இப்போது தினமும் திருப்பதியில் லட்சக்கணக்கானவர்கள்
கூடுகிறார்கள். சில நாட்களில் தரிசனம் செய்ய 18-20
மணி நேரங்கள் கூட ஆகின்றன. எக்கச்சக்கமான
தங்கும் விடுதிகள், போக்குவரத்து வசதிகள். உலகிலேயே
பணக்கார கோவில் என்கிற பெருமையுடன் இலவச
சாப்பாடு, இலவச லட்டு, இலவச தங்குமிடம் எல்லாம்…
இதே திருப்பதி, 100 வருடங்களுக்கு முன்னர்
எப்படி இருந்தது …? பக்தர்கள் எப்படிப் போய்
வந்தார்கள் ..? கூட்டம் இருந்ததா …?
50-55 வருடங்களுக்கு முன்னர் கூட
நான் போயிருக்கிறேன்.லேசாக நினைவில் இருக்கிறது..!
ஆனால் 100 வருடங்கள் …?
இந்த கருப்பு வெள்ளை புகைப்படங்கள் சொல்லுகின்றன
அந்த சரித்திரத்தை …..!!
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று
எனக்கு கிடைத்த புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு என
இங்கே பதிவிடுகிறேன் –




















அற்புதமான புகைப்படங்கள். இதில் மகாதேவார கோபுரா படம் மட்டும் பிற்காலத்திய புகைப்படம் போல இருக்கிறது.. அதில் இருப்பவர்கள் உடைகள் மற்ற புகைப்படங்களுடன் சேரவில்லை.
எவ்வளவு எளிமையான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறோம்!
ivai yellaam indiadivine.org la irundha yedutheengalaa?
என் தாத்தா, பாட்டிக்கு காட்டினேன்.இரண்டு பேரும் மலரும் நினைவுகளில் மூழ்கி விட்டார்கள். என் அப்பாவிற்கு ஒரு வயதில் திருப்பதியில் முதல் மொட்டை போட்ட கதை எல்லாம் தெரிய வந்தது.இரண்டு பேரும் உங்களை பாராட்டிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களை சந்தோஷப்படுத்தியதற்காகவும் இந்த மாதிரி விஷயங்களை எங்கேயிருந்தாவது தேடியெடுத்து கொண்டு வந்து கொடுப்பதற்காகவும் உங்களுக்கு மிக்க நன்றி காவிரிமைந்தன் சார்.
thanks. beautiful. simple people. simple life.
காணக்கிடைக்காத அபூர்வப் படங்கள். பாதசாரிகள் மலை ஏறும் பாதை, காடு, மலை, சன்னிதி வீதி, கோவில், கோபுரம் என்று ஒரு நூற்றாண்டு பின்னோக்கி அழைத்துச்சென்றுவிட்டீர்கள். மனம் அள்ளும் காட்சிளுக்காக மனமார்ந்த நன்றிகள், காவிரிமைந்தன்.
-ஏகாந்தன்
http://aekaanthan.wordpress.com
அருமையான பதிவு.
நன்றி.