நாளைய உலகம் இப்படித்தான் இருக்குமோ…?


டெக்னாலஜி போகிற வேகத்தைப் பார்த்தால் – நாளைய உலகம்
இப்படித்தான் இருக்குமோ … என்று தோன்றுகிறது…!!!

.
————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to நாளைய உலகம் இப்படித்தான் இருக்குமோ…?

  1. பிங்குபாக்: நாளைய உலகம் இப்படித்தான் இருக்குமோ…? – TamilBlogs

  2. bandhu's avatar bandhu சொல்கிறார்:

    இது நாளைய உலகம் அல்ல. இன்றைய உலகம். அதிகம் போனால் ஆறு மாதம். முழுமையாக இந்தியாவில் இது வந்து விடும். அமேசான், கூகுல் , ஆப்பிள் — மூன்று ஜாம்பவான்களும் இந்த டிவைஸ் களை விற்பதில் மும்முரமாக இருக்கிறார்கள். எப்படி பார்த்தாலும், இந்தியா வை விட பெரிய சந்தை இல்லை. எனவே, ஆறுமாதத்தில் முழுமையாக இங்கு இது வந்து விடும் என நம்புகிறேன்.

  3. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    நான் 1999ல் மொபைல் உபயோகப்படுத்தியபோது அது பாதி செங்கல் அளவு இருந்தது. 96ல் நாங்கள் எதிர்பார்த்தது, பெர்சனல் கணிணிக்குப் பதில் கையடக்க கணிணி, ஆனால் ஆபரேடிங் சிஸ்டம் போன்றவை இருக்காது, அதற்கு மைக்ரோ சாஃப்ட் சர்வரை நேரடியாக கனெக்ட் செய்யணும் என்று (அதாவது சாஃப்ட்வேர் பைரசியைத் தடுப்பதற்காக). ஆனால் 2002ல் ஸ்மார்ட் போன் வர ஆரம்பித்துவிட்டது. 2008க்குப் பிறகு அபரிமித வளர்ச்சி செல்போன்களின் மூலம். டாக்சி, ஆட்டோ போன்றவற்றை ஊபர், ஓலா மூலம் இவ்வளவு சுலபமாக செய்யமுடியும் என்று கனவு கண்டோமா?

    எதிர்காலத்தில் என்ன டெக்னாலஜி வரும் என்பது சொல்வது கடினம். அவ்வளவு வேகத்தில் டெக்னாலஜி போய்க்கொண்டிருக்கிறது. விளக்கை அல்லது எல்லா எலெக்டிரானிக் டிவைஸ்களை ஆன்/ஆஃப் செய்ய ரிமோட் என்பது சாதாரணமாக எல்லோரும் உபயோக்கிக்கும்படி இருக்கும். பெட்ரோல் வாகனங்கள் (கார் போன்றவை) மிகவும் குறைந்து பேட்டரி கார்கள் வரும்.

    நம்ம ஊர்ல, பெரு விவசாயம் வந்தால் (அதாவது 100 ஏக்கருக்குக் குறையாமல் ஒருவரிடம் இருந்தால்) ஆட்டமேஷன் சாத்தியம். இது 30-40 வருடங்களுக்கு முன்பே மேலை நாடுகளில் சாத்தியப்பட்டுவிட்டது. ஆட்டமேஷன் அதிகமாக அதிகமாக, பணியாளர்களின் தேவை மிகவும் குறைந்துவிடும். இதுதான் நம் நாட்டுக்கு வரப்போகும் ஆபத்தாக நான் நினைக்கிறேன்.

    மற்றபடி நீங்கள் வெளியிட்டுள்ளது என்னைப் பொறுத்தவரையில் ஜுஜுபி. எந்த நேரத்திலும் இங்கு வந்துவிடும்.

  4. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    போளி செய்வது ராக்கெட் சயன்ஸ் இல்லை. இதில் ஆட்டமேஷன் வந்து, தரமாக மிஷின்கள் மூலம் செய்தால், பல பிராண்டுகளுக்கு இங்கு வேலை இல்லை. கிச்சன் ஆட்டமேஷன் விரைவில் வந்துவிடும் என்று நம்புகிறேன்.

    இப்போ மக்களை, உணவு ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வழக்கத்தை, பழக்கமாக்கிக்கொள்ள டிரெயின் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன் (ஸ்விக்கி, ஸொமட்டோ போன்று). 5-10 வருடங்களில், பெரும்பாலும் உணவை ஆர்டர் செய்வோம் (நகரங்களில், அதிலும் சென்னை, கோவை போன்று) என்று தோன்றுகிறது. இப்போதே ஆர்டர் செய்தால், காலை உணவு (நான் சொல்வது நம் இட்லி, தோசை வகையறா) 15 நிமிடங்களுக்குள் வந்துவிடுகிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.