ஒரிஜினலும், டூப்ளிகேட்’டும் – நிஜமும்-போலி’யும் …


இந்தக் காலத்தில், பணம், பதவி, டெக்னாலஜி – துணையுடன்,
யார் வேண்டுமானாலும் தியாகி ஆகி விடலாம்… போராளியாகி விடலாம்.

‘போலி’கள் பெருகி விட்ட இந்த நாள் –

உண்மையான தியாகி, செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.அவர்கள்
மறைந்த நாளும் கூட. சுதந்திர போராட்ட காலத்தில்,
இந்திய மக்களின் சுயமரியாதையை வெளிப்படுத்தும் வகையில்
சுதேசிக் கப்பலோட்டிய அந்த வீரத் தியாகிக்கு
நம் அஞ்சலியை தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில் –

….

….

போலி’களை அடையாளம் காணவும் நம் மக்களுக்கு திறன் உண்டு
என்றும் காட்டுவோம்… இந்த இரண்டாவது காணொளி’யில் உள்ள
வேடதாரியை – பலருக்கு அடையாளம் தெரியாமல் இருக்கலாம்….

ஆனால் டெல்லிவாசிகளுக்கும் புதுச்சேரி மக்களுக்கும் அதிகம்
பரிச்சயமானவர் – என்று சொன்னால் எளிதில் புரிந்து விடும் …!

ஒரு வேளை இந்த வீடியோவை காண முடியவில்லையென்றால் – மன்னிக்கவும்…அவர்களுக்கு நீங்கள் காண கொடுத்து வைக்கவில்லை…!!!

தனியே ஒரு கர்சர் திறந்து, கீழ்க்கண்ட தளத்திற்கு சென்று முயற்சித்துப் பாருங்கள்….

அதிருஷ்டம் இருந்தால் காணக் கிடைக்கலாம்…!!!

youtu.be/r1pErwuTPmw

.
———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to ஒரிஜினலும், டூப்ளிகேட்’டும் – நிஜமும்-போலி’யும் …

  1. Mani's avatar Mani சொல்கிறார்:

    நான் கொடுத்து வைத்தவன் ஆனேன்…
    கண்டேன் வீடியோவை 🙂

    தனியே youtu.be/r1pErwuTPmw
    க்ளிக் செய்தால் கிடைக்கிறது.

  2. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    நானும் கண்டேன்.

    வெள்ளைக்காரன் காலத்தில் போலீசிடம் அடிபட்டு, உதைபட்டு, சிறைக்குப் போய், செக்கிழுத்து, நோயில் விழுந்து சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகமும் செய்த தீரர்கள் எங்கே –
    ஊழலை எதிர்க்கும் இயக்கத்தில் சேர்ந்து, எக்கச்சக்கமான விளம்பரங்களைப் பெற்று, பின்னர் சுயநலவாதத்துடன் ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து, முதலமைச்சர் பதவிக்கும் போட்டி போட்டு, தோற்றுப்போய், வெட்கம் சிறிதும் இல்லாமல் கொல்லைப்புறமாக வேறோரு பதவியில் அமர்ந்துகொண்டு,
    ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவர்
    மேக்கப் போட்டுக் கொண்டு வீடியோவில் தியாகியாகும் காமெடி எங்கே ?
    அசிங்கம்,

  3. Rajagopalan's avatar Rajagopalan சொல்கிறார்:

    கோபால்ஜி ஒரு நல்ல தேசபக்தர்; தெய்வபக்தர்.
    அவர் இந்த தீம்-க்கு வேறு பொருத்தமான ஒரு நபரை தேர்ந்தெடுத்திருக்கலாம்.
    அப்போது நன்றாக இருந்திருக்கும்.

  4. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    ஓ…! // அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கிறாரா புதுச்சேரி து.நி.ஆ…….!!!
    Posted on ஏப்ரல் 7, 2017 by vimarisanam – kavirimainthan
    // …… இந்த இடுகையை சிறப்பித்தாரே ஒரு அம்மணி … அவுகதானே …இவுக …?
    அசல்..அசல்தான், பாேலி…பாேலிதான்…!!

  5. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நன்றி செல்வராஜன்.

    “அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கிறாரா புதுச்சேரி து.நி.ஆ…….!!!” – கீழே

    https://vimarisanam.wordpress.com/2017/04/07/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88/

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  6. R.Gopalakrishnan's avatar R.Gopalakrishnan சொல்கிறார்:

    Sir, I am not so lucky to watch the 2nd video. pl. tell me is it rip or rlp or r1 p;

  7. R.Gopalakrishnan's avatar R.Gopalakrishnan சொல்கிறார்:

    Thanks Mr.KM

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.