….
….

….
திரு.பழ.கருப்பையா – தந்தி டிவி-க்கு
16/10/2020 அன்று அளித்துள்ள
ஒரு சுவாரஸ்யமான பேட்டி கீழே –
பழ.கருப்பையா, ரஜினியை –
தனது நண்பர் என்று சொல்கிறார்…
ரஜினியின் ஒரு வசனம் நினைவிற்கு வருகிறது….
“ஆண்டவா, எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்…
என் நண்பர்களிடமிருந்து மட்டும் நீ காப்பாற்று…!!!! ”
….
….
.
—————————————————————————————————————————-



Sir.,
Karuppiah is a tree less predator bird and looking for a party to settle.
Whatever it is, this interview is good and what he said about the two parties and Rajini politics are valid one
பழ.கருப்பையா சொன்ன பாஜக அடித்தளம் என்பது சரியானதுதான். அதே சமயம் திராவிடக் கட்சியான திமுக, கொள்ளையடிப்பது என்பதை அடித்தளமாக வைத்துக்கொண்டிருக்கும் கட்சி என்பதையும் சொல்லியிருக்கலாம். ஏதோ திமுகவில் ஓரிரு நல்லவர்கள் சேர்ந்து அந்தக் கட்சியின் கொள்ளைகளை சிறிதாவது மாற்றியிருப்பது போலவே நினைத்துக்கொள்கிறார் போலிருக்கிறது.
ஊழலை ஒழிக்க கம்யூனிஸ்டு கட்சிகள், வைகோ போன்றவர்கள் முயன்றார்களாம். எப்படி? 25 கோடி ரூபாய் பங்கு பெற்றா இல்லை சிகரெட் விநியோகம் அது இது என்று வியாபாரக் கரங்களை விரித்தா? இதனையும் தெளிவாகச் சொல்லவில்லை.
மெய்யியல் பார்வை – இதனைச் சரியாகச் சொல்லியிருக்கிறார். காந்தி உருவாக்கியதை சரியாகப் பேசியிருக்கிறார். ஆனால் காங்கிரஸ், பாஜக வரும் வரை செக்யூலராக இருந்தது என்று இவர் பேசுவது நல்ல நகைச்சுவை. ஆனால் ஒரே இனம், ஒரே மொழி…. என்றெல்லாம் சொல்லும் அவர் கருத்து மிகச் சரியானது. இந்தியா ஒரு சப்ஜி. பலவும் கலந்த அவியல். அதை மாற்றுவது சரியாக இருக்காது.
நெறியாளர் சரியாக கையாளவில்லை, தன் தொலைக்காட்சியின் கட்சிப் பார்வையைக் கொண்டிருக்கிறார். மக்கள் திமுக, அதிமுக என்றே வாக்களித்திருக்கின்றனர், ஆனால் எப்போதுமே அதிமுக, திமுகவை விட அதிக வாக்கு சதவிகிதம் கொண்டிருந்திருக்கிறது. அதனால் தமிழகத்தின் முன்னணிக் கட்சி, மக்கள் பார்வையில் அதிமுக. அதனை நீக்க, மக்களுக்கு வேறு நல்ல வாய்ப்பு இருந்தால் அதனை நாடுவார்கள் என்பது ஓவர் நைட்டில் ரஜினியின் ஆதரவோடு சைக்கிளில் களம் இறங்கிய மூப்பனார் கட்சி வென்றதைச் சொல்லலாம். அப்போது செய்த மிகப்பெரிய தவறு திமுகவைச் சேர்த்துக்கொண்டது.
பழ கருப்பையா இன்று பேசும் திமுக எதிர்ப்புப் பேச்சுகளை, தாழ்த்தப்பட்டவர்களை திமுக நடத்தும் விதத்தை, கொள்கையில் பற்றில்லாமல் கொள்ளையில் மட்டும் கொண்டுள்ள பற்றை வெளிப்படுத்தியதை, நாளையும் பேசுவாரா என்பது யோசிக்க வேண்டிய ஒன்று.