…
…
நேற்று மாலை / இரவு traffic-ல் சிக்கித்தவித்த சென்னைவாசிகளுக்கு
ஆறுதலுக்கு இந்த படங்கள்… இப்படி இருந்த சென்னை இன்று
எப்படி ஆகி விட்டது….? இதற்கு யார் காரணம்…?
இயற்கையா….? அல்லது அதனுடன் ஒத்துவாழத்தெரியாத நாமா…?
…

..

..

..

..

..

..

..

..

..

( நண்பர் சேகர் – உதவிக்கு நன்றி…)
———————————————————————————————–



அய்யோ, எவ்வளவு அழகாய் இருக்கிறது சென்னை.
கடந்த சில பத்தாண்டுகளில் இம்பூட்டு கூட்டமும் வெளியிலேருந்து
வந்திருக்கு. வந்தவர்களை போகச்சொல்ல முடியாது. ஆனால், எல்லாருமாக
சேர்ந்து ஊரை திருத்த முயற்சிக்கலாம், அழகாக்க முயற்சிக்கலாம்.
எப்படி இருந்த சென்னை இப்படி ஆகியிருக்கு. இதற்கு யாரை குற்றம் சொல்ல. 1950, 1960-களில் வந்த சினிமாக்களை அதிலுள்ள பாடல்களை சமயங்களில் பார்க்கும் போதும் இதேவித உணர்வுகளை ஒரு சோகம் கலந்த பெரு மூச்சு வெளிப்படுவதை தவிர்க்க முடியவில்லை.
ஒன்றை கொடுத்து ஒன்றை பெற முடியும் என்பது இயற்கை விதி. ஆனால், மனிதனின் பேராசை அழிவை விளை கொடுத்து வாங்கியிருக்கிறதென்பதை கண்டு கோபம் கொப்புளிக்கின்றது. அதைத் தவிர என்ன செய்ய. இன்னொரு வெள்ளத்தை சந்தோசமாக எதிர்கொள்வோம்.
ஜெய் ஹிந்த்.
Very happy to see the photos of Madras of 1960s and before. I was familiar with Ranganathan Street (at the far end near Mambalam Railway Station), there used to be an Udipi Bhatt’s Hotel where I used to dine regularly, before boarding the train to Fort St. George (Pay & Accounts Office). Triplicane High Road, LIC Building, Tambaram Sanatorium (TB Hospital) were other places frequented by me. During early ’70s, LIC suffered a major fire damage which I could see from the roof of a house in Ice House. When I visit Chennai now, at times, I don’t know which part of Madras I am traveling. Even street/road names have changed! Astounding changes, good or bad on how our perception is. Alas, only a few iconic buildings remain. Hmmm, good old days. We can’t put the clock back!
1980-1990 வரையிலான சில திரைபடங்களில் சென்னை மிக அழகாகவே இருக்கும். சாலையில் வாகன நெருக்கடிகளும் இருக்காது. 90’களின் பிற்பகுதியில் வளர்ச்சி வேகம் எடுக்கிறது. சில பழைய படங்களை (1990களுக்கு முன்) பார்க்கும்போது அன்றைய அழகனா இடங்கள் எல்லாம் இன்று எப்படி இருக்கும் என்ற எண்ணம் தோன்றுகிறது. 1970வரையிலும் சென்னை மிக அழகாகவே இருந்திருக்கும்.
தவறான எண்ணம் என்றாலும், அப்பவே வீடு வாங்கியிருக்கலாமே என்ற எண்ணம் பழைய புகைப்படங்களைப் பார்க்கும்போது தோன்றும்.
சென்னைல ஆறில் 4 பேர் வெளி ஊரிலிருந்து வந்து தங்கிவிட்டவங்க. அரசியலும் இதில் சேர்ந்து, நகரத்தின் சுத்தம் சுகாதாரத்தைக் காவு வாங்கிவிட்டது.
நீங்க, ஆட்டோல சென்னைல போகும்போது அந்த அந்த இடங்கள் பெயரைப் பார்த்தாலே தனித் தனி கிராமம், ஏரியா என்பது தெரியும். இப்போ அடையாளம் தெரியாம காங்கிரீட் மலையாக ஆகிவிட்டது.