….
….

….
தந்தி டிவி ஹரிஹரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்
தலைவர் திருமாவளவன் அவர்களுடன் நிகழ்த்தும்
“கேள்விக்கென்ன பதில்” நிகழ்ச்சியிலிருந்து ஒரு பகுதி….
ஹரி சுவாரஸ்யமான (அல்லது சங்கடமான…!!!)
கேள்விகளை அள்ளி வீசுகிறார்….
திருமா’வின் பதில்கள் எப்படி …?…..
பார்ப்பவர்களே சொல்லுங்களேன்…!!!
….
….
.
——————————————————————————————————–



இதை நீங்க கடைசி சில விநாடிகளை எடுத்துவிட்டு பதிவு செய்திருக்கணும். திருமாவைப் பற்றிய அநாகரீகமான விமர்சனம். நீங்க அதனைக் கவனித்திருக்க மாட்டீங்க. நிற்க,
திருமாவுக்கு, எந்தக் கொள்கையும் கிடையாது. ‘என் பிணம் கூட காங்கிரஸுடன் உறவு வைத்துக்கொள்ளாது’ என்று சொல்லிவிட்டு (அப்போ பாஜகவும் இருந்தது) இப்போது ‘சனாதனம்’ என்று உளறுகிறார். கொள்கை பற்றிப் பேசுபவர் எதற்கு 6 சீட்டுகள் வாங்க, திமுகவின் வாசலில் தவம் இருக்கணும்? எனக்குக் கொள்கை தான் முக்கியம், இந்தத் தடவை நாங்கள் போட்டியிடலை என்று சொல்லவேண்டியதுதானே. அடுத்தது, ஈழப் படுகொலை , காங்கிரஸால் நடக்கவில்லை, தெற்காசிய.பிராந்திய, அமெரிக்க.. என்றெல்லாம் நீட்டி விளக்கம் கொடுக்கும் திருமா, அன்று ஆவேசப்பட்டது அவரது அறிவின்மை காரணமாகவா? அல்லது ராஜபக்ஷே, திருமாவை நன்கு கவனித்ததன் காரணமாக அவரது பார்வை மாறிவிட்டதா?
எப்போதுமே வாக்கு அரசியலில் நுழைந்துவிட்டால், பிச்சை எடுப்பதையோ இல்லை கூட்டணியில் உள்ளவர்களைத் தாங்கிப் பிடிப்பதையோ தவிர்க்க முடியாது. நல்லவேளை வைகோ வைப்பற்றி உலகத்துக்கே தெரிந்ததுனால அவரையும் பேட்டிக்குக் கூப்பிட்டு அசிங்கப் படுத்தவில்லை இந்த தந்தி தொலைக்காட்சி.
அறிவாலயத்தை உடைத்த விசிகவினர்… இது வரை ஒரு ஊடகத்தில் ஆவது செய்தி வந்ததா?
கடந்த திங்கள் அன்று மார்ச் 1 மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் அன்று அவருக்கு வாழ்த்து சொல்ல திருமா தன் தொண்டர்களுடன் அறிவாலயம் சென்று ஸ்டாலினை பார்க்க காத்திருந்தார், அவர் உடனடியாக அழைக்கப்படாமல் ஸ்டாலினை பார்க்க நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டதால் கோபமடைந்த விசிகவினர் அறிவாலயத்தில் இருந்த பெரிய கண்ணாடிகளை உடைத்தனர். அதன் பின்பே திருமா அழைக்கப்பட்டு ஸ்டாலின் அவர்களை சந்தித்தார்.
இது குறித்து ஒரு ஊடகத்திலாவது செய்தி வந்ததா??????????????