…
…

…
காசு வாங்கினோம்… கச்சேரி பண்ணினோம் என்று நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் உண்டு. அதில் உயிரோட்டத்தை காண முடியாது.
தங்கள் இசையில், வாசிப்பில், தாங்களே லயித்து, ஆழ்ந்து அனுபவித்து
இயங்கும்போது, அந்த இசையில் ஒரு உயிர்த்துடிப்பை காண்கிறோம்.
அங்கே பாடுவது யார், இசைப்பது யார் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான்…
அத்தகைய ஒரு வித்தியாசமான இசை அனுபவம் கீழே –
…
….
இன்னொரு அனுபவம் இங்கே….
…
…
– “பச்சை மாமலை போல் மேனி.. பவளவாய் கமலக்கண்ணன் ” ….சிவாஜி எவ்வளவு அருமையாக ரசித்துப் பாடுகிறார் இல்லை…?
– வீடியோவை பார்க்கின்றவரை, சிவாஜியே பாடுவதாக நினைத்து தானே அனுபவித்துக் கொண்டிருந்தோம்….!!! – பாடியவர் டி.எம்.எஸ். என்கிற விஷயம் இப்போது இங்கே சொல்லும்போது தானே நினைவிற்கு வருகிறது…?
.
——————————————————————————



அய்யா …! கண்ணை மூடி காது திறந்து ரசிக்க மொழி தேவையில்லை … ! இரண்டுமே அற்புதம் … ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவர்கள் பாடியதை காணாத நமக்கு நடிகர் திலகம் உயிர்ப்பூட்டியது அரங்கன் அருளே …! நாட்டிய போராளி , ராஜசுலோச்சனா இருவரின் தலையசைப்பும் .. ஒன்றிக்கலந்த வெளிப்பாடும் அபாரம் … !!! வாரம் ஒருமுறை இடுகையின் இறுதியில் சிறு ஆன்மீக குறிப்பு அளித்தால் பயனுள்ளதாக இருக்கும் அல்லவா …?
செல்வராஜன்,
நீங்கள் சொல்வது சரியே…
நானும் அவ்வப்போது ஆன்மிக விஷயங்கள் குறித்தும்
எழுத முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
While the ‘westernized’ version of the song is good, it lacks the devotional feel inherent in ‘MS version’. What to say about Sivaji & TMS combination! Just out of the world experience!