தென்மேற்கு மத்திய வங்கக்கடல் ….
பக்கத்துத்தெருவில் தான் வசித்து வந்தார் அந்த நண்பர்.
ஆனால் கொஞ்ச நாட்களாக ஆளைப் பார்க்க முடியவில்லை.
எதேச்சையாக நேற்று சந்திக்க நேர்ந்தது.
நான் – என்ன சார் -ரொம்ப நாளா ஆளையே பார்க்க
முடியலை ?
நண்பர் – அடடா ஒங்க கிட்ட சொல்ல மறந்துட்டேன். நான்
வேற எடத்துக்கு நகர்ந்துட்டேன் ..48 மணி நேரம் ஆச்சு.
நான் – எடம் மாறிட்டீங்களா ? எங்கே ?
நண்பர் – ECR பக்கத்துல –
நான் – ECR பக்கத்துலயா ? எங்கே ?
நண்பர் – தென் மேற்கு வங்கக் கடல் மத்திய பகுதில ..
நான் – என்ன சார் சொல்றீங்க ?
நண்பர் – ஆமாம் – ECR-ல கடற்கரைலேந்து
5 கிலோமீட்டர் தள்ளி உள்ள
ஒரு காலனில தனி வீடு.
நான் – அடடா அவ்வளவு தொலைவா போயிட்டீங்க ?
அப்ப அடிக்கடி இந்தப் பக்கம் வர மாட்டீங்க …
நண்பர் – வந்தாலும் வரலாம். வராமல் இருக்கவும்
வாய்ப்பு இருக்கு
நான் – ரொம்ப தொலைவு ஆச்சே – எப்படி வருவீங்க ?
பஸ்ஸா இல்லை ஸ்கூட்டரா ?
நண்பர் – பஸ்லயும் வரலாம்; ஸ்கூட்டர்லேயும் வரலாம்;
வராமயும் போகலாம் !
நான் – என்ன சார் புது எடம் போனப்புறம் பேச்சே
ஒரு மாதிரி இருக்கே. அக்கம் பக்கம் எல்லாம் எப்படி ?
யார் குடி இருக்காங்க ?
நண்பர் – ஓ அதுவா – பக்கத்தது வீட்டுல தென் மண்டல
வானிலை அதிகாரி ரமணன் தான் இருக்கார் ….!
இந்த வானிலை அதிகாரிகள் படுத்தும்பாடு தாங்க முடியவில்லை.
எங்கிருந்து தான் கண்டு பிடிக்கிறார்களோ இந்த குறிப்பிட்ட
வார்த்தை தொகுப்புகளையும்
வழ வழ கொழா கொழா அறிவிப்புகளையும் –
தென் மேற்கு மத்திய வங்கக்கடல் …
தெற்கு ஆந்திரா மத்திய பகுதி ..
காற்று அழுத்த தாழ்வு பகுதி – குறைந்த அழுத்த தாழ் நிலை …
தென்மேற்கிலிருந்து வ்ட கிழக்குநோக்கி ..
அடுத்த 24 மணிநேரத்திற்கு (எப்போதிலிருந்து 24 மணி நேரம் –
அது யாருக்கும் தெரியாது)
லேசான அல்லது மிதமான அல்லது இடியுடன் கூடிய
அவ்வப்போது விட்டுவிட்டு அல்லது பலமான மழை –
பெய்ய வாய்ப்பு (?) உள்ளது. (இதற்கு மேல் வழுக்கலாக
எப்படி சொல்லுவது ?)
இந்த அறிவிப்பை டிவி காமிரா முன் சொல்லும்போது
அவர்கள் கொடுக்கும் போஸ் இருக்கிறதே .. அப்பப்பா காணக்கண்
கோடி வேண்டும் ! இவ்வளவு லட்சணமான அறிக்கையை டிவி காரர்களே
வாங்கி வந்து படித்தால் போதாதா ? நம்மை வேறு படுத்த வேண்டுமா?
என்ன கொடுமைடா சாமி ! (அக்டோபர் – நவம்பர் வந்தாலே
பயம்ம்ம்ம்ம்மா இருக்கிறது )



நிஜமான சாமியாரா இல்லை ….