தாமதிக்கப்படும் தீர்ப்பு …..

………………………………………….

…………………………………………

தாமதிக்கப்படும  தீர்ப்பு –         மறுக்கப்படும்  தீர்ப்பு !!

எத்தனை  நீதி மன்றங்கள் ?        எத்தனை   வழக்குரைஞர்கள் ?
இருந்தும்   ஏன்  லட்சக்கணக்கில் முடிக்கப்படாத  வழக்குகள் ?
தீர்ப்புகள்  வருடக்கணக்காக  இழுத்தடிக்கப்படும் நிலை  ஏன் ?
தாமதிக்கப்படும்  தீர்ப்பு   மறுக்கப்பட்ட தீர்ப்பு என்பது  சட்டம்   படித்தவர்களுக்கு 

தெரியாதா ?  பின்  ஏன் இந்த   நிலை ?

சுயநலம்  –  அப்பட்டமான  சுயநலம்.       வருடக்கணக்காக  ஒத்திவைப்புகள் (வாய்தா)  கொடுக்கப்படுவதேன் ? 

 3 ஒத்தி வைப்புக்களுக்கு மேல்  அனுமதிக்க முடியாது  என்று  நீதிபதிகள்  வழக்குகளை  தொடர்ந்து  நடத்தி முடிக்க முடியாதா ?

தங்கள்  வரும்படி  தொடர்வதற்காகவே  வாய்தா  வாங்கும்  வழக்கறிஞர்களுக்கு  நீதிபதிகளும் ஒத்துழைப்பு  அளிப்பது  ஏன் ?

கட்சிக்காரர்களிடம் வழக்கறிஞர்கள் வாங்கும் சம்பளத்திற்கு (துவக்கத்திலும், பின்னர்  ஒவ்வொரு வாய்தாவின் போதும், பின்னர்  வழக்கு  முடிவடையும்போதும் ) யாராவது – என்றாவது –  ஒப்புகைச்சீட்டு (ரசீது) கொடுப்பது உண்டா ?    

இதுவரை  எந்த  வழக்கறிஞர் வீட்டிலாவது,   அலுவலகத்திலாவது,   என்றாவதுவருமான வரி  அதிகாரிகள் சென்று சோதனை  செய்ததாக கேள்வியாவது பட்டிருக்கிறோமா ?

–   ஏன்  ?        என்று   மாறும் இந்த நிலை ?

“இன்னும்  எத்தனை  காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே -சொந்த நாட்டிலே ? 

நம் நாட்டிலே ? ” –  என்று   நாமக்கல்  கவிஞர் பாடி  60  ஆண்டுகளுக்கு மேல்  ஆகியும்

எந்தவித முன்னேற்றமும் இல்லையே !

வாய்தாவுக்கு வாய்தா  வருமானம் என்பதை தடை செய்து, 

ஒரு வழக்கு முழுவதற்குமான  ஒரே சம்பளம் என்றும்,

வழக்கறிஞர்கள்  வாங்கும்  பணத்திற்கு உரிய ரசீது கொடுக்க வேண்டும் என்றும்சட்டம் கொண்டு வரமுடியாதா ?


3 வாய்தாவிற்கு பிறகு மேற்கொண்டு நீட்டிக்கப்படாமல்  வழக்கு  தொடர்ந்து  நடத்தி முடிக்கப்பட வேண்டும்  என்று    தீர்மானிக்க  முடியாதா ?


வருமானத்தையே  குறியாக  கொண்ட  வழக்குரைஞர்  மத்தியிலிருந்து   நீதிபதிகளை நியமிக்காமல் – மூத்த -முதிர்ந்த அனுபவம் கொண்ட சட்டக்கல்லூரி   பேராசிரியர்களை  நீதிபதிகளாக  நியமிக்கக் கூடாதா?

ஏன்  முடியாது ?   எல்லாமே  முடியும்  –  மனம்  இருந்தால் !
யாருக்கு  ?    அதிகாரத்தில்  இருப்போர்க்கு !! 

 

………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to தாமதிக்கப்படும் தீர்ப்பு …..

  1. kannan's avatar kannan சொல்கிறார்:

    best sir

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.