………………………………………………………………………………………………………………………….
……………………………………………………..

……………………………………………………..
.
……………………………………………………………………………………………………………………………………….
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

[…] […]
நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
நீங்க ‘எஸ்கேப்’ னு தலைப்பு வச்சிருக்கீங்க. இப்போ கார்த்தி சிதம்பரம் நிலைல நான் இருந்திருந்தேன்னா, இந்தப் பேட்டிக்கே ஒத்துக்கொண்டிருக்க மாட்டேன். வேற வழியில்லைனா, சோனியா குடும்பத்திற்கு ஆதரவாகப் பேசியிருப்பேன் (அது அர்த்தமில்லாதது என்று தெரிந்திருந்தாலும்). தமிழக காங்கிரஸ் தலைவராக இவர் ஆகாததற்குக் காரணம், காந்தி குடும்பத்திற்கு இவர் ‘ஜால்ரா’ இல்லை என்ற சந்தேகம் இருப்பதால்தான்.
இப்போ பாருங்க… ராகுல் காந்தி, மோடிக்கு எதிரான போட்டியாளரா இருப்பாரா என்ற கேள்விக்கு, கார்த்திக்கு, ‘உண்மையைச் சொல்றதா’ இல்லை ‘புளுகி தன் விசுவாசத்தைக் காண்பிக்கறதா’ என்ற மனக் குழப்பத்தில் சரியாக பதில் சொல்லலை. இப்படி இருந்தால் எப்படி தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்கும்?
To be frank, கார்த்திக் ஓரளவு லாஜிக்கலாகவும், எந்தப் பிரச்சனையிலும் ‘தன் பார்வை’ என்று ஒன்றை வைத்துக்கொண்டும்தான் பேசுகிறார். இப்படிப் பேசுவது, மேலிடத்திற்கு நெருக்கமாக ஆன பிறகு, சரியாக இருக்கும். இப்போதோ, ராகுலுக்கு இவரைப் பிடிக்கவில்லை. (முன்பு திமுகவைப் பிடிக்காமல் இருந்த மாதிரி… திமுகவை வெறுத்த மாதிரி). அந்த எண்ணம் ராகுலுக்கு மாறினால்தான் இவர் தமிழக காங்கிரஸ் தலைவராக ஆக முடியும்.
On the subject of Modi, மக்களுக்கு அதிருப்தி வந்தால், எந்த இமேஜும் யாரையும் காப்பாற்றாது. ஆனானப்பட்ட ஜெயலலிதாவை ஊர்பேர் தெரியாத சுகவனம், காமராஜரை ஸ்ரீநிவாசன் என்பவர் வெற்றிபெற்றது போல, மோடியைத் தோற்கடிக்கவேண்டும் என்றால், ஒன்று அவர் பேரில் மக்களுக்கு அதிருப்தி வரணும், இல்லையென்றால் அவருக்கு எதிராக நிற்கும் கட்சிகளின் கூட்டணி மேல நம்பிக்கை வரவேண்டும். இண்டி கூட்டணியில், 25 கட்சிகள்ல, எத்தனைபேர் மக்களுக்கு நன்மை செய்யணும், ஊழல் செய்யக்கூடாது என்ற எண்ணம் கொண்ட கட்சிகள்? ஊழல் பெருச்சாளிகள் ஒன்று சேர்ந்தால், மக்கள் கட்டுச் சோற்றைக் கொடுப்பார்கள் என்று நம்புகிறார்களா?