மின்னுவதெல்லாம் பொன்னல்ல … !!!

……………………


……………………

வீட்டில நிம்மதியே இல்லப்பா.

என் ஆசையை, கனவை

புரிஞ்சிக்கறதே இல்லப்பா .

ஒரு எந்திரம் போல என் லைப்

ஏன் பொறந்தோம்னு இருக்குனு சொல்லிட்டு,

முகநூல் வந்த பிறகு தான் தனக்கு ஆறுதலாய் பலரது போஸ்ட்

இருப்பதாக சொன்னார்.

அதன் பிறகு முகநூல் மூலம் அவருக்கு சில நட்பூக்கள் கிடைத்ததாம்.

அவர்களிடம் தன் மனதில் உள்ள ஏக்கத்தை ஆசாபாசங்களை குடும்ப கஷ்டங்களை பகிர்ந்து கொள்வாராம்.

அவருக்கு ஆறுதலாய் நிறைய போஸ்ட் போட்டு

அவரின் அந்தரங்கம் முதல் அனைத்தையும் கேட்டறிந்து பழகிய ஒரு நண்பர்,

மெசேன்ஜர்,

வாட்ஸ்ஆப்,

போன்கால் என பேசி பழகி தற்போது சந்திக்க அழைப்பதாகவும், இப்போதெல்லாம் அவர் நடத்தையில் மாற்றம் இருப்பதாகவும் வேதனை பட்டுக்கொண்டார்.

அவருக்கு நான் என்ன ஆறுதல் சொல்ல முடியும் என திணறிப் போனேன்….

……………

ஆயிரமாயிரம் ஆறுதல்களும் அறிவுரை அனுபவங்களும்

அறிவியல் சார்ந்த உலக விஷயங்களும் ஆன்மீகமும் இங்கே நிறைந்து கிடப்பது என்னவோ உண்மை தான்.

அதற்காக முகநூலிலேயே வாழ்வின் அத்தனை முழுமையும் கிடைத்து விடும் என்று நினைப்பது தவறு .

….

இங்கே அடுத்தவரை கவரும் விதமாய் தான்

எல்லோருமே பதிவுகளை பதிவிடுகிறாராகள் என்பது தான் மறுக்க முடியாத உண்மை …..

ஒருஉண்மையை சொல்கிறேன்.

முகநூலில் வரும் பதிவுகளை வைத்து

இவர்கள் எல்லாம் கண்ணியவான்கள் தான் என்று நினைப்பது பெரும் தவறு.

எல்லா மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் இருக்கிறது.

சந்தர்ப்பம் வாய்த்தவன் மட்டும் – தன் மிருகத்தை வெளிக்காட்டி விடுகிறான்.

அவ்வளவே.

வெகு சிலரே சமுதாயத்தின் முன் நல்ல மனிதனாய், நல்ல குணவானாய் வாழ வேண்டும் என தன் மிருகத்தை வெற்றிகொள்ள,இறைமை, அன்பு சமூகம் என வாழ்கிறார்கள்.

அப்படி பட்ட வெகு சிலரை முகநூலில் அத்தனை எளிதாய் நம்மால் இங்கே அடையாளம் காண்பதும் அரிதே.

நம்மோடு நாளும் சேர்ந்து வாழும் நம் குடும்ப உறவுகளையே நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை, ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவர்களோடு ஆயிரம் பிரச்சனைகள்.

அப்படி இருக்க ஒருவரின்முகம் தெரியாமல், குணம் தெரியாமல், அவர்களின் பழக்கவழக்கம் எதுவுமே தெரியாமல், அவர்கள் பதிவுகளை பார்த்து அவர்களிடம் உங்கள் அந்தரங்கம், குடும்ப பிரச்சினைகளை பேசாதீர்கள்.

இது கவலைகளை மறக்க ஒரு இடமே தவிர,

கவலைக்கு இங்கேயே தீர்வு கிடைக்கும் என நம்புவது முட்டாள் தனம்.

பக்கத்தில் இருந்து வாழும் போது,

கூட இருப்பது கடவுளே என்றாலும் சலிப்பும் ஒருவித விரக்தியும் எல்லோருக்குமே வரும் தான்.

அதுதான் மனித இயல்பு .

எது கிடைக்கவில்லையோ

எதைப் பார்க்க முடியவில்லையோ

அதற்காய் ஏங்கி,

கிடைத்ததையும் ஏற்று அனுபவிக்க தெரியாமல்

இப்படி திக்கி திணறும்

நட்புகளே புரிந்து கொள்ளுங்கள்.

முகநூல் – நம் கவலைகளை

சிறிது நேரம் மறந்து சந்தோஷம்

காணும் இடம் மட்டும் தான்.

இங்கே பதிவுகளை பார்த்து படித்து அறிவையும் அனுபவத்தையும்

வளர்த்து கொள்ளுங்கள்.

இங்கே உங்கள் பிரச்சினைகளுக்கான

தீர்வு கிடைக்கும் என நம்பி

எல்லோரிடமும் குடும்ப விஷயங்களை

பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

……………

இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும்தான்

விழிப்புணர்வோடு இருங்கள்

எச்சரிக்கையாக இருங்கள்

வலைத்தள தொடர்புகளோடு – பாதுகாப்பாக இருங்கள்.

இதுவும் ஒரு வலைத்தளம், ஒர் முகநூல் – கற்றுக்கொடுக்கும் பாடமே …..!!!

…………………………………………………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.