ரஷ்யாவில் உள்நாட்டுப்போர் … ??? “வாக்னர்” ப்ரிகோஜின் – அதிபர் புடின் – விரோதத்தின் – LOGICAL END ….?

…………………………………………..

……………………………………………..

வில்லன் யார்…… ஹீரோ யார்….?

…………………………………………..

……………………………………………

……………………………………………………………………..

“வாக்னர்” குழுவும் அதன் BOSS யெவ்ஜெனி ப்ரிகோஜினும் …
(Yevgeny Prigozhin) …

இந்த வாக்னர் குழு, புடினின் சொந்த தனியார் ராணுவம் என்றும்,
புடின், தனக்கு நெருக்கமானவர்களை கொண்டு இதனை உருவாக்கி
அதனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்றும்
சொல்லப்படுகிறது. சர்வதேச அளவிலான போர் கட்டுப்பாடுகள்
காரணமாக, ரஷ்ய ராணுவத்தால் செய்ய முடியாமல் போகும்
சட்ட விரோத நடவடிக்கைகளை இந்த வாக்னர் குழு மூலம் புடின்
செய்து வந்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

உக்ரைனுக்கு எதிரான போரிலும் கூட ரஷ்யா ராணுவத்தால்
செய்ய முடியாத சில சட்டவிரோத செயல்களை வாக்னர் ஆயுதக்
குழுவினர் விளாடிமிர் புதினுக்காக செய்துள்ளது. இக்குழுவினர்
நவீன ஆயுதங்களை சிறப்பாக கையாளும் பயிற்சி பெற்றவர்கள்.
மேலும் ஆயுதங்கள் இன்றி தனித்தும் போரிடும் திறனும்
கொண்டவர்கள். ஈவு, இரக்கமின்றி கொடுக்கப்பட்ட அசைமென்டை நிறைவேற்ற வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருக்கும்
இந்த குழுவினர், `கொடூர கொலைக்காரர்கள்’ எனவும் அழைக்கப்படுகின்றனர்.

வாக்னர் குழுவில் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள்,
சிறை சென்று திரும்பியவர்கள் உண்டு. அதுமட்டுமின்றி
தண்டனையிலிருந்து தப்பிக்க நினைப்பவர்கள் கூட வாக்னர்
குழுவில் இணைந்து தப்பித்துக் கொள்வதுண்டு. முன்னதாக
உக்ரைனின் பக்முத்தில் வாக்னர் குழுவை இறக்கி தங்கள்
படைகளுக்கு பெரும் சேதத்தை ரஷ்யா ஏற்படுத்தியதாக உக்ரைன் குற்றஞ்சாட்டி இருந்தது ….

2022 முதல் இக்குழு ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பை நடத்தி
வருகிறது. இக்குழுவில் தற்போது 50,000க்கும் மேலான வீரர்கள்
உள்ளனர் என்கிறார்கள். தொடக்கத்தில் ரகசிய குழுவாக
இருந்தபோது, வாக்னர் குழுவில் 5000 வீரர்கள் மட்டுமே இருந்தனர்.

2015-க்கு பின்னர் இந்த குழு சிரியா, லிபியா, ஆப்பிரிக்கா,
மத்திய கிழக்கு நாடுகளில் உள்நாட்டுக் கிளர்ச்சிகளில் அரசுக்கு
ஆதரவாக களம் இறக்கப்பட்டது. அதாவது, உலகில் உள்நாட்டு போர்
நடக்கும் இடங்களில் இவர்கள் கூலிப்படையாக செயல்படுவார்கள்.
யார் நிதி அளிக்கிறார்களோ அவர்களுக்கான போரிடுவார்கள்.
வாக்னர் குழு, ஆப்பிரிக்க தங்கச் சுரங்க நகரத்தைக் கட்டுப்படுத்த
பாலியல் வன்கொடுமை மற்றும் மாஸ் படுகொலைகளை மிக
சாதாரணமாக செய்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

வாக்னர் ஆயுதக் குழுவினர் பெரும்பாலும் ரஷ்ய அரசாங்கத்துடன்
இணைந்த படைகள் அல்லது ஆதரவு படைகளுடனே சண்டையிட்டு
வந்தனர். வாக்னர் குழுவினர் அவர்கள் நிலைநிறுத்தப்பட்ட
பகுதிகளில் போர்க்குற்றங்களை இழைத்துள்ளனர். அதில் பாலியல் வன்கொடுமை,கொள்ளைகள் மற்றும் கொடூர சித்திரவதை
ஆகியவை அடங்கும்.

இதுநாள் வரையில் ரஷ்யாவுக்கு ஆதரவாக
செயல்பட்டு வந்ததால், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து
ராணுவ தளவாடங்களை பெற்றிருக்கிறது இந்த வாக்னர் குழு.
மேலும் பயிற்சிக்காக அரசின் அமைப்புகளை பயன்படுத்தி
வந்திருக்கிறது. அதாவது, ரஷ்ய ராணுவ ரகசியங்களை நன்கு அறிந்த
வாக்னர் குழு தற்போது ரஷ்யாவுக்கே எதிராக திரும்பியுள்ளது…..!

இப்போது என்ன நிலை…?

ரஷ்ய – உக்ரைன் போரில் வாக்னர் ஆயுத குழுவிற்கு பெரும் பங்கு
உண்டு. இந்நிலையில் வாக்னர் ஆயுத குழுவின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின்-க்கும்(Yevgeny Prigozhin), உக்ரைன் போரில் பணியாற்றிய ரஷ்ய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் சிலருக்கும்
ஏற்பட்ட பகை தற்போது கிளர்ச்சியாக வெடித்துள்ளது.

உக்ரைனின் முக்கிய பகுதிகளை 0கைப்பற்ற உதவிய வாக்னர் குழு
மீது ரஷ்ய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாக, வாக்னர் குழுவின் தலைவர் ப்ரிகோஜன் குற்றம் சாட்டியுள்ளார். `உக்ரைனில்
முகாமிட்டிருந்த தங்கள் படைகள் மீது ரஷ்ய ராணுவ ஏவுகணை
தாக்குதல் நடத்தி 2000-க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளதாக ப்ரிகோஜன் புதிய குற்றச்சாட்டை முன்வைத்தார்.

……………

……………

யெவ்ஜெனி ப்ரிகோஜன் பேசியதாக வெளியான ஆடியோவில்,
“நாங்கள் 25,000க்கும் மேற்பட்டோர் இருக்கிறோம். சாகவும் தயாராக இருக்கிறோம். ரஷ்யாவை எதிர்க்க இது போதுமானவை அல்ல என்றாலும், ரஷ்ய அதிபர் புதினுக்கு இது ஒரு சவாலாக இருக்கும். ரஷ்ய ராணுவத்தின் தலைமையை வீழ்த்துவோம். எங்கள் படைகள் ரோஸ்டோவ் நகருக்குள் நுழைந்து விட்டது. மேலும், 3 ரஷ்யா ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்தி விட்டோம். ராணுவ கட்டுப்பாட்டு மையத்தை எங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம். எங்களின் வழியில் எந்த தடை வந்தாலும்,
அதனை தகர்ப்போம்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும் வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜன், ரஷ்ய அதிபர் புதினை ஆட்சியிலிருந்து நீக்க சபதம் எடுத்துள்ளார்.

இதற்கிடையே , ப்ரிகோஜன் வெளியிட்டுள்ள அனைத்து தகவல்களும்
பொய் என்று ரஷ்ய ராணுவம் கூறியுள்ளது. மேலும் ரஷ்ய ராணுவம்
சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ப்ரிகோஜன் மீது கிரிமினல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவரின் தூண்டுதலின் பேரில்
யாரும் சிக்கிக் கொள்ள வேண்டாம். வாக்னர் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் ரஷ்ய ராணுவத்திற்கு திரும்பலாம்” என்று
குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்ய ராணுவத்தின் விளக்கம் ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் பாதுகாப்பை பலப்படுத்தும் வேலையில் இறங்கி உள்ளது ரஷ்ய அரசு.
ரஷ்ய தலைநகரான மாஸ்கோ உட்பட பல முக்கிய நகரங்களில்‌
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாஸ்கோவில் தீவிரவாத
தடுப்பு நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. பல முக்கிய நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அச்சத்தின் காரணமாக நகரில் பெருமளவில்
மக்கள் இடம் பெயர்தல் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ப்ரிகோஜனின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து
ரஷ்ய அதிபர் புதின் அந்நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அவர்,
“வாக்னர் ஆயுத குழுவினர் கிளர்ச்சியில் ஈடுபடுவது முதுகில் குத்தும்
செயல். கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள குழுவினர் மீதான நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும்” என்று எச்சரித்தார். இதனைத் தொடர்ந்து
சென்ட் பீட்டர்ஸ் பெக்ஸ் நகரில் உள்ள வாக்னர் குழுவின் தலைமையகம் மூடப்பட்டது. இதற்கு பதிலளித்த வாக்னர் குழு, `விரைவில் ரஷ்யா
புதிய அதிபரை காணும்’ என்று திகில் பரப்பியது.

………………………………….

………………………………….

ரஷ்ய ராணுவத்தினரின் பெரும் பகுதியினர் உக்ரேன் போரை
தொடர்வதில் விரும்பவில்லை…. எனவே, ப்ரிகோஜினுடன்
சேர்ந்து கொள்ள ரஷ்ய ராணுவத்தின் பெரும்பகுதியினர்
தயாராக இருக்கிறார்கள் என்று சில செய்திகள் தெரிவிக்கின்றன. ஒருவேளை ப்ரிகோஜினின் மாஸ்கோ வரை வந்தால், ரஷ்ய ராணுவத்தில் பல பிரிவுகள் அவருடன் சேர்ந்து கொள்ளக்கூடும்…. இது புடினுக்கு பேராபத்தை விளைவிக்கும்.

இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டிருக்கும்
ட்விட்டர் பதிவில், ” தீய வழியைத் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொருவரும் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறார்கள். வேறொரு நாட்டின் வாழ்க்கையை அழிக்க துருப்புக்களை அனுப்பினார். அவர்கள்
உயிருக்காக பயந்து தப்பி ஓடுவதையும் தடுக்க முடியாது. ரஷ்யாவின் பலவீனம் வெளிப்படையானது. ரஷ்யா தனது துருப்புக்களையும் கூலிப்படைகளையும் நம் நிலத்தில் எவ்வளவு காலம் வைத்திருக்கிறதோ, அவ்வளவு குழப்பம், வலி ​​மற்றும் பிரச்னைகள் பின்னர் அவர்களுக்கே ஏற்படும்.” எனத் தெரிவித்திருக்கிறார்.

விளைவுகளைக் கண்டு நடுக்கம் கொண்ட புடின், தன் நண்பரான
பெலாரஸ் அதிபரை – வாக்னர் குழுவின் தலைவரான ப்ரிகோஜனினை
சமாதானப்படுத்தி, அவரது எதிர்ப்புகளை முடிவுக்கு கொண்டு
வரும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்… ப்ரிகோஜனின் மீது
அறிவிக்கப்பட்ட கைது மற்றும் சகல கிரிமினல் நடவடிக்கைகளையும்
ரத்து செய்வதாகவும் புடின் அறிவித்திருக்கிறார்…..

துரதிருஷ்டவசமாக—
வாக்னர் குழுவின் நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது
நிறுத்தப்பட்டு விட்டன. ( தற்காலிகமாக – என்று நம்புவோம் ..!!!)

பெலாரஸ் அதிபரின் வேண்டுகோளை ஏற்று, ப்ரிகோஜனின்
தனது எதிர்ப்பு நடவடிக்கைகளை கைவிட்டு விட்டு, சமாதான
பேச்சு வார்த்தைக்காக பெலாரஸ் சென்று கொண்டிருக்கிறாரென்று சில செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால், இன்னும் அவர் பெலாரஸ் சென்றடைந்ததாக தகவல்
ஏதுமில்லை…. பெலாரஸ் அதிபர், புடினை விடவும் மோசமான நபர்.
எனவே, ப்ரிகோஜனின், அவரை எந்த அளவிற்கு நம்பலாம்
என்பது கேள்விக்குறியே…

உக்ரேன் போர் முடிவுக்கு வர வேண்டுமானால் –
இந்த பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைய வேண்டும் ….
ப்ரிகோஜின் மூலம் ரஷ்யாவில் உள்நாட்டுப்போர் தொடர வேண்டும்.

தொடருமா ….???

.
……………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to ரஷ்யாவில் உள்நாட்டுப்போர் … ??? “வாக்னர்” ப்ரிகோஜின் – அதிபர் புடின் – விரோதத்தின் – LOGICAL END ….?

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    உக்ரைன் போர், ரஷ்யாவுக்குப் பெரும் பின்னடைவு. ஆயுதத்தால் எந்த நாட்டையும் வீழ்த்திவிட முடியாது. புதின் இப்போது பணிந்து வாக்னர் குழுவினுடன் சமாதானமாகப் போய்விடுவார். ஆனால் நிச்சயம் ப்ரிகோஜன் எப்போதாவது மர்மமான முறையில் கொல்லப்படுவார் என்றே தோன்றுகிறது. புதினின் ஈகோ அப்படி.

    இந்தப் போரை எப்படி கௌரவமாக நிறுத்துவது என்று புதினுக்குத் தெரியவில்லை. இல்லையென்றால் எப்போதோ போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கும். இப்போ வெறும் ஈகோவிற்காக யுத்தம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

  2. பழையவன்'s avatar பழையவன் சொல்கிறார்:

    //வாக்னர் குழுவில் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள்,
    சிறை சென்று திரும்பியவர்கள் உண்டு. அதுமட்டுமின்றி
    தண்டனையிலிருந்து தப்பிக்க நினைப்பவர்கள் கூட வாக்னர்
    குழுவில் இணைந்து தப்பித்துக் கொள்வதுண்டு. //
    வாக்னர் குழு நம் நாட்டுக் கட்சி ஒன்று போல உள்ளதே….

  3. Karthikeyan Palanisamy's avatar Karthikeyan Palanisamy சொல்கிறார்:

    அய்யா வேற நாட்டில் உள்நாட்டு போர் நடக்கனும்னு நீங்க ஏன் விரும்புகிறீர்கள்….

  4. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


    Karthikeyan Palanisamy,

    காரணம் ரொம்ப சிம்பிள் நண்பரே.
    ரஷ்யாவில் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்தால்,
    உக்ரேனில் சண்டை நிற்கும்.

    உக்ரேனில் சண்டை நின்றால்,
    உலகம் நார்மலுக்கு வந்து விடும்…!!!

    சரி தானே….?

    .
    வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.