…
…

…
– 38 ஆண்டுகளுக்குப் பின் (1981)
அலைகள் ஓய்வதில்லை படத்தில் – “காதல் ஓவியம் …. ”
இளையராஜாவின் இசையில், ராஜாவின் குரலோடு ஜென்சியும்
சேர்ந்து பாடிய அதே பாடல்……
மீண்டும் புதிய டெக்னாலஜியின் பின்னணியோடு –
சுந்தரத் தெலுங்கில் …
பிரமாதப்படுத்தி இருக்கிறார்கள்…
(அத்தனையும் அதே இரண்டு பேர் தான்…!!!)
நீங்களும் பார்த்து ரசிக்க – காணொளி கீழே –
…
…
.
——————————————————————————-



//அத்தனையும் அதே இரண்டு பேர் தான்…!!!// – கா.மை.சார்… இந்தப் பாடலை தமிழில் இளையராஜாவும் ஜென்ஸியும் பாடினாலும், தெலுங்கில் எஸ்.பி. ஷைலஜா மற்றும் இளையராஜா பாடினார்கள். இதனை எஸ்.பி. ஷைலஜா அவர்கள் ஒரு இண்டர்வியூவில் குறிப்பிட்டிருந்தார்கள்.
இளையராஜாவின் பாடல்கள், படத்தை எங்கேயோ கொண்டுசென்றது. நான், கல்லூரி ஹாஸ்டலில் இருந்து மாலை 5 மணிக்குப் புறப்பட்டு நெல்லை ஜங்க்ஷனில் நண்பர்களோடு இந்தப் படமும், தொடர்ந்து இன்னொரு தியேட்டரில் இன்னொரு படமும் பார்த்துவிட்டு ஊர்சுற்றிவிட்டு 12 மணி வாக்கில், ஹாஸ்டல் கேட்டில் ஏறிக்குதித்து ஹாஸ்டலுக்குள் வந்த நினைவு வருகிறது. இளையராஜாவின் 78-84 வருடப் பாடல்கள் கேட்கும்போது, அந்தக் காலத்துக்கே என்னை கொண்டுசென்றுவிடும். இளையராஜாவைப் பற்றி கங்கை அமரன் அவர்கள் எழுதியவைகள் நினைவலையில் வந்துமோதுகின்றன.
புதியவன்,
இப்படித்தான் எனக்கும் நிகழ்கிறது…..
பழைய பாடல்களின் விசேஷம் இது.
அந்த பாடல்களை எங்கே, எப்போது மீண்டும்
கேட்டாலும்/பார்த்தாலும்,
நாம் முதன் முதலில் இதை எந்த சூழ்நிலையில்
பார்த்தோம் என்பது உடனே நினைவிற்கு வந்துவிடுகிறது.
பலருக்கும் இதே அனுபவம் இருக்கும் என்றே நினைக்கிறேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Thanks Sir, Start the day with good song
நல்ல பதிவு. நன்றி.