…
…
“இந்த உலகமே ஒரு நாடக மேடை… அதில் நாமெல்லாரும் நடிகர்கள்…”
என்று பெர்னார்டு ஷா (?) ஒரு முறை கூறி இருந்தார்…
அதிலும் இந்த அரசியல்வாதிகள்
போடும் வேடமும்….. மாற்றும் காஸ்டியூமும்….அய்யோ பாவம்…!!!
ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் வரும்போது அவர்கள் போட
வேண்டிய வேஷம் இருக்கிறதே…
இதையெல்லாம் விரும்பித்தான் போடுகிறார்களா
அல்லது “நான் உங்கள் வீட்டுப் பிள்ளை” என்று
மக்களை ஏமாற்ற வேண்டிய கட்டாயமோ ….???
பேசாமல், ஒரே நாடு, ஒரே அரசு, ஒரே மதம், ஒரே மொழி,
என்றெல்லாம் சொல்வது போல –
இந்தியா முழுவதும் ஒரே குல்லாய் or தொப்பி or தலைப்பாகை
என்று ஒரு ரூல் கொண்டு வந்து விட்டாலென்ன…?
நிஜமாகவே அவர்கள் நிலையை பார்க்க பரிதாபமாகத் தான்
இருக்கிறது….
(ஒரு வேளை அவர்களுக்கு ஜாலி’யாக இருக்கிறதோ…?????????? )
கீழே நேற்று ராஜஸ்தானில் –



..
இரண்டு மாதம் முன்னதாக கர்நாடகாவில் –
..



….
“பெரிசே” அவ்வளோ செஞ்சா…
“எளசு.. நாங்க இது கூட செய்ய மாட்டோமா” …
– என்று இளைய தலைவர்…..!!!
…





பின் குறிப்பு –
வேறு வேலை இல்லையா உங்களுக்கு என்று கேட்டு விடாதீர்கள்…
நிறைய்ய்ய்ய்ய்ய இருக்கிறது…
இருந்தாலும், இடையிடையே கொஞ்சம் “காமெடி” எஃபெக்டும்
தேவையாக இருக்கிறதே…!……. இல்லையா…??? 🙂 🙂 🙂
(இதற்கப்புறம் 2 நாட்கள் சீரியசாகவே எழுதிக் கொண்டிருக்கலாம்…! )
.
——————————————————————————–



///பேசாமல், ஒரே நாடு, ஒரே அரசு, ஒரே மதம், ஒரே மொழி,
என்றெல்லாம்…..//
கொண்டு வர கண்டிப்பாக முடியாது. ஏனென்றால்,
///இந்தியா முழுவதும் ஒரே குல்லாய் or தொப்பி or தலைப்பாகை
என்று……///
இத்தனை இருக்கும் போது…..
முடியும் என்று நினைக்கிறீர்கள்…?
ஏதோ திசைதிருப்பும் வேலை நடக்கிறதோ என்று சந்தேகமாக இருக்கிறது.
பிங்குபாக்: நாடகமே உலகம்….ஆனால் பாவம்…ஊருக்கு ஊர் தலைப்பாகையை மாற்ற வேண்டியிருக்கிறதே …!!! – TamilBlogs
ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில்
ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள் ?
இதிலெல்லாம் நாங்கள் மயங்குவதாக இல்லையென்று
மக்கள் தான் தலையிலடித்து அவர்களுக்கு சொல்ல வேண்டும்.
ஒரு ஆசாமி சென்னைக்கு வந்து மஹாபலிபுரம் அருகே கூட்டம் போட்டு ஒரு மணி நேரம் ஹிந்தியில் லெக்சர் அடித்துக் கொண்டிருக்கிறார். பலர் பல்லிளித்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஏமாற்றாமல் வேறேன்ன செய்வர் ? இளிச்சவாயர்கள் அகப்படுகிறார்கள்; கிடைத்தவர் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த உலகமே ஒரு நாடக மேடை என்று சொன்னது பெர்னார்டு ஷா இல்லை
All the world’s a stage,
And all the men and women merely players;
They have their exits and their entrances,
And one man in his time plays many parts .
from -.As you Like It
Shakespeare
நன்றி நண்பரே.
எப்போதோ படித்தது…சரியாக நினைவில் இல்லை…
சந்தேகம் காரணமாகத்தான் ..? என்று கேள்விக்குறி போட்டிருந்தேன்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்