ஜெயலலிதாவின் திறமையை பாராட்டுகிறார் சவுக்கு சங்கர் ….!!!

…………………………………..

…………………………………….

.

…………………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to ஜெயலலிதாவின் திறமையை பாராட்டுகிறார் சவுக்கு சங்கர் ….!!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    என்னவோ சவுக்கு சங்கர் ஆதாரங்களோட பேசறார். ஆனால் ஊடகங்கள், ஸ்டாலின் அடுத்த பிரதமருக்கான போட்டியில் இருக்கிறார் என்ற ரேஞ்சுக்கு அள்ளிவிடுகின்றன. திமுக சம்பந்தப்பட்ட நெகடிவ் செய்திகள் ஒன்றுகூட வெளிவராமல் பார்த்துக்கொள்கின்றன. ராணுவ வீரர் தற்கொலை செய்துகொண்டார் என்று மட்டும் சொல்லத் துணியலை. எந்த சட்டம் ஒழுங்குப் பிரச்சனையையும் சொல்வதில்லை, அல்லது விவாதிப்பதில்லை.

    கோயபல்ஸ் பிரச்சாரம் தமிழகம் முழுக்க இந்தப் பத்திரிகையாளர்கள் நடத்திக்கொண்டிருக்கும்போது, வாக்காளர்களில் பெரும்பான்மை கையூட்டு பெற்றுக்கொண்டு வாக்களிக்கக் காத்திருக்கும்போது, (ஈரோடு கிழக்கு தொகுதி காணொளிகளைப் பார்த்தபிறகு இப்படி எழுதுகிறேன்), சவுக்கு சங்கர் போன்றவர்கள் உண்மையை உரக்கச் சொல்லுவதால் எத்தகைய விளைவு ஏற்படப்போகிறது?

    இப்போதுள்ள ஆட்சியாளர்களால் (ஏன் கருணாநிதி இருந்தபோதும்), ஜெயலலிதாவின் ஆட்சியை மிஞ்ச முடியவில்லை, அவருடைய நிர்வாகத் திறமைக்கும் கட்டுக்கோப்புக்கும் இணை வேறு யாரும் கிடையாது என்பதைத்தான் நிரூபிக்க முடிகிறது.

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    கேள்வி பதில் பகுதி வரலை. அதுக்கான கேள்வி.

    கம்யூனிஸ்டுகள், ராமதாஸ் போன்றோர் வேகவேகமாக ஆளுநரை, அவர் சொல்வதை எதிர்த்து அறிக்கை விடுவதற்கும், அதற்கும் ஒரு படி மேலே போய், கம்யூனிஸ்டுகள், ஆளுநர் வெளியில் நடமாட முடியாது என்று எச்சரிக்கை விடுவதற்குக் காரணம், திமுகவைக் குளிர வைத்து தேர்தல் செலவு என்ற பெயரில் கோடிகளை வரவு வைக்கவா? பாமகவுக்கு எப்படியாவது திமுக கூட்டணியில் சேர்ந்தால்தான் கட்சி தப்பிக்கும் என்ற எண்ணமா? இதற்கு ஏற்ற மாதிரி, திருமா, wanted ஆக, எடப்பாடி அவர்களைப் பார்த்து சால்வை போர்த்துகிறார், பாமகவை திமுக சேர்த்துக்கொண்டால், தான் எடப்பாடி காலில்தான் விழவேண்டியிருக்கும் என்றா?. உங்கள் அபிப்ராயம் என்ன?

  3. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    .

    புதியவன்,

    எங்கும் சுயநலம்…
    எதிலும் சுயநலம்… சுயலாபம்….
    இங்கு நாட்டைப்பற்றிய, தமிழ்நாட்டைப்பற்றிய
    அக்கறையோ, மக்களைப்பற்றிய கவலையோ –
    சற்றும் இல்லை…

    பாமக வுக்கு எப்படியாவது திமுக கூட்டணியில்
    சேர்ந்து விட ஆசை….

    அப்படி பாமக வந்துவிட்டால் திருமாவுக்கு
    எடப்பாடி கூட சேர ஆசை..(எடப்பாடி, எப்படியும்
    பாஜகவை கழட்டி விட்டு விடுவார் என்கிற நம்பிக்கையில்…)

    அதே சமயம் கூடவே, ராகுலுடன் ஒட்டிக் கொள்ளவும்
    பார்க்கிறார்…. ஒருவேளை காங்கிரசை – திமுக கழட்டி விட்டு
    விட்டால் (பாஜகவுக்கு அடிபணிந்து…) அப்போது காங்கிரசுடன்
    கூட்டு சேர ஆசை…

    ஆக – அடுத்த சில மாதங்களுக்கு, எல்லாரும் எல்லா பக்கமும்
    வாய்ப்புகளை எதிர்நோக்கி – தங்கள் தங்கள் கதவுகளை
    திறந்தே வைத்திருப்பார்கள்….

    இன்னும் கொஞ்ச காலம் போகட்டும்…
    இன்னும் நிறைய நடக்க இருக்கின்றனவே ….

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • bandhu's avatar bandhu சொல்கிறார்:

      /அப்படி பாமக வந்துவிட்டால் திருமாவுக்கு
      எடப்பாடி கூட சேர ஆசை..(எடப்பாடி, எப்படியும்
      பாஜகவை கழட்டி விட்டு விடுவார் என்கிற நம்பிக்கையில்…)/ அவ்வளவு ‘கொள்கை பிடிப்பு’ உள்ளவரா திருமா? பிஜேபி இருந்தாலும் சேர்ந்து ‘சனாதனத்தை வேரறுப்போம்’ முழக்கங்களை உள்ளே எடுத்து வைத்துவிட்டு ‘அடங்க மறு. அத்து மீறு’ முழக்கத்தை வெளியே எடுப்பார்கள்.

      இவர்கள் கொள்கைப்பிடிப்பு ராஜபக்ஷே வீட்டில் கை நனைத்தபோதே பல்லிளித்துவிட்டது!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.