…………………………………………………

…………………………………………………..
ரெய்டுகளின் விளைவு வெறும் அபராதம் மட்டுமே என்றால் கொள்ளை கும்பல்களுக்கு பயம் எப்படி வரும் ..?
ஆ … நான் பார்க்காத ரெய்டா என்று தில்’லாக சவடால் விடுகிறார்கள் …
இதை அடக்க ரெய்டுகளின் விளைவு கடுமையானதாக
இருப்பது மிக மிக அவசியம்.
ரமேஷ் சொல்வதை நான் 100 % ஆதரிக்கிறேன்.
………………………………………………………………………………………………………………………



//ரெய்டுகளின் விளைவு கடுமையானதாக// – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜி லஞ்சம் வாங்கி, வேலை கொடுக்க முடியாததால் திரும்பவும் லஞ்சம் வாங்கின பணத்தைக் கொடுத்துவிட்டார் ஆகவே அவர் குற்றமற்றவர் என்று தீர்ப்பு சொன்னது. இப்படி நீதிமன்றங்கள் நீதிக்காகப் பாடுபட்டால், எத்தனை ரெய்டுகள் நடந்தாலும் குற்றவாளிகளை ஒன்றுமே செய்ய இயலாது என்று பலர் எழுதுகின்றனர். (சமீபத்தைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் இதனைக் குறிப்பிட்டிருக்கிறது.)
எனக்கென்னவோ ஸ்டாலின் மற்றும் குடும்பம் வசமாக செந்தில் பாலாஜியின் வலையில் சிக்கியிருப்பதாகத்தான் தோன்றுகிறது. அதனால்தான் தலைமை எச்சரிக்கை விட்ட பிறகும், ரெய்டு நடக்கும் இடங்களில் திமுகவினர் இடையூறுகளைச் செய்கிறார்கள், அதற்கேற்றபடி சைலேந்திரபாபு, தமிழகம் அமைதிப்பூங்கா என்று அறிக்கை கொடுக்கிறார்.