….
….
….
….
கவிஞர் கண்ணதாசனுக்கும் மெல்லிசை மன்னர்
எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கும் இடையே இருந்த
நெருக்கம் – கண்ணதாசனுடன் தனக்கு ஏற்பட்ட
துவக்க கால அனுபவங்கள் இன்னும் பல மறக்க முடியாத
செய்திகள்….சிலவற்றை ஏற்கெனவே கேட்டிருந்தாலும் கூட –
மனதைத் தொடுகின்றன…
….
….
.
————————————————————————————–
உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது ஜி.எஸ்.மணி (கர்நாடக இசைப்பாடகர், அதற்கும் மேலாக எம்.எஸ்.வி அவர்களிடம் உதவியாளராக இருந்தவர்- 400 படங்களில் 170+ படங்களுக்கு) அவர்களின் காணொளிகளைக் கேளுங்கள். ரொம்பவே ரசனையுடன் இருக்கும். அவர் கண்ணதாசன் எம்.எஸ்விக்கு பாட்டு எழுத வந்தபோதெல்லாம் அனேகமாகக் கூட இருந்திருக்கிறார்.
அவர் சொல்கிறார், கண்ணதாசன், எங்கேயோ பார்த்து சுவற்றில் எழுதியிருப்பதை வாசிப்பதுபோலத்தான் பாடல்களுக்கான வரிகள் சொல்லுவாராம். அவ்வளவு தெய்வீக அருள் பெற்றவர் என்று குறிப்பிடுகிறார். (ஒரு உதாரணம் கொடுத்திருக்கிறேன். https://www.youtube.com/watch?v=U7esV4AWgu4)
கண்ணதாசன், கண்ணே கலைமானே என்ற பாடலை எழுதியபிறகு வெளியில் வந்தபோது, இதுதான் தனது கடைசிப் பாடலாக இருக்கும் என்றாராம்.