திரு.நிதிஷ்குமாரின் வித்தியாசமான ” யோகா பல்டி “…!!!

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து
சொந்த வசதிக்கேற்ப அடிக்கடி தளம் மாறும்
பீஹார் முதலமைச்சர் திரு.நிதிஷ்குமார் எடுத்த முடிவை
அழகாக சித்தரித்திருக்கிறார் ஹிந்து ஆங்கில நாளிதழின்
கார்ட்டூனிஸ்ட் திரு.சுரேந்திரா ….

நண்பர்களின் பார்வைக்கு அந்த கார்ட்டூன் – கீழே –

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to திரு.நிதிஷ்குமாரின் வித்தியாசமான ” யோகா பல்டி “…!!!

  1. தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

    கார்ட்டூன்ல, சிந்திக்கவேண்டிய ஒரு விஷயமும் இருக்கு. ராகுல் காந்தி தலைமையை மற்ற கட்சிகள் RECOGNIZE செய்வதில்லை. அதாவது அவர் இன்னும் குழந்தைப்பையனாகவே மதிக்கப்படுகிறார். அதே சமயம் காங்கிரஸ்தான் எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்தக்கூடிய வாய்ப்பு உள்ள கட்சி. அதனால் வேறு வழியில்லாமல் சோனியா காந்தி அவர்கள் LIME LIGHTல் வரவேண்டிய தேவை இருக்கிறது. அதனால் IMAGE பாதிப்படையாமல் இருக்க, ‘As I am suffering from fever’ என்று லீவு லெட்டர் கொடுத்துவிட்டு இத்தாலியை நோக்கி நடையைக் கட்டிவிட்டார் ராகுல் காந்தி. சோனியாவிற்குப் பிறகு காங்கிரஸ் என்ன கதியாகப்போகிறதோ.

    அரசனை நம்பி புருசனைக் கைவிட்டாரா, அல்லது முதல் புருஷனை நம்பி தற்போதைய புருஷனைக் கைவிட்டாரா நிதீஷ் என்பதைக் காலம்தான் உணர்த்தும்.

    • சிவம்'s avatar சிவம் சொல்கிறார்:

      //அரசனை நம்பி புருசனைக் கைவிட்டாரா, அல்லது முதல் புருஷனை நம்பி தற்போதைய புருஷனைக் கைவிட்டாரா நிதீஷ் என்பதைக் காலம்தான் உணர்த்தும்.//
      அய்யா தமிழன், நீங்கள் தப்பாக யோசிக்கிறீர்களோ என்று தோன்றுகிறது.

      நிதிஷ்குமார் நீங்கள் நினைக்கின்ற மாதிரி அல்ல.
      ஒரே சமயத்தில் இரண்டு புருஷன்களை வைத்திருக்க முயற்சி செய்கிறார்.
      இரண்டு பேரையும் spare list-ல் வைத்துக் கொள்ள முயற்சிக்கிறார்.
      அவ்வப்போது தேவைக்கெற்ப இருவரில் ஒருவரை பயன்படுத்தி கொள்கிறார். அது அந்த இரண்டு புருஷர்களுக்கும் தெரிந்தே தான்
      நடக்கிறது. அவர்களுக்கும் சொரணை இல்லை. ஒரேயடியாக இல்லை
      என்பதற்கு பதில் எப்போதாவது இவர் கிடைத்தாலும் அவர்களுக்கு சரியே.
      வெட்கங்கெட்டவர்கள்.

  2. selvarajan's avatar selvarajan சொல்கிறார்:

    அய்யா ….! இடுகையின் தலைப்பு அருமையாக இருக்கிறது ….
    // திரு.நிதிஷ்குமாரின் வித்தியாசமான ” யோகா பல்டி “…!!! // இதெல்லாம் சும்மா காமெடி சமாச்சாரம் …. ஆனால் திரு அருண் ஜெட்லீ அவர்களின் வித – விதமான வித்தியாசமான ” அல்வா கிண்டி” கொடுப்பதையும் நாம் மறக்கலாமா ….. அதனால் ….

    // நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அல்வா கிண்டி விருந்தளித்தார்! பட்ஜெட் அச்சடிக்கும் பணி தொடங்கியது! // http://www.dinamalarnellai.com/cinema/news/3788 …. இருட்டுக்கடை அல்வா போன்ற எத்தனையோ விதமான அல்வாக்களை கேள்விப்பட்டு — ருசித்தும் இருப்போம் — ஆனாலும் நமது நிதி அமைச்சர் இதுவரை கிண்டி நமெக்கெல்லாம் { மக்களுக்கு எல்லாம் } கொடுத்த அல்வாக்களை போல ” சுதந்திர இந்தியாவில் ” யாருமே தயாரித்து அளித்திருக்க முடியாது என்கிற உண்மையை யாருமே மறைக்க முடியாது …..

    தற்போது ஜி.எஸ்.டி . அல்வா பொதுவான விற்பனைக்கும் — விவசாயிகளுக்கு என்று விசேஷமான ” அல்வா ” கொடுத்து இருக்கின்ற வேளையில் — கார்போரேட்டுகளுக்கு ஸ்பெஷல் அல்வாவும் தந்து அவர்களை மென்மேலும் குஷி படுத்துவதுதான் அவரது தனி சிறப்பு … அதுபற்றி ஒரு செய்தி : — Posted Date : 13:26 (21/06/2017) Last updated : 16:11 (21/06/2017)
    // ‘விவசாயிகளும்… கார்ப்பரேட்டுகளும்… ’எங்களுக்குக் கொஞ்சம் புரிய வையுங்கள் மிஸ்டர் அருண் ஜெட்லி! #Analysis #VikatanExclusive //

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.