பிரிட்டிஷ் ” செல்லுலார் ஜெயில்….” அனுபவங்கள்….

………………………………………….

………………………………………….

……………………………………………..

“காலா பாணி” (சிறைச்சாலை…) என்று 1996-ல்
தமிழிலும், மலையாளத்திலும் ஒரு படம் வந்தது.
பிரபல மலையாள நடிகர் மோகன்லால் சொந்தமாகத் தயாரித்திருந்தார். இயக்குநர் ப்ரியதர்ஷன் ….
இசை – இளையராஜா ……
ஒளிப்பதிவு -சந்தோஷ் சிவன் …

மோகன்லால், பிரபு, தபு – நடித்தது…!

1910 -வாக்கில், பிரிட்டிஷ்
ஆட்சிக்காலத்தில், சுதந்திர போராட்ட பின்னணியில் நடந்ததாக ஒரு கதை….

அற்புதமான படம்…. ஆனால் … படம் Super Flop… ஓடவில்லை…!!!
இந்த படத்தைப் பார்த்த அனுபவம் எனக்கு இன்னமும் அப்படியே நினைவில் இருக்கிறது.

திருச்சி, காவேரி திரையரங்கில் படம் வெளியாகி இருந்தது.
வெள்ளிக்கிழமை ரிலீசான படத்தை, தவிர்க்க முடியாத வேலைகள்
காரணமாக அந்த வார இறுதியில் பார்க்க கூடவில்லை… ..
சரி இப்போது தானே ரிலீஸ் ஆகியிருக்கிறது…அடுத்த ஞாயிறு அவசியம் பார்த்து விடலாம் என்றிருந்தேன்.

நான் வசித்து வந்த இடம், திருச்சி நகரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் இருந்தது. அப்போதெல்லாம் (1996) – இரவு நேர பஸ்கள் கிடையாது.

சினிமா பார்ப்பதாக இருந்தால், பகல் காட்சி பார்த்தால் தான் வீடு திரும்ப
முடியும்.

வியாழக்கிழமை மதியம், எதேச்சையாக திருச்சி நகரிலிருந்து வரும்
தொழிற்சாலை ஊழியர் ஒருவர் சொன்னார்… சிறைச்சாலை(காலாபாணி) படத்தை அன்றோடு தூக்குகிறார்கள். படம் ஃப்ளாப் என்று.

எனக்கு மனம் கேட்கவில்லை. படத்தின் பின்னணி எல்லாம் எனக்கு
ஏற்கெனவே தெரியும். எனவே உணர்வுபூர்வமான அந்த படத்தை பார்க்க மிகவும் ஆவலாக இருந்தேன்…

சரி.. எப்படியும் அன்றிரவே – 10 மணி காட்சி போய் விடுவது என்று
தீர்மானித்தேன். கூட யாராவது வருவார்களா என்று நண்பர்களிடையே விசாரித்து பார்த்தேன்…. நாராயணன் என்று ஒரு நெருங்கிய நண்பர் – அவருக்கு அந்த அளவு ஆர்வம் இல்லாவிட்டாலும், எனக்கு கம்பெனி
கொடுப்பதற்காக கூட வருவதாகச் சொன்னார்.

அதே போல் இரவு 10 மணி காட்சி பார்த்துவிட்டு,
வெளியே வந்தபோது, அதிகாலை 2 மணி… மறக்க முடியாத படம்…!
மனம் முழுவதுமாக உணர்ச்சி வசப்பட்டிருந்தது.

தெருவில் – ஈ, காக்கை இல்லை…!!!
காவேரி(பாலக்கரை) திரையரங்கிலிருந்து மத்திய பேருந்து
நிலையம் வரை, இருவரும் நடந்தே வந்தோம்.

இரவு சொச்ச நேரம் முழுவதும் அங்கேயே ஒரு டீக்கடை வாசலில் (டீ, பிஸ்கட்டுடன்), படத்தில் வந்த சுதந்திர போராட்ட கால சூழ்நிலைகளைப் பற்றியே பேசிக்கொண்டிருந்து விட்டு, அதிகாலை நாலே முக்கால் மணிக்கு முதல் பஸ்ஸை பிடித்துக்கொண்டு வீடு வந்தோம்…. (காலை ஏழரை மணிக்கு வழக்கம்போல் அலுவலகம்…! )

ஆக, இந்த திரைப்படத்தை பார்க்க, இரவு பூராவும் கண் விழித்திருந்தது –
இன்னமும் நன்கு நினைவிருக்கிறது.

நல்ல கலைப்படங்கள், தேசபக்தி திரைப்படங்கள்
எல்லாவற்றிற்கும் இங்கு இது தான் கதி.
சிவாஜியின் கப்பலோட்டிய தமிழனையே பல தியேட்டர்களில்
முதல் வாரத்தோடு தூக்கி விட்டார்களே…
!!!

சிறைச்சாலை திரைப்படத்திலிருந்து
நண்பர்களுக்காக, ஒரு சாம்பிள் காட்சி கீழே …..

…………………

………………………………………………………………………………………………………

100 வருடங்களுக்குப் பிறகு, இந்த காலா பாணி சிறைச்சாலை இப்போது – சுதந்திர இந்தியாவில் – எப்படி இருக்கிறது… என்பதைக் காட்டும் ஒரு வீடியோ…

கீழே காணொளியில்…


—————————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக