…
…

…
இன்னொரு சம்பவம்….
என் நண்பர் ஒருவரின் உறவினர்…
“அப்பு மாமா” –
ரெயில்வேயில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.
நல்ல உயரம், தடிமன், திடகாத்திரமானவர்..
நல்ல தோற்றம், களையான முகம் –
பார்க்க கம்பீரமாக இருப்பார்….
தீவிர ஆஞ்சநேய பக்தர்….
வீட்டில் இல்லாத நேரங்களில் எல்லாம்
அவருக்கு பழக்கமான அந்த ஹனுமார் கோவிலில் தான் இருப்பார்.
பூஜை, பஜனை – என்று எல்லாவற்றிலும் ஈடுபாடு உண்டு.
மிக நல்ல, அமைதியான மனிதர்…
நானும் அவரை நீண்ட காலமாக அறிவேன்.
எப்போதாவது எதேச்சையாக சந்திப்பது உண்டு…
அவருக்கு 78-79 வயது இருக்கும்போது,
ஒரு நாள் திடீரென்று பக்கவாதம் தாக்கியது.
உடம்பின் ஒரு பக்கம் முற்றிலுமாகச் செயல்படவில்லை.
வாய் கோணிக்கொண்டது… பேச்சு சுத்தமாகப் போய் விட்டது.
தனியாகச் செயல்பட முடியவில்லை….
எல்லாவற்றிற்கும் யாராவது உதவ வேண்டும்.
இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து – நிலைமை இன்னமும்
மோசமாகியது. இடுப்பிற்கு கீழே இயக்கமே இல்லை.
நினைவு உண்டு; பார்வை நன்றாகவே இருந்தது;
காதும் நன்றாக கேட்டது… ஆனால் பதிலுக்கு பேச முடியாது…
அவரால் ஒரு இன்ச் கூட சுயமாக நகர முடியாது.
பொம்மை மாதிரி உட்கார்த்தி வைத்த இடத்திலேயே இருப்பார்.
75 கிலோ பொம்மை.
தன்னைச்சுற்றி நிகழ்வது எல்லாவற்றையும் பார்க்க முடியும்;
கேட்க முடியும்; உணர முடியும்… ஆனால்,
பதிலுக்கு எந்தவிதத்திலும் re-act பண்ண முடியாது;
அவரால் சுதந்திரமாக எதையுமே செய்ய முடியாது…
பாத்ரூம் கூட போக முடியது….
இதே நிலையில் சுமார் 11 வருடங்கள் இருந்தார்….
எவ்வளவு கொடுமையான விஷயம்…?
அவருக்கும், அவரை கவனித்துக் கொள்பவருக்கும்…!
அவருக்கு குழந்தைகள் எதுவும் கிடையாது…
அவருடைய மனைவி தான் எல்லாவற்றிற்கும்…
11-12 ஆண்டுகள்…. இவருக்கு பணிவிடை செய்தே
அந்த அம்மா பாதி நோயாளியாகி விட்டார்….
ஆறு மாதங்கள் முன்னதாக ஒருவழியாக அப்பு மாமா
போய்ச்சேர்ந்தார். 12 வருடங்கள் அவரை இப்படியொரு
கொடுமையான நிலையில் வைத்திருந்தது எது…?
—————————————
இது இன்னொரு கொடுமை…..
இது சில வருடங்களுக்கு முந்தைய அனுபவம்…
இந்த வீடு எங்களுக்கு அருகாமையில் இருந்தது…
எங்கள் வீட்டிலிருந்து பார்த்தால் –
அவர்கள் வீடு நன்றாகத் தெரியும்.
எனக்கு சில வருடங்களாக சுமாராக அறிமுகமான குடும்பம்…
கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள்..
கணவன் 50 வயதுக்கு அருகே இருந்தார்.
மனைவி அவரை விட 4-5 வயது குறைவாக இருப்பார்…
கணவன் ஒரு தனியார் அலுவலகத்தில் பணி புரிகிறார்.
நன்றாக சம்பாதிக்கிறார்…
சொந்த வீடு – ஏசி, ஃப்ரிட்ஜ், டிவி, கார்…. என்று
வீட்டில் எந்த வசதிக்கும் குறைவில்லை.
குழந்தைகள் நல்ல பள்ளியில் படிக்கிறார்கள்.
கணவனுக்கு ஒரு கெட்ட பழக்கம்.
நிறைய குடிப்பார்….
எனக்கு நிறைய சிநேகிதர்கள் உண்டு…
அவர்களில் குடிப்பவர்களும் உண்டு.
பொதுவாக எல்லாருக்கும் ஒரு அபிப்பிராயம் உண்டு.
குடிப்பவர்கள் எல்லாரும் கெட்டவர்கள் …
குடித்து விட்டு கலாட்டா செய்பவர்கள்…
சண்டை போடுபவர்கள் என்று…
இது ஒரு தவறான அபிப்பிராயம்…
குடி, மனிதனின் சிந்தனையை, செயலை பாதிக்கிறது என்பது உண்மை.
ஆனால், குடிப்பவர்கள் – இயல்பில் நல்லவர்களாக இருந்தால் –
அவர்களால் மற்றவர்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படுவதில்லை.
இயல்பிலேயே நெகடிவ் குணங்கள் இருப்பவர்களுக்குத்தான்
குடிக்கும்போது, அத்தகைய குணங்கள் வெளிப்படுகின்றன…
அந்த ஆசாமி, துவக்க காலங்களில் வெளியே போய்
குடித்து விட்டு நடு இரவில் வீட்டுக்கு வருவான்..
சில காலம் கழித்து, வீட்டிலேயே ‘மினி பார்’ துவங்கி விட்டான்…
தினமும் குடித்து விட்டு, வீட்டில் ரகளை செய்வான்.
இரவு ஒன்பது மணிக்கு மேல் அவன் ஆட்டம் ஆரம்பமாகும்…
அதற்குள்ளாக அந்த பெண், அவனது மனவிவி,
குழந்தைகளுக்கு உணவு கொடுத்து,
தனி ரூமில் அழைத்துப் போய் படுக்க வைத்து விட்டு,
கதவையும் சாத்தி விட்டு வந்து விடுவாள்.
காரணமே இன்றி மனைவியுடன் சண்டை போடுவான்.
எதற்கெடுத்தாலும் சண்டை… கோபம்….
எதிரே நின்று கொண்டிருந்தால் தானே அடிக்கிறான் என்று
மறைவாக பூஜை அறையில் போய் பதுங்கிக் கொண்டால் –
எங்கேடி போனாய் நாயே என்று
கையில் கிடைத்ததை தூக்கி அங்கிருந்தே வீசி எறிவான்…
சோற்றுத்தட்டை வீசி அடிப்பான்.
காப்பி சூடாக இருந்தாலும் தவறு; ஆறி இருந்தாலும் தவறு…
டம்ளர் பாதி காப்பியுடனேயே எகிறும்…
பேசிக்கொண்டே இருப்பான்; பளாரென்று அறைந்து விடுவான்.
இத்தனைக்கும், அவனுக்கான பணிகள் அத்தனையையும்
பார்த்து பார்த்து, பயந்து பயந்து செய்வாள் அவன் மனைவி…
அவனுக்கு ஒரு அடிமை வேண்டுமென்றே, ஒரு படிக்காத,
அப்பாவியான, கிராமத்து ஏழைக்குடும்பத்து பெண்ணை கல்யாணம்
பண்ணிக் கொண்டிருக்கிறான்.
பகலில் எதிரே அவனைப்பார்க்க நேர்ந்தால், மரியாதையான
ஒரு புன்னகையுடன் சென்று விடுவான்…
இரவு ஆனால் அத்தனை அமர்க்களம் பண்ணுவது இவனா
என்று தான் தோன்றும்…
பல மாதங்கள் கவனித்த பிறகு,
மனம் பொறுக்காமல்,
ஒரு சமயம் அந்த பெண்ணிடம் கேட்டேன்..
“ஏம்மா… உன் வீட்டுக்காரரிடம் நான் வேண்டுமானால்
பேசிப்பார்க்கட்டுமா..” என்று…
பயந்து நடுங்கி விட்டாள் அந்த பெண்மணி…
கையெடுத்து கும்பிட்டு,
“தயவு செய்து அப்படியெல்லாம் எதுவும் செய்து விடாதீர்கள்…
என்னையும், குழந்தைகளையும் அடித்து வீட்டை விட்டு துரத்தி
விடுவார்…. இப்போது என்னை அடித்தாலும், உதைத்தாலும் –
சொந்தமாக வீடு இருக்கிறது….
குழந்தைகளுக்கு நல்ல படிப்பு கிடைக்கிறது.
வீட்டிற்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் வாங்கிப்
போடுகிறார்… பரவாயில்லை….குழந்தைகளுக்காக
நான் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்வேன்” – என்றாள்.
இவளைப்போல், நாட்டில் இன்னும் எத்தனையோ பெண்கள்…
முன் கோபி, சூதாடி, கெட்ட சகவாசங்கள் என்று குணம் கெட்ட
கணவர்களிடம் மாட்டிக் கொண்டு திண்டாடுகிறார்கள்….
இவர்களுக்கெல்லாம் வாழ்க்கையில் ஏது விடிவு….?
அத்தனை நல்ல குணங்களோடு, ஒளிமயமான
எதிர்காலத்தைப்பற்றிய பல கனவுகளோடு,
முன்னேறி நகர்ந்து கொண்டிருந்த வேணுகோபாலனை,
38 வயதில் சட்டென்று மாய்த்தது…..
78-79 வயதிலிருந்து 91 வயது வரை, 12 ஆண்டுகளுக்கு மேலாக,
நடைப்பிணமாக “அப்பு மாமா”வை வாழ வைத்தது….
கொடுமையான – கணவன்களோடு
வாழ்க்கை பூராவும் நாய் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கும்
லட்சக்கணக்கான பெண்களின் வாழ்வு –
எனக்குத் தெரிந்து இவர்கள் எல்லாருமே நல்ல மனிதர்கள் தான்.
இந்த ஜென்மத்தில் – அவர்கள்
எந்த பாவத்தையும் செய்திருப்பதாகத் தோன்றவில்லை.
பின் ஏன் அவர்களுக்கு இந்த கதி….?
இதெல்லாவற்றிற்கும் காரணம் “விதி”யா…? “கர்மா”வா…?,
இந்து தர்மம் இதைத்தான் கூறுகிறது…
ஆச்சாரியர்கள் இதைத்தான் கூறுகிறார்கள்…
ஆனால்……..மனம் ஏற்கவில்லையே….!
.
( அடுத்த பகுதியில் சந்திப்போம் ….)
இதன் முந்தைய பகுதியை பார்க்க –
.
————————————————————————————————————-



பிங்குபாக்: “மாயா” உலகம் – முடிவில்லாத கேள்விகள் ….(பகுதி- 1) | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்
விடை தெரியாத கேள்விகள் !
நீங்கள் சொன்னது போல் நிறைய இருக்கின்றன.
இது இந்த இடுகைக்கு தொடர்பில்லாதது.
இருந்தாலும், பொது நன்மைக்கு உதவும் என்பதால்,
கீழே பதிவிடுகிறேன்.
நண்பர் சேஷாத்ரியிடமிருந்து எனக்கு வந்த ஒரு மெயில் –
——————
Thanks for your mail. if possible publish this below info in your blog.
The following procedure I observed in Greece (bankrupted country)
for avoiding atm fraud.
whenever we are swiping the debit card at atm counter / or any pos counters the OTP with send to our registered mobile. without OTP matching we cannot withdraw. unless card and mobile took over with pin only possible to use it. why our banks are not thinking on this angle for providing more security.
then public will not blame the bank for a security breach.
Regards
Seshan
பிங்குபாக்: (பகுதி- 2) “மாயா” உலகம் – முடிவில்லாத கேள்விகள் …. – TamilBlogs
Respected Sir,
Pranams. I know a family. The parents are old age people. One son ( let us call him sundar). From young age sundar was not studying well, used to ran away from house and come back after sometime. Used to drink a lot, steal money. All bad habits one can have. Parents decided that sundar gets married, he will change.So somehow they got him married a girl ( Santhi)
For few years he was changing positive. But it didnt sustain for long. Again he picked up all bad habits. He used to drink a lot. Beat his wife. No children for this couple. Suddenly one day stroke attacked him. He couldnt talk properly. Diabates complaint also started. Slowly one by one all diseases started affecting him. The young lady santhi was taking care of the old in-laws and the bed ridden husband. No happiness in santhi’s life. This routine went on for around 10 years. The old parents are still there. Both are above 90+. The old man cannot even stand on his own.
But sundar died few years back at the age of 45. santhi after husband death started taking care of in-laws. She didnt see any happiness in her life at all…. Her parents side family like brothers and sisters were not helping her much.
one distant relative of her… a good pious man ( let us call him mani) who was working as a cook in catering service suggested santhi to marry again. Mani and his wife somehow found another cook who is 45 years above and convinced him to marry santhi. Mani felt that this lady has to start a new life. front ended this widow marriage and with lot of opposition got this lady married.
Santhi saw a new life and things were going well. But Mani who did this good deed of helping this lady died suddenly one day because of heart attack. He has two daughters…
Life is very uncertain. It just goes like “ufff…” it is gone. Nobody can predict what can happen. But in this uncertain world, we need to try to find order and peace…
I am 43 years now. if i live the same age as my father.. i have only 1400+ weekends to leave… How can i make every week fruitful, productive, beneficial to people around me… this one thought gives a whole new approach to the way we talk, eat, live and act.
Pranams
Srini
ஸ்ரீநி,
உங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி.
நீங்கள் சொல்லும் விஷயங்கள்…மனதை உருக்குகிறது.
வாழ்க்கையில் இந்த மாதிரி மனிதர்களை,
சம்பவங்களை எல்லாம் பார்க்கும்போது –
கடவுள் என்று ஒருவர் உண்மையில் இருக்கிறாரா…?
இருந்தால், இதையெல்லாம் அனுமதிப்பாரா…?
இப்படியெல்லாம் நடக்குமா…? என்றெல்லாம் கூட தோன்றுகிறது…
ஆனால், கொஞ்ச நேரம் கழித்து,
அப்படி ஒருவர் இருப்பதால் தான் உலகம்
இந்த அளவிற்காவது இயங்குகிறது என்றும் தோன்றுகிறது.
துன்பத்தையே அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள்
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும்,
கடவுள் எங்கிருந்தாவது ஒரு”மணி” யை
துணைக்கு அனுப்பி விடுகிறார் என்றும்
தோன்றுகிறது….
இந்த கட்டுரைத் தொடரில் மனததில் இருக்கும்
நிறைய விஷயங்களை எழுத வேண்டும் என்று
நினைத்திருக்கிறேன்.
அவை எனது இன்னொரு பக்கமாக இருக்கும்….
இதுவரை எனக்கு மட்டுமாக வைத்திருந்த பக்கம்…..
உங்களைப் போன்ற நண்பர்கள் இது போன்ற
அனுபவங்களை விவரித்து, இந்த தொடரின் வீச்சை,
பார்வையை இன்னமும் விரிவாக்க உதவலாம்.
இந்த கட்டுரைத் தொடரை எழுதத்துவங்கும்போது,
எப்போதும் காரசாரமான அரசியலை விரும்பிப் படிக்கும்
விமரிசனம் தள நண்பர்கள் எந்த அளவிற்கு
இதை வரவேற்பார்களோ என்கிற சந்தேகம் இருந்தது.
ஆனால், முதல் பகுதிக்கு கிடைத்த வரவேற்பு எனக்கு நம்பிக்கையூட்டுகிறது…தொடர்ந்து எழுத உற்சாகமூட்டுகிறது.
நன்றி ஸ்ரீநி.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Facebook © 2018
சித்தர்களின் குரல். is at Koneswaram temple.
3 hrs · Colombo, Sri Lanka ·
கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வையே இப்பதிவு.
1. நல்லவர்கள் ஏன் கஷ்டபடுகின்றார்கள்?
2. கெட்டவர்கள் ஏன் எல்லா நலன்களுடன்
வாழ்கின்றார்கள்?
3. ஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒருவனுக்கு ஏன் அதிக கஷ்டம் ஏற்படுகின்றது?
4. கர்மவினைகளை அனுபவித்துதான் தீர்க்க வேண்டுமா?
போன்ற பல கேள்விகளுக்கு முழுவிளக்கமே இப்பதிவு.
பதிவிற்குள் செல்வதற்குமுன் ஒரு கதையை பார்த்துவிடுவோம்.
சித்திரபுரம் என்ற ஊரில் சித்தன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்துவந்தான். அவன் குணத்தில் நல்லவனாகவும் சிறந்த பக்திமானாக
இருந்தபோதிலும் அவனுக்கு வாய்ந்த மனைவி கொடுமைக்காரியாக இருந்ததால் அவனது வாழ்க்கை மிகவும் கஷ்டத்திலேயே நகர்ந்தது.
வேலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களை தியானத்திலும் பிராத்தனையிலும் செலவிட்டான். எந்த அளவிற்கு அவன்
பக்தியில் மனதை செலுத்துகின்றானோ அந்த
அளவிற்கு அவனை கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டன.
அதே ஊரில் அவனுக்கு வித்தன் என்ற சூழ்ச்சி குணமுடைய பணக்கார நண்பன் இருந்தான்.
தனது இன்பத்திற்காக எந்த ஒரு
கொடுமையான செயலையும்
குணமுடையவனாக அவனிருந்தான்.
அவனுக்கு நல்ல குணமுடைய பக்தியில் சிறந்த மனைவியும் அமைந்திருந்தாள்.
இருப்பினும் அவனுக்கு கடவுள் நம்பிக்கை என்பது துளிகூட இல்லை. அவனுக்கு
சித்தனின் கடவுள் நம்பிக்கையை கேலி செய்வது என்பது வாடிக்கையான வேலை.
இதன் காரணமாக ஒரு கட்டத்தில்
இருவரிடையே சண்டையே வந்துவிட்டது.
கோபத்தில் வெகுண்டெழுந்த சித்தன் இறைவன்மீது தனது பக்தி உண்மையாயிருந்தால்
இன்னும் ஒரு வாரத்தில் நீ செய்த
தவறுக்கெல்லாம் தண்டனை அனுபவிப்பாய் என்று சாபமிட தொடங்கினான். சிரித்துக்
கொண்ட வித்தன் அப்படி நடக்கவில்லை என்றால் நீ ஆன்மீகத்தை கைவிட வேண்டும்
என்ற சவாலுக்கு இழுத்தான்.
இதற்கு ஒப்புக்கொண்ட சித்தன் தீவிரமான பிராத்தனையில் ஈடுபட்டான்.
போட்டியின் கடைசி நாளும் வந்தது. அந்த நாளில்
வித்தனோ காட்டிற்கு சென்று தேவைக்கு. அதிகமான பறவைகளையும்
விலங்குகளையும் வேட்டையாடி கொன்று விருந்திற்காக வீட்டிற்கு எடுத்து வந்து கொண்டிருந்தான். வரும்வழியில் களைப்பு
தாங்காமல் ஒரு மரதினடியில் ஓய்வெடுக்க உட்கார்ந்தான். உட்கார்ந்த இடத்தில் எதோ
உருத்துவதுபோல் இருந்ததனால் என்ன? என்று விலக்கி பார்த்தான். கணக்கிட முடியாத
செல்வம் அங்கு புதைக்க பட்டிருந்ததை பார்த்து, அதையும் மூட்டையாக கட்டிக்கொண்டு இரட்டை சந்தேஷத்துடன்
வீடு திரும்பினான். இதற்கிடையே வயலில் வேலை செய்துகொண்டிருந்த சித்தனை மாடு முட்டி கடுமையான காயங்களுடன்
படுத்தபடுக்கை ஆக்கிவிட்டது விதி.
இப்படி ஒரு முட்டாள் கணவனுடன் வாழ்வது
அசிங்கம் என்று சித்தனின் மனைவி
அவனைவிட்டு நீங்கினாள். தனது நிலையை நினைத்து உள்ளும் வெளியும் ஒவ்வொரு
நொடியும் அழுதே தீர்த்தான். தான் பட்ட அவமானத்தால் இனி வாழ்ந்து பயனில்லை
என்ற முடிவுக்கு வந்தான் சித்தன். உடல் ஊனத்தால் அவனால் தற்கொலை கூட செய்து
கொள்ள முடியவில்லை.
எப்படியோ எழுந்து தன் விட்டிற்கு பின்னடியுள்ள கிணற்றில்
குதித்தான். திடீரென்று தன்னை யாரோ தூக்குவது போல் உணர்ந்தான். ஆம் எந்த
தெய்வத்தை அவன் பக்தியுடன்
வணங்கினானோ அதே தெய்வம் அவனை காப்பாற்றி காட்சியும் கொடுத்தது. உடலாலும்
மனதாலும் அவதிப்பட்ட அவனுக்கு வணங்க
தோனவில்லை, மாறாக சண்டை போட தொடங்கினான். தனது ஆதங்கத்தையும்
ஆத்திரத்தையும் கொட்டி தீர்த்தான்.
அனைத்தையும் பொருமையுடன்
கேட்டுகொண்டிருந்த கடவுளோ அவனை தன்னோடு அனைத்து கொண்டார். அவனின்
அரவணைப்பால் சற்று ஆறுதல் பெற்றான் சித்தன். இப்பொழுது கடவுள் பேச தொடங்கினார், சித்தா நீ இப்பிறவியில் நல்லவனாக பிறந்திருந்தாலும் முன்பிறவியில்
வித்தனை விட கொடுமைகாரனாக இருந்தாய்.
நீ உன் மனைவியை மதித்தது கூட
கிடையாது. மாறாக வித்தனோ முன்பிறவியில் நல்ல காரியங்களையே செய்து வந்தான்,
அதனால் இப்பிறவியில் அவனுக்கு சகல நன்மைகளும் கிடைத்தது. மாறாக உனக்கோ நீ
செய்த பாவங்களை அனுபவிக்க நேரிட்டது.
என்னை அனுதினமும் நீ வணங்கியதால் நீ அனுபவிக்க வேண்டிய கர்மத்தின்
பெருபாலனவையை நானே ஏற்றுகொண்டேன்,.மாறாக நீயோ அதில் சிறு பகுதியையே
அனுபவிக்கின்றாய். ஆன்மீகத்தை தொடங்கும் ஒருவன் முதலில் அவனது பாவபதிவையே
அனுபவிக்க தொடங்கின்றான், மாறாக அக்கிரமங்கள் செய்யும் ஒருவனுக்கோ அவன்
செய்த புண்ணியங்களை அனுபவித்தபின் அவன் பாவபதிவுகள் செயல்பட தொடங்கும்.
வித்தனுக்கு கிடைத்த புதையலே
அவனுடைய கடைசி புண்ணிய பதிவாகும்.
அவன் செய்த அனைத்து புண்ணியங்களும்
ஒட்டுமொத்தமாக செயல்பட்டு அவனுக்கு புதையலாக கிடைத்தது. இதுவரை நீ
அனுபவித்த கஷ்டங்களில் உனது அனைத்து பாவங்களும் கரைந்துவிட்டன. இனி
நடக்கவிருப்பதை நீயே உன் கண்ணால் பார்த்து
தெரிந்து கொள் என்று சில
அறிவுரைகளையும் கூறி மறைந்தார் கடவுள்.
நாட்கள் செல்ல செல்ல சித்தனின் உடல்நிலை நலம் பெற தொடங்கியது. அவனது நெருங்கிய
உறவினருக்கு வாரிசு இல்லாததால் அவரது
சொத்துக்கள் அனைத்தும் சித்தனுக்கு கிடைத்தது. நல்ல குணமுடைய மனைவியும்
சித்தனுக்கு அமைந்தாள். அதே சமயத்தில் வித்தனுக்கோ வினோதமான ஒரு நோய் தாக்கி
படுத்தபடுக்கையாகி விட்டான். அவனது மனைவியும் திடீரென்று இறந்துவிட, அவன்
கூட இருந்தவர்கள் அவனை ஏமாற்றி அவன்
சொத்துக்கள் அனைத்தையும்
பரித்துக்கொண்டு வெளியே துரத்திவிட்டனர்.
தனது நண்பனின் நிலை அறிந்து வருந்திய சித்தன், வித்தனையும் தன் இல்லத்திலேயே
தங்க செய்து உதவினான்.
ஒருவன் எந்த செயலை செய்தாலும் அல்லது
நினைத்தாலும் அதற்குரிய பலனே வினை எனப்படுவது. அது நல்லதாக இருந்தால்
நல்வினை, தீயதாக இருந்தால் தீவினை.
ஆனால் இந்த வினைகளிலிருந்து தப்பிக்க.விதிவிலக்குகளும் உண்டு. அதுதான் “பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பை
ஏற்படுத்தி விடுவது”. இதை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒரு உதாரணத்தை
பார்த்துவிடுவோம்.
நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் மீது கல்லை எறிந்தீர்கள் என வைத்துக்கொள்வோம்.
இது நீங்கள் செய்த செயல். அது அவர் காலில் பட்டு இரத்தம் வந்துவிடுகின்றது. இதை
வினை என்று எடுத்துக்கொள்வோம். அந்த
இடத்திலிருந்து நீங்கள் தப்பித்து
ஓடிவிட்டீர்களானால் அந்த நிகழ்வுக்கான
எதிர்வினை செயல்படும்.
எப்படியென்றால்
நீங்கள் ஒரு தெரு வழியே செல்லும்போது
உங்கள் கால் ஒரு கல்லில் மோதி இரத்தம் வர வேண்டும் என்ற ஒரு விதி செயல்படும்.
நீங்கள் அந்த வழியே செல்லும்போது இந்த
கர்மவினையிலிருந்து தப்பிக்க நினைத்தால் அந்த கல்லில் உங்கள் கால் படாமல் செல்ல
வேண்டும். ஆனால் கர்மங்களிருந்து ஒருவன்
தப்பிக்க நினைக்கும்போது அதாவது அந்த கல்லை தாண்டி செல்ல முற்படும்போது ஒரு
மாடோ அல்லது வண்டியோ உங்களை குறுக்கே வந்து தள்ளிவிடும். முடிவாக கால்
பட வேண்டிய இடத்தில் தப்பிக்க
நினைத்ததனால் தடுக்கி விழுந்து அதே கல்லால் உங்கள் தலையில் அடிபட்டுவிடும்.
ஆனால் அவருக்கு அடிப்பட்ட உடனே அதற்காக
வருந்தி அவரிடம் மன்னிப்போ அல்லது மருத்துவ உதவி செய்து விடுகின்றீர்கள் என
வைத்து கொள்வோம். இங்கேயும் அதே கர்மவினைதான் செயல்படும்.
அதாவது நீங்கள் அந்த தெரு வழியே செல்லும்போது உங்கள்
கால் அந்த கல்லில் மோதி இரத்தம் வர வேண்டும் என்ற அதே விதிதான் செயல்படும்.
ஆனால் அது செயல்படும் விதம்தான் வேறு.
எப்படியென்றால் நீங்கள் அதே தெரு
வழியாகதான் செல்வீர்கள், ஆனால் உங்களை அறியாமல் மாட்டு சாணியிலோ அல்லது
சேற்றிலோ காலை வைத்துவிடுவீர்கள்.
இதனால் எந்த கல்லால் உங்கள் காலில் அடிபட வேண்டுமோ, அந்த கல்லில் உங்கள் காலில்
உள்ள சேற்றை துடைப்பதற்காக
தேய்த்துவிட்டு சென்றுவிடுவீர்கள். அதாவது
பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பை ஏற்படுத்திவிட்டு சென்றுவிடுவீர்கள். இதில்
அந்த பொருளுக்கும் உங்களுக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.
நீங்கள் செய்த செயலுக்கான விதிப்படி அந்த கல்லிற்கும் உங்கள் காலிற்கும் ஒரு தொடர்பு
ஏற்பட வேண்டும். அதை நீங்கள் செய்வதால் அந்த கர்மவினை அங்கேயே முடிவுபெறுகின்ற
து. இதைதான் ” தலைக்கு வந்தது
தலைப்பாகையோடு போனது ” என்பர் பெரியோர்கள். அந்த பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பு ஏற்பட்டுவிட்டால்
உங்கள் செயலுக்குரிய எதிர்வினையும் நடந்துமுடிந்து விடுகின்றது. உங்கள்
செயலை கொண்டே வினையும், வினையை கொண்டே எதிர்வினையும், அந்த
எதிர்வினையை செயல்படுத்த அந்த பொருளும் நிர்ணயிக்க படுகின்றதே தவிர மற்றபடி
ஒன்றுமில்லை. இதைத்தான் ” தீதும் நன்றும் பிறர் தர வாரா ” என்றனர். எந்த செயலுக்கும்
வினை ஏற்பட கூடாது என்றால் “நான்”
என்பதை விட்டுவிட வேண்டும்.
ஆன்மீகத்தில் இதற்கு பெயர் பூரண சரணாகதி.
அந்த விதிவிலக்கு என்பது கூட
இவர்களுக்குதான். தன்னை அறிய
முற்படுவதால் அவர்களுக்கு தரப்படும்சலுகைகள்தான் இது. ஏன் அவர்களுக்கு
மட்டும்??
எந்த ஒரு வினைக்கும் நீங்கள் தான் காரணம் என்ற புரிதல் ஏற்படும்போது உங்களை சுற்றி
நடக்கும் அனைத்தையும் ஏற்று கொள்வீர்கள்.
கடவுளே! எனக்கு ஏன் இப்படி ஒரு வாழ்க்கை?
எனக்கு ஏன் இப்படி ஒரு கஷ்டம்?
கெட்டவனெல்லாம் நல்லா இருக்கானே! என்ற எண்ணங்கள் மாறி உங்கள் தவறுக்கான
வினைகள்தான் தற்போது நீங்கள்
அனுபவித்துவரும் கஷ்டங்கள் என்ற ஆழமான புரிதல் ஏற்படும். புரிதல் ஏற்படும்போது
எதையும் ஏற்றுகொள்ளும் பக்குவம் வந்துவிடும். அப்படிப்பட்ட பக்குவத்தை
நீங்கள் அடையும்போது, உங்களின் 95% கர்மங்களை உங்களுக்காக வேறு ஒருவர்
அனுபவித்து விடுவார். காரணம்!!
நீங்கள் அவர்மீது கொண்டுள்ள அதிகப்படியான
அசைக்கமுடியாத நம்பிக்கையே ஆகும். அந்த அவர் ஏற்கனவே பிறவிகடலை கடந்தவராக
இருப்பார்.
ஞானி ஒருவர் கூட்டம் நிறைந்த ஒரு தெரு வழியே சென்று கொண்டு இருந்தார்.
திடீர் என்று அங்கே உள்ள சாக்கடையில் குதித்துவிட்டு பக்கத்தில் உள்ள தண்ணீர்
குழாயில் காலை கழுவிவிட்டு
சென்றுவிட்டார். இதை பார்த்தவர்களுக்கு அவர்
பைத்தியகாரன் என்று தோனலாம்.
ஆனால் அவரை பொறுத்தவரை பொருளுக்கும்
அவருக்கும் தொடர்பை ஏற்படுத்தி கொள்வது ஆகும். ஆனால் அவர் ஏற்படுத்திய தொடர்பு
அவருடையது அல்ல!! அவரை நம்பி இருப்பவர்களின் கர்மவினைகளை தான் அவர்
அச்செயலின் மூலம் தீர்த்து வைக்கின்றார்.
இது எப்படி சாத்தியம்?? என்ற கேள்வி வரலாம்!! அந்த ஞானியை பொறுத்தவரை
அவர் செய்யும் எந்த செயலுக்கும் வினை என்ற ஒன்று ஏற்படுவது கிடையாது.
காரணம்? அவர் உள்ளே வெறும் வெற்றிடம் தான் உள்ளது.
அதாவது அவருக்கு மனம் என்ற
ஒன்று கிடையாது!! உள்ளே சூன்யமாக தான்
இருக்கும்!! அவரிடம் எந்த எண்ணங்களும் உதிப்பதும் கிடையாது!! மறைவதும்
கிடையாது!! இதுவே ” சும்மா இருப்பது ”
என்று சொல்லப்படுகின்றது.
ஒருவன் அவர்மீது கொண்டுள்ள தீவிர பக்தியால் அந்த
வெற்றிடத்தில் இவனது எண்ணங்கள்
சுற்றிகொண்டிருக்கும். இவனுக்கு அன்று சாக்கடையில் விழுந்து அடிபட வேண்டும்
என்ற விதி இருக்கும், ஆனால் இவன் உண்மையாக இருப்பதால் இவனுக்கு பதிலாக
அந்த ஞானி அந்த விதியை முடித்து
வைக்கின்றார். மேலும் அவர் மீது நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொருவரின் எண்ண
அலைகளும் அங்கே உள்ள வெற்றிடத்தில் சுற்றிக் கொண்டே இருக்கும். இவர்கள் தன்
தவறை உணர்ந்து தனக்கு உண்மையாக நடக்க
தொடங்கும்போது அந்த ஞானி எதோ ஒரு செயலின் மூலம் இவர்களின் பாவபுண்ணிய
கணக்குகளை அழித்துவிடுவார்.
முடிவில் இவர்களும் அந்த ஞானியின் நிலைக்கே வந்துவிடுகின்றனர்.
அதனால் தான் ஞானிகள் அருகில் இருக்கும்போது எதையும்
கேட்காதீர்கள் என்று கூறுவது. காரணம்!!
நீங்கள் கேட்டுதான் பெறவேண்டும் என்ற
அவசியமே அங்கு கிடையாது. மாறாக நீங்கள்
கேட்க நினைப்பது கூட சிறியதாக தான் இருக்கும். அவர் கொடுக்க நினைப்பதோ கணக்கில் அடங்காதவையாக இருக்கும். இதற்கு அவரிடம் பூரண சரணாகதி அடைந்தலே
சிறந்தது ஆகும்.
இதில் பூரண சரணாகதி என்பது இனி அனைத்தும் உன் செயல் என பற்றுகளை துறப்பதுவே ஆகும்.
“நான்” என்ற எண்ணத்திற்கு பதிலாக இனி எல்லாம் “நீ” என்ற
எண்ணத்தை கொண்டு வருவதே சரணாகதி.
அதற்குபிறகு உங்களுக்கென்று தனிப்பட்ட எந்தவொரு செயலும் இருக்காது, இருக்கவும்
கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அவன் செய்வதாகவே இருக்க
வேண்டும்.
இறைவனை நோக்கிய உங்களது பிராத்தனை அல்லது வேண்டுதல் எந்த முறையில் இருக்க
வேண்டும் என்பதை விளக்குவதே இப்பதிவு.
மேலும் இப்பதிவு முந்தைய பதிவான கர்மவினையின் தொடர்ச்சி ஆகும்.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும்
சூழ்நிலைக்கு தகுந்தவாறு தேவைகள் என்பது
மாறிக்கொண்டே இருக்கும். அந்த
தேவைகளுக்கு தகுந்தவாறு
வேண்டுதல்களும் மாறிக்கொண்டே இருக்கும்.
ஆனால் ஆன்மீகத்தில் ஓரளவு புரிதல் உள்ளவர்களை பொருத்தவரை, அவர்களுடைய
வேண்டுதல் என்பது அவர்கள் வாழ்நாளில் “ஒரே ஒருமுறை” தான் இருக்குமே தவிர
ஒவ்வொரு முறையும் இருக்காது.
ஏனென்றால் அவர்கள் முடிவான ஒன்றை முதலிலேயே
வேண்டியும் விடுவர். அந்த வேண்டுதலில்
அத்தனையும் அடங்கியும் விடும். இதை புரிந்துகொள்ள ஒரு சிறு கதையை பார்ப்போம்.
ஒரு ஏழை தாயின் மகனுக்கு படிப்பு அவ்வளவாக வரவில்லை. அவளுக்கு.தெரிந்ததெல்லாம் அவள் வழிபடும் தெய்வம்
மட்டும்தான். தன் மகன் பரிட்சையில் தேர்ச்சி
பெற்று நல்ல வேலைக்கு செல்ல வேண்டும்
என்பது அவள் கனவு.
கடவுளிடமும் இதை
குறித்து வேண்டுதல் வைக்கவே, மகனும் பரிட்சையில் தேர்ச்சி பெற்றான். ஆனால்
இவனது வினை வேலை கிடைக்கவே இல்லை.
மறுபடியும் கவலை கொண்ட தாய் வேண்டவே
மகனுக்கு நல்ல வேலையும் கிடைத்தது.
சிறிது காலம்தான் சென்றது மகனுக்கு விபத்து
ஏற்பட்டு படுக்கையில் இருந்தான். அத்தாய்க்கு தெரிந்ததெல்லாம் அவனே என்பதால் மறுபடியும் ஒரு வேண்டுதல்!!
இதுவே அத்தாய் கடவுளே “எனக்கு அமைதியையும் சந்தோஷத்தையும் கொடு”
என்று ஒரே ஒருமுறை மட்டும்
வேண்டியிருந்தால், அவள் வாழ்க்கை வசந்தமாகி இருக்கும்.
புரியும்படி கூற
வேண்டுமென்றால் ஒருவனுடைய வேண்டுதல் என்பது நிரந்தரமான முடிவான ஒன்றாக இருக்க
வேண்டும். அத்தாய் வேண்டியது எல்லாமே தற்காலிகமான தீர்வை தரக்கூடியது என்பதால்
ஒவ்வொரு முறையும் வேண்ட வேண்டிய அவசியம் இருந்தது. மேலும் எதிர்வரும்
கர்மவினை இதுதான் என்பது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கூடவே எனக்கு
இந்த தேவை நிறைவேறினால் நான்
நிம்மதியாக இருப்பேன் என்ற தவறான கணக்கை போட்டுக் கொண்டு தற்காலிக
தீர்வை நாடுகின்றோம்.
உண்மையில் எந்த ஒன்றில் எல்லாம் அடங்குமோ!! அடக்கமோ!! அந்த ஒன்றை
வேண்டுதலாக வைக்க வேண்டும். அப்படி.அந்த வேண்டுதல் நிறைவேறும் பொழுது
அவனுக்கு அனைத்தும் வசமாகி விடுகின்றது.
எனவே அவனது வேண்டுதல் என்பது ஒரே ஒருமுறையோடு முடிவடைந்து விடுகின்றது.
இதில் உங்களை சுற்றி உள்ளவர்களும் பயன்
பெறுவர். எப்படியென்றால் உங்கள்
அமைதியும் சந்தோஷமும் உங்களை சுற்றி
உள்ளவர்களையும் சார்ந்தே உள்ளது.
உங்கள் தாய்க்கு உடம்பு சரியில்லை என்றாலோ,
உங்கள் மனைவி கோபபட்டலோ, உங்கள்முன்.ஒரு நாய் குட்டி கஷ்டப்பட்டாலோ, உங்களுக்கு
பணக்கஷ்டம் ஏற்பட்டாலோ உங்களால் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க
முடியுமா?? முடியாதல்லவா!!
எனவே உங்கள்
அமைதி என்ற வேண்டுதல் நிறைவேற.உங்களை சார்ந்த மற்றும் உங்களை
சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கை தரமும் நல்லவைகளாக மாற்றம் பெறகின்றன.
இப்பதிவு உங்களுக்கு தெளிவாக புரிந்தால் இறைவனை நோக்கிய உங்களது
பிராத்தனையும் ஒருமுறைதான்!!
******************************************************
சனாதன தர்மத்தின் அடிப்படை போதனைகளுள் ஒன்று கர்மநியதி. கர்மா என்றால் வினை என பொருள்படும்.
வினை என்றால் செயலாகும். ஆகவே, கர்மா என்றால் செயல். கர்மநியதி ஒரு பிரபஞ்சநியதி (universal law).
→ கர்மா (காரணம் – விளைவு)
கர்மா என்ற பிரபஞ்சநியதி, காரணம் மற்றும் விளைவு ஆகிய இரண்டின் அடிப்படையில் செயல்படுகின்றது. ஒரு செயலின் காரணம் நன்மையானதாக இருந்தால், அந்த செயல் நன்மையை விளைவிக்கும்.
அதுவே ஒரு செயலின் காரணம் தீமையானதாக இருந்தால், அந்த செயல் தீமையை விளைவிக்கும்.
→ மூன்றுவகை கர்மா
கர்மா மூன்று வகைப்படும்.
அவை:
1) சஞ்சித கர்மா – முந்தைய பல பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள நல்ல மற்றும் தீய கர்மாக்களின் மொத்த மூட்டை தான் சஞ்சித கர்மா.
2) பிராரப்த கர்மா – சஞ்சித கர்மாவின் ஒரு சிறுபகுதி தான் பிராரப்த கர்மா. இது இந்த பிறவியில் அனுபவிக்கவேண்டிய நல்ல மற்றும் தீய கர்மபலன்கள்.
3) ஆகாமி கர்மா – இந்த பிறவியில் செய்யும் நல்ல மற்றும் தீய கர்மாக்கள் ஆகமி கர்மா எனப்படும். இவை பிறவியின் இறுதியில் சஞ்சித கர்மாவோடு சேர்க்கப்படும்.
→நல்ல கர்மா மற்றும் தீய கர்மா
இதுதான் நல்ல கர்மா, இதுதான் தீய கர்மா என்று நிலையாக கூறிவிட இயலாது. செயல் என்பது இடம், சூழ்நிலை ஆகியவற்றை பொறுத்து வேறுபடும். ஒருவன் தன்னுடைய செயலின் காரணம் நன்மையானதா தீமையானதா என்று ஆராய்ந்து அறியும் பக்குவத்தை சனாதன தர்மம் புகட்டுகின்றது.
அதற்காக தான் பல புராணங்களும் இதிகாசங்களும் இந்துதர்மத்தில் உள்ளன. மற்றவர்களின் செயல்களால் நாம் கற்றுக் கொள்ளும் பாடம் அளப்பரியது.
கர்ணனை பலர் மத்தியில் கேலிசெய்து அவமானப்படுத்தினாள் திரௌபதி, அந்த கர்மவினையின் விளைவால் அவள் பலர் மத்தியில் அவமானப்பட நேரிட்டது.
ஒருதீங்கும் இளைக்காதவனை சுட்டுக் கொல்வது தீய கர்மா, ஆனால் நாட்டையே அழிக்கும் நோக்கத்தில் செயல்படும் தீவிரவாதியை ஒரு ராணுவவீரன் கொல்வது தீயகர்மா ஆகாது.
ஏனென்றால், ஒரு ராணுவவீரனின் கடமை என்ன? நாட்டுமக்களைத் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றவேண்டும் என்பதே.
அவனின் கடமையிலிருந்து அவன் பின்வாங்கினால், அதுதான் அவனுக்கு தீயகர்மா. இதனால் தான் திருவள்ளுவர், கொல்லாமை எனும் அதிகாரத்தில் ஓருயிரையும் கொல்லக் கூடாது என்றும்; செங்கோன்மை எனும் அதிகாரத்தில் ”கொடியவர்களைக் கொலைத் தண்டனையால் அழிப்பது பயிர்களைக் காக்க களையைப் பிடுங்குவது போல” எனக் குறிக்கிறார். திருவள்ளுவர் முரணான கருத்துகளைக் கூறுவாரா? இல்லை.
கொல்லாமை எனும் அதிகாரத்தை சன்னியாசிகளுக்கும், செங்கோன்மை எனும் அதிகாரத்தை அரசர்களுக்கும் இயற்றியுள்ளார்.
எந்தவொரு உயிரையும் கொல்லக் கூடாது என்பது சன்னியாசிகளின் தர்மம்; நல்லவர்களைக் காப்பதற்காக தீயவர்களை அழிக்கவேண்டும் என்பது அரசனின் தர்மம். (அரசன் – நாட்டின் தலைவன்; சன்னியாசி – உலகவாழ்வை துறந்தவன்)
ஆகவே, ஒரு செயலை விட அந்த செயலின் பின்னால் இருக்கும் காரணம் தான் மிக முக்கியமாகும்.
ஒரு செயலை எந்த காரணத்திற்காக செய்கிறோம் என்பதை ஆராயவேண்டும். அந்த செயல் சுயநலமற்றதாக இருக்கவேண்டும்; எந்த அப்பாவி உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்காததாக இருக்கவேண்டும்; தர்மநியதிகளையும் இயற்கைநியதிகளையும் மீறாதபடி இருக்கவேண்டும்; சட்டவிதிமுறைகளை மீறாதபடி இருக்கவேண்டும்.
→ கர்மாவும் மறுபிறப்புச் சுழற்சியும்
ஒவ்வொரு ஆன்மாவும் தன்னுடைய செயலின் விளைவுகளை அனுபவித்து, அதனால் பக்குவநிலை அடையவே மீண்டும் மீண்டும் பூலோகத்தில் பிறப்பிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆன்மாவும் செயல்களின் நல்ல மற்றும் தீய விளைவுகளை அனுபவித்து தீரவேண்டும் என்பது பிரபஞ்சநியதி. சில ஆன்மாக்கள் வரம்புமீறிய தீயசெயல்களின் விளைவுகளை அனுபவிக்க நரகலோகங்களுக்கும், அளவற்ற நற்செயல்களின் விளைவுகளை அனுபவிக்க சொர்க்கலோகங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
பிறப்பெடுக்கும் ஆன்மாக்கள் செயலின்றி இருத்தல் இயலாது. செயல் புரியும் பொழுது அதன் வெளிப்பாடு நல்வினை – தீவினைகளாக உருவெடுத்துப் பின் ஆகாமி வினையில் சேர்க்கப்படுகிறது. நல்வினைகள் – தீவினைகள் ஆகிய இரண்டுமே பிறவியில் ஆழ்த்தவல்லது. முக்தி நிலையான பிறவாமைக்கு இவ்விரு வினைகளும் தடைக் கற்கள். இவ்விரு வினைகளையும் ஒழித்தலே முக்திக்கான வழியாம்.
வினைகளின் பலனை அனுபவிக்க பிறப்பெடுத்தே தீர வேண்டும். அது நல்வினைக்கு கிடைக்கும் நற்பலனாகவும் இருக்கலாம், தீவினைக்கு கிடைக்கும் தீயபலனாகவும் இருக்கலாம்.
ஒவ்வொரு ஆன்மாவும் ஏற்று வரும் பிராரப்த கர்மாவை (அதாவது இப்பிறவியில் தீர்த்து முடிக்க வேண்டிய கர்மாக்கள்) பிறவிக் காலத்திற்குள் முழுவதும் அனுபவித்து விடுகிறது. எனினும் ஆகாமிய வினைகளும் (அதாவது இப்பிறவியில் ஆன்மாக்களின் நல்வினைகள்-தீவினைகள்) பெரும் அளவு சேர்ந்து முடிவில் சஞ்சித வினையாக மாறுவதால் சஞ்சித வினைக் குவியல் என்றும் தீர்வதில்லை.
சஞ்சித வினைகள் முழுவதுமாக அனுபவித்துத் தீர்க்கப்படும் வரை ஆன்மாக்களுக்கு பிறவி தொடர்ந்து வரும். பிறவிகளுக்குக் காரணம் கர்மா. கர்மாவுக்குக் காரணம் பிறவிகள். பிறவிச் சுழற்சி என்று பகவத் கீதை இதையே குறிக்கிறது. எண்ணற்ற பிறவிகளுக்குப் பின்னரே ஒரு ஆன்மாவுக்கு மானிடப் பிறவி வாய்க்கிறது என்றும் சாத்திரம் அறிவிக்கிறது. ஆயினும், எப்படி கர்மாக்களை எல்லாம் அழித்து பிறவாமை எனும் நிலையை அடைவது?
பகவத் கீதையில் பகவான் அதற்கான வழியை மிகவும் அழகாக எடுத்துரைக்கிறார்.
எல்லோர்க்கும் நன்மை பயக்கும் காரணங்களை உடைய செயல்களையே புரியவேண்டும். அந்த நற்செயல்களின் பலன்களைத் துறந்துவிட வேண்டும். நல்ல காரியங்கள் செய்வது பின்னாளில் எனக்கு நற்பலன்கள் வருவதற்காக என்று கருதாமல், நல்ல காரியங்கள் செய்வது என்னுடைய ஆத்மதிருப்திக்காக என்ற எண்ணத்தை முழுமையாக கொண்டிருக்க வேண்டும்.
செயல்களின் பலன்களை எல்லாம் இறைவனுக்கு அர்ப்பணித்துவிட வேண்டும்.
இதனால் நம்முடைய கர்மப் பலன்களை எல்லாம் இறைவனே பொறுப்பேற்றுக் கொள்கிறார். இதனால் தான், கண்ணன் கர்ணனிடம் வந்து கர்ணன் ஆற்றிய நற்தொண்டுகளுக்கான பலன்களை எல்லாம் தானமாக கேட்டான். தான் ஆற்றிய நற்தொண்டுகளின் பலன்களை எல்லாம் கர்ணன் இறைவனுக்கே தானமாக கொடுத்துவிட்டு, கர்மங்கள் எல்லாம் தீர்ந்து முக்திநிலை அடைந்தான்.
//பொதுவாக எல்லாருக்கும் ஒரு அபிப்பிராயம் உண்டு. குடிப்பவர்கள் எல்லாரும் கெட்டவர்கள் … குடித்து விட்டு கலாட்டா செய்பவர்கள்… சண்டை போடுபவர்கள் என்று…//
பொதுவா, குடிப்பவர்கள் அல்லது தவறு செய்கிறவர்கள், மற்றவர்களையும் தவறு செய்யத் தூண்டுகிறார்கள், அதாவது மற்றவர்களுக்கும் அந்தப் பழக்கத்தை ஆரம்பித்துவிடுகிறார்கள், அப்போதுதான் அவர்கள், தாங்கள் செய்வது தவறு என்ற மனசாட்சியின் குரலை ஒதுக்கமுடிகிறது. அதனால்தான் அவர்களிடம் நண்பராகச் சேர்வதற்குமுன்பு மிகவும் யோசிக்கவேண்டும் (குடி-சிகரெட், மது மற்ற எல்லா கெட்ட வழக்கங்களுக்கும் பொருந்தும்).
இதுதான் எனது அனுபவம். அப்படி நாமும் அந்த ஜோதியில் ஐக்கியமாகாவிட்டால் நட்பைத் தொடர இயலாது.
Brilliant posts KM ji..I love them.I have thought a lot in this subject and the closest conclusion I could arrive at is “God takes care of Human race but cares a damn for individuals”
நன்றி கண்பத்.
இந்த தலைப்பிலான தொடரில் இதுவரை நாம் பேசாத, விவாதிக்காத – நிறைய விஷயங்களைப்பற்றி எழுத வேண்டும், கருத்து பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.
உங்களைப் போன்ற ஆர்வமுள்ள, விஷயம் தெரிந்த நண்பர்களும் கலந்து கொண்டால், அது இன்னும் பயனுள்ளதாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன். குறைந்த பட்சம் வாரத்திற்கு
2 இடுகைகளாவது இந்த தொடரில் எழுதலாமென்று நினைக்கிறேன். உங்களிடமிருந்தும் தொடர்ந்த கருத்து பரிமாற்றங்களை எதிர்பார்க்கிறேன். நன்றி.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
My pleasure ji