மானமிகு வீரமணி அவர்களுக்கு சமர்ப்பணம் !


மானமிகு வீரமணி அவர்களுக்கு சமர்ப்பணம் !

இன்றைய தினம் (23/11/2009) தினமலர் நாளிதழில்
5-ம் பக்கத்தில், ஒரு மூலையில், ஒற்றைப்பத்தியில்,
முக்கியத்துவம் இல்லாமல் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு
செய்தி கீழே –


அதான் முக்கியத்துவம் இல்லாத செய்தி என்று நீங்களே சொல்லி
விட்டீர்களே – பின் அதைப்பற்றி என்ன பேச்சு என்று கேட்பீர்கள் !

திருமதி ராஜாத்தி அம்மாள் அவர்கள் அரசியலில் இல்லை.
அவர் பதவிப்பொறுப்பு  எதையும் வகிக்கவில்லை. பின்னர் அவர்
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சென்றதை தினமலர் செய்தியாகப்
போடுவானேன் ?

பழுத்த பகுத்தறிவாளரான கலைஞர் கருணாநிதி தன் துணைவியார்
இப்படி  கோவிலுக்குச் செல்வதை எப்படி
அனுமதித்திருப்பார்  என்று  யோசிக்கிறீர்களா ?

துணைவியார்  அவரிடம் அனுமதி கேட்டிருப்பார்  என்று
நினைக்கிறீர்களா ?
அனுமதி கேட்டிருந்தால் கிடைத்திருக்கும் என்று
நினைக்கிறீர்களா ?

அனுமதி கிடைக்கவில்லை என்றால், அவர்
நம் சென்னை தாய்க்குலங்களைப்
போல “கம்முனு கெட” என்று சொல்லி விட்டு
போயிருப்பார் என்று  நினைக்கிறீர்களா ?

முன்பு மாரியம்மன் கோவில் தீமிதி விழாவில்
கலந்துகொண்டு விட்டு
திமுக  மாவட்டச் செயலாளர்  கலைஞரிடம்
வாங்கிக்கட்டிக்கொண்டது  நினைவுக்கு வருகிறதா ?

“ஊருக்கு தான் உபதேசம் – உனக்கு இல்லை பெண்ணே”
என்கிற வழக்கு  நினைவுக்கு  வருகிறதா ?

பகுத்தறிவுக் கவிஞர்  கனிமொழி அம்மையார்
தன் மகனுக்கு  எப்படி “ஆதித்யன்” என்கிற  வடமொழிப்
பெயரை சூட்டினார்  என்று எண்ணுகிறீர்களா ?

கவிஞர் கனிமொழி அம்மையாரும் தன் மகன்
நல்ல  பக்திமானாக  வளரட்டும் என்று நினைத்து
அனுப்பி  இருப்பார்  என்று  தோன்றுகிறதா ?

உங்களுக்கு  இது போன்ற கேள்விகள்  எல்லாம் தோன்ற
வேண்டும் என்று  தான் தினமலர் இந்த செய்தியை
வெளியிட்டிருக்கும்  என்று இப்போது  தோன்றுகிறதா ?

ஆனால்,  எனக்கென்னவோ, இது இனமானத்தலைவர்
“மானம்”மிகு திரு வீரமணி  அவர்களுக்காகவே
வெளியிடப்பட்ட  செய்தி என்று தான் தோன்றுகிறது !!

நாளையே  இது  ஒரு  பிரச்சினையானால் அவர் தானே
வக்காலத்து  வாங்கியாக வேண்டும் ?  அது தானே
வழக்கம் ?  அது தானே  அவருக்கு இடப்பட்ட  பணி ?

என்னவோ போங்கள். யோசித்து யோசித்து  மண்டை
குழம்புகிறது – இந்த செய்தியை …. படிக்காமலே
இருந்திருக்கலாம்…..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in ஆத்திகன், கருணாநிதி, சிதம்பரம், நடராஜர் கோவில், நாகரிகம், பக்திமான், புரட்சி, Uncategorized and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to மானமிகு வீரமணி அவர்களுக்கு சமர்ப்பணம் !

  1. ரோஸ்விக்'s avatar ரோஸ்விக் சொல்கிறார்:

    நல்லா கேட்டீங்க….கேளுங்க ..கேளுங்க ..கேட்டுக்கிட்டே இருங்க…என்றாவது ஒரு நாள் அவங்களுக்கு கேக்குதான்னு பார்ப்போம்…. 🙂

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.