……………………………………………..

………………………………………………
.
…………………………………………………………………………………………………………………………………………………..
……………………………………………..

………………………………………………
.
…………………………………………………………………………………………………………………………………………………..
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

[…] […]
நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
அரசியல் பாதுகாப்பு கொடுப்பதற்காக சபரீசனுக்கு கட்சி, அரசியல் ரீதியான பதவி விரைவில் கிடைக்கும் என பட்சி சொல்கிறது. ராஜ்யசபா எம்பி அல்லது எம்எல்எஏ. குறைந்தபட்ச கொத்தடிமையாக்க்கூட இருக்கத் தெரியாத தியாகராஜனுக்கு கல்தா. இனி அவரிடம் திமுகவைச் சேர்ந்தவர்கள் தொடர்பில் இருக்கமாட்டார்கள். ரெஸ்யூமைத் தட்டிவிட வேண்டியதுதான்.
திமுகவின் ஷிண்டே இவரல்லர் (ஒருத்தர் ஆதரவும் கிடைக்காது). செ பா அல்லது திருச்சி அல்லது …
மணி அவர்களின் பேட்டிகள் மிக பெரிய சலிப்பை தான் தருகின்றன..
இவர் மிகவும் பகிங்கிரமாக dmk வை ஆதரிக்கிறார் , என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது .
மத வாத சக்திகளை ஒழிக்க வேண்டுமாம், அதற்க்காக dmk வை இவரால் விட்டுக்கொடுக்க இயலவில்லையாம் .இருந்தாலும் யாரையோ கேள்வி கேட்பதை போலும், திரும்ப, திரும்ப பிஜேபி யை ஒழிக்க வேண்டும் என்றும், அண்ணாமலை ஒரு முதிர்ச்சியற்றவர் என்றும் கூறுகிறார், எங்கேயோ விட்டேத்தியாக பார்த்துக்கொண்டு , திரும்பவும் சொன்னதையே திரும்ப திரும்ப கூறுகிறார் .
மதவாத சக்திகளை அழிக்க , நாம் dmk வை சகித்து கொள்ளவேண்டும் என்று, கடைசியில் தீர்ப்பு வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை .
2024 இல் பிஜேபி ஆட்சிக்கு வந்தால், இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது என்பது போல் பேட்டி கொடுக்கிறார்.ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும், இதே பேட்டி தான், என்ன செய்வது….
அப்படி பிஜேபி ஆட்சிக்கு வந்து, இவ்வளவு ஆண்டுகளாகியும், அப்படி என்னதான் பிரச்சினை என்று கூறமறுக்கிறார் .மத மாற்றங்கள் கட்டுப்படுத்த பட்டிருக்கின்றன. இந்த கட்டுப்பாடுகளை தான், கடைசியில் பிஜேபியின் மதவெறி என்கிறாரா?
இந்துக்களை, இந்து மதத்தை கிண்டல் செய்தால், இப்பொழுதெல்லாம், ஹிந்துக்கள் எதிர்த்து கேள்வி கேட்கிறார்கள். இதனால் இவர் தனது அதிமேதாவித்தனத்தை காட்ட முடியவில்லை. இந்த ஹிந்துக்களிடையே விழிப்புணர்ச்சியை ஊட்டியதை தான் பிஜேபியின் மதவெறி என்கிறாரா?
என்னமோ, நாமும் பேசாமல் ,பிஜேபி மதவெறி கட்சி என்றே இவர்களுடன் சேர்ந்து கூப்பாடு போடுவோம்…
இல்லையெனில் நம்மையும் மதவெறியன் என்று வர்ணித்துவிடுவார்களோ
//இப்போதாவது தைரியமாக வெளியே வருவாரா பி.டி.ஆர்?// – உண்மையைச் சொன்னால், ஆங்கிலத்தின் சொலவடைகளைத் தமிழில் மாற்றினால் இப்படித்தான் அர்த்தம் புரியாமல் இருக்கும். Will PTR come out openly என்பதற்குச் சரியான தமிழ், உண்மையைச் சொல்வாரா பி.டி.ஆர் என்பதுதான். உங்கள் தலைப்பு, Will he come out of DMK என்றும் அர்த்தம் கொள்ளத் தக்கதாகிவிடும். (இதைச் சொல்வதைத் தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் கா.மை. சார்)
Anyway, அவரைக் கழுத்தைப் பிடித்து பதவியிலிருந்து வெளியே தள்ளுவார்கள் வெகு விரைவில் என்றே நான் நம்புகிறேன். அவர் நல்ல கணக்குப்பிள்ளை. அதனால் அவரைச் சேர்த்துக்கொள்ளும் கட்சிகளுக்கு எப்போதுமே தொல்லை.