” மாப்பிள்ளை சார் ” – பிரமிப்பூட்டும் செய்திகள் – ….

நேற்றைய இடுகையை போட்ட பிறகு
இந்த பேட்டியை பார்த்தேன்…

பகிர்ந்துகொள்ள வேண்டுமென்று
தோன்றியது – கீழே….

நேரம் இல்லாவிட்டாலும் கூட
அவசியம் பாருங்கள்….

………………………………………

.

……………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , . Bookmark the permalink.

3 Responses to ” மாப்பிள்ளை சார் ” – பிரமிப்பூட்டும் செய்திகள் – ….

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இங்கேயே பல முறை எழுதியிருக்கிறேன். நீங்கள் சொல்லும், ‘சொல்லுவது யார் என்று பார்க்கக்கூடாது..சொல்லும் செய்தியில் என்ன இருக்கிறது என்றுதான் பார்க்கணும்’ என்பதை நான் எப்போதுமே ஏற்பதில்லை. காரணம், சொல்லுபவர்கள் தங்கள் கட்சி நிலைக்கு , மதச் சார்புக்கு ஏற்றமாதிரித்தான் கருத்துகள் கூறுகின்றனர். இதில் விதிவிலக்குகள் அபூர்வம். பொருளாதாரப் புளிகளான, ப.சி. ஜெயரஞ்சன் அப்புறம் NGO என்று சொல்லிக்கொண்டு வருகின்ற கிறித்துவர்களான திருமுருகன், வியாபாரிகள் சங்கத் தலைவர் போன்ற கும்பல்கள்…. எல்லோருக்குமே ஒரு அஜெண்டா இருக்கிறது. மதுவிலக்கு, டாஸ்மாக், பள்ளி மரணங்கள், ஆவின் எடைகுறைப்பு ஊழல் போன்ற எதற்காவது iஇவர்கள் குரல் கொடுத்தார்களா? திமுக மாவட்டச் செயலாளரான கே எஸ் அழகிரி குரல் கொடுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த ‘புளி’கள் இதைப்பற்றிப் பேசாததன் காரணம் என்ன? சவுக்கு சங்கருக்கும் ஒரு அஜெண்டா இருக்கிறது. அவ்வளவுதான்.

    லுலு மால் – இவங்க கான்சப்டே அரசியல்வாதிகள் பணத்தில் வியாபாரம் நடத்துவது. முன்பு கேரள அரசியல்வாதிகள் பணம். இப்போது அந்த அந்த மாநில அரசியல்வாதிகள் பணம்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      செய்தியை கவனிப்பதை விட்டு விட்டு
      செய்தி சொல்பவரின் மீது உங்களுக்கு
      இருக்கும் விரோதத்தையே திரும்ப திரும்ப
      வெளிப்படுத்தி கொண்டிருக்கிறீர்கள்…

      செய்தியைப் பாருங்கள்…. நாம் அறியாத
      பல தகவல்கள் அதில் வெளிப்படுகின்றன…

      கொள்ள வேண்டியதை கொள்ளவும்
      தள்ள வேண்டியதை தள்ளவும் தேவையான
      பக்குவம் இந்த தளத்து வாசககர்ளுக்கு உண்டு.

      இந்த இடுகையின் மூலம்,
      கிடைக்கும் செய்தியை வாசக நண்பர்களுக்கு
      கொண்டு சேர்க்கும் பணியை மட்டுமே
      நான் செய்கிறேன்.

      .
      வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        இந்தக் காணொளியை வந்த உடன் பார்த்துவிட்டேன். நிறைய தகவல்கள் உண்டு. (சென்ற மோடி விசிட்டின்போது பார்வையாளர்கள் கூட்டத்தை அமைச்சர் சேகர் பாபு நிரப்பியது, இந்த முறை பாஜக நிரப்பியதால் ஸ்டாலின் பேச்சில் காரம் இல்லாமல் போனது என்று பல விஷயங்கள்). இவ்வளவு தைரியமாக திமுக குடும்பத்தை அட்டாக் செய்கிறார், கடைசியில் திமுகவின் மீதுள்ள அன்பால்தான் செய்கிறேன் என்று சொல்கிறார். இவர் என்னவோ கனிமொழியின் ஆள் என்றே எனக்குத் தோன்றுகிறது (அதன் லிங்கிலும் எனக்கு ஒரு சந்தேகம் உண்டு).

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.