….

….
பொதுவாக, அரசியல்வாதிகள் எல்லாருக்குமே
தன் பெயர் எப்போதும் மீடியாக்களில் அடிபட்டுக்கொண்டே
இருக்க வேண்டுமென்கிற அவா உண்டு.
அது நல்லபடியாகவா, அசிங்கமாகவா என்பது பற்றியெல்லாம்
அவர்களில் சிலர் அதிகம் கவலைப்படுவதில்லை….
பெயர் வந்தால் போதும்….
உ-ம். பாஜகவின் ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் …..!!!
இப்போது அந்த வரிசையில் சேர பாஜவின் திருப்பதி நாராயணனும்
முயற்சி செய்கிறாரோ என்று சந்தேகம் வருகிறது.
2-3 நாட்களுக்கு முன்னர் அவர் ஒரு ட்விட்டர் செய்தி
வெளியிட்டார். வேண்டுமென்றே தூண்டி விடும் விதத்தில்
அதற்கொரு தலைப்பும் போட்டார்…
ஒரு கரடியின் செயலைப்பற்றிய கார்ட்டூன் வீடியோ ஒன்றை
வெளியிட்டு, அதற்கு “மிக சிறப்பு. இவர் வழி நடப்போம்…”
என்று தலைப்பும் போட்டார். 30 வருடங்களாக அரசியலில்
இருக்கும் அவருக்கு இப்படி ஒரு தலைப்பு போட்டால்
எதிர்வினை எப்படி இருக்கும் என்று தெரியாதா என்ன…?
அதற்கு எதிர்வினையாக வந்த ட்வீட்டுகளை பார்த்து,
சாதாரண மனிதர்களாக இருந்தால் –
நொந்து போவார்கள்… கடுமையாக re-act செய்வார்கள்…
ஆனால், இவரோ கண்டுகொள்ளவே இல்லை;
இப்படி எதிர்வினைகள் வரும் – வரவேண்டும் – என்றே தான்
அவர் போட்டிருப்பார் என்று தோன்றுகிறது.
எப்படியாவது பெயர் பரபரப்பாக அடிபட்டுக்கொண்டிருந்தால்
போதுமே – ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் மாதிரி ……….!!!
அந்த ட்வீட்டுக்கு வந்த நிறைய எதிர்வினைகள் அசிங்கமாக
மிகவும் தரக்குறைவாக இருந்தன…
மோசமானவற்றை தவிர்த்து விட்டு, ஓரளவு கௌரவமானவை
என்று தோன்றும் சிலவற்றை மட்டும் கீழே சாம்பிளுக்கு
தந்திருக்கிறேன். நிறைய எதிர்வினைகளைப் பார்த்து,
திருப்பதி மகிழ்ச்சியாக இருப்பாரென்றே நினைக்கிறேன்…
நம் பங்குக்கு நாம் வேறு பப்ளிசிடி கொடுக்கிறோமே…!!!
.
முதலில் திருப்பதியின் “இவர்(கரடி) வழி நடப்போம் ….”
காணொலியும் அதற்கு வந்த ஒரு எதிர்வினையும் –
——————————–
————————————————–
பின்னர் வந்துள்ள மறுமொழிகள் – எதிர்வினைகள் –
நிறைய இருக்கின்றன… சுவாரஸ்யத்திற்காக சிலவற்றை மட்டும்
இங்கே தந்திருக்கிறேன்.
சிலவற்றில் திமுக-விற்கும் “சாத்து” உண்டு….!!!
——————————
எதிர்வினை -1

———————————————————————-
எதிர்வினை -2

———————————————————————–
எதிர்வினை-3

————————————————————————
எதிர்வினை-4

————————————————————————
எதிர்வினை-5

————————————————————————
எதிர்வினை-6

————————————————————————–
எதிர்வினை -7

——————————————————————————
.
——————————————————————————————————————————————–



திமுகவில் உதாரண புருஷர்கள்:
தினமலர் செய்தி :
https://www.dinamalar.com/news_detail.asp?id=2618893
28 வயது பெண்ணை மணந்த 67 வயது
தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை
உதாரணம் காட்டி விளக்கம்:
இது குறித்து, சுந்தரேசன் கூறியதாவது:
வயதான காலத்தில், தன் உதவிக்கு
ஒருவர் தேவை என, மணியம்மையை,
ஈ.வே.ரா., திருமணம் செய்தார்.
நான் அவரது வழியில் வந்தவன்.
தி.மு.க., தலைவராக இருந்த கருணாநிதி,
காலையில் கோபாலபுரம்,
மாலையில், சி.ஐ.டி., காலனிக்கு செல்வார்.
அதுபோல், என் மனைவி தரப்பிலும்,
அபிதாவின் பெற்றோர் தரப்பிலும் சம்மதம்
பெற்று, காதலித்து திருமணம் செய்து,
சந்தோஷமாக குடும்பம் நடத்தி வருகிறேன்.
இரு மனைவியரும், அருகருகே
தனித்தனியாக வசிக்கின்றனர். இருவர்
வீட்டிற்கும் சென்று வருகிறேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.
அதென்ன திருப்பதி நாராயணனை எல்லாரும்
அம்போவென்று விட்டு விட்டீர்கள்.
நான் மிகவும் மெனக்கெட்டு எழுதிய இடுகை அது.
நல்ல comedy effect -ஐ அது தருமென்று
நினைத்திருந்தேன்…!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
திருப்பதி நாராயணன் இடுகையிலேயே
அதற்கான சிறப்பான எதிர்வினைகளை நீங்களே
தந்து விட்டீர்கள் என்பது கூட காரணமாக இருக்கலாம்.
சார், எனக்கு ஒரு சந்தேகம்.
திருப்பதி என்ன படித்திருக்கிறார் ?
என்ன தொழில் செய்கிறார் ?
வலைத்தளத்தில் நிறைய தேடிப்பார்த்தேன்.
business -என்று மட்டும் போட்டிருக்கிறது.
என்ன business ?
அரசியலில் இருப்பதைத்தான் பிசினஸ் என்று
கூறுகிறாரா ? ‘
30 வருடங்களாக பாஜகவில் இருந்ததாக
கூறுகிறீர்களே; அவரை எந்தவொரு பொதுக்கூட்டத்திலும்
பார்த்ததாக நினைவில் இல்லை;
ஏன் எப்போதும் தனி ஒருவராகவே இருக்கிறார் ?