…
…
மூன்றாவது அணி பற்றி பேசினீர்களா என்று ராவி’டம் செய்தியாளர்கள் வினா எழுப்பினால், அவர் கடுப்படிக்காமல் என்ன செய்வார்….
—–
மூன்றாவது அணி குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்குப் பதிலளித்த சந்திரசேகர ராவ், ”நாங்கள் 3வது, 4வது அல்லது 5வது அணியை உருவாக்கப் போவதாக எப்போது கூறினோம்…?
3-வது அணி என்ற பேச்சு ஊடகங்களால் உருவாக்கப்பட்டது. மூன்றாவது அணியை உருவாக்கப் போவதாக எந்த இடத்திலும் நாங்கள் அறிவிக்கவில்லை….. ”
பின் எதற்காக வேலை மெனக்கெட்டு ஹைதராபாதிலிருந்து சென்னை வந்தார் என்று உங்களுக்கு அவசியம் தெரிந்து கொள்ள வேண்டுமா…?
கீழேயுள்ள தலைப்புச் செய்திகளை பாருங்களேன்….
தன்னாலே புரிந்து விடும் 🙂 🙂
———————————————————————

—————————————————-

—————————————————-
கீழே, திரு.ஸ்டாலினை சந்திக்க திருவாளர் ராவ் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்….அவர் கூட, பக்கத்தில்
யார், யார் இருக்கிறார்கள் என்று தெரிகிறதா …?
———————————

————————————
இது என்ன சங்கர மடமா என்ன – பஜனை கோஷ்டிகள், பக்தகோடிகள், சீடர்கள் உடன் இருக்க…?
இது திமுக என்கிற கோடிக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட, மாபெரும் சுயமரியாதை இயக்கம்….
கூட இருப்பது – இடதுபக்கம் மகன் திரு.உதயநிதி…… வலதுபக்கம் மருமகன் திருவாளர் சபரீசன்…. 🙂 🙂
—————————————————————————————————————————–



// இது என்ன சங்கர மடமா என்ன – பஜனை கோஷ்டிகள், பக்தகோடிகள், சீடர்கள் உடன் இருக்க…? // உண்மையைத் தானே கூறி இருக்கிறார்கள் …? இயக்த்தில் வாரிசுகள் மட்டுமே முக்கிய இடத்தில் இருக்கலாம் என்பது தானே அவர்களது அடிப்படை காேட்பாடு …!!
கூட்டத்தைக் கூட்ட குவார்ட்டரும் ..காேழி பிரியாணியும் என்பது நடைமுறை தியரி …அது பாேல மூன்றாவது அணி என்று பாவ்லா காட்டி …வழுக்க … பிரியாணியும், வறுத்த மீனும் … என்பது புது தியரியா இருக்குமாே …?
கா.மை சார்… எனக்குப் புரியாதது, எப்படி நீங்கள் மூன்றாவது அணி பற்றிப் பேசத்தான் ராவ் கருணானிதி மடத்துக்கு வந்தார் என்று சொல்கிறீர்கள்?
ராவ், ஏற்கனவே தன் மகனை முன்னிறுத்துகிறார். எப்படி குடும்ப ஆதிக்கத்தை சுலபமாக எல்லா இடங்களிலும், கட்சி, ஆட்சி போன்றவற்றில் கொண்டுவருவது என்பதைப் பற்றிப் பேச வந்திருப்பார். அதற்கு ஏற்றபடிதான், ஸ்டாலின் மனைவி துர்கா, மருமகன், மகன் போன்றோர் சூழ்ந்து டிரெயினிங் கொடுத்திருப்பார். இதை சுலபமாகக் கணித்துவிடலாமே.
எப்படி அடுத்தவர் சொத்துக்களைப் பறிப்பது (உதயநிதி பறித்த சொத்துக்கள் சபரீசன் பறித்தவை) என்பதைப் பற்றியும் டிரெயினிங் கொடுத்திருக்கலாம்.
தமிழைக்கூட தவறில்லாமல் எழுதத்தெரியாத ஆசிரியர்கள் உள்ள மடம் தேட்ஸ்தமிழ் போலிருக்கிறது.
புதியவன்,
ராஆஆஆவ், மகளையும் அரசியலில் நுழைத்திருக்கிறாரே – மறந்து விட்டீர்களே… 🙂 🙂
தெலங்கானாவை அவர்கள் வசம் ஒப்படைத்து விட்டு, இவர் டெல்லியில் பர்த் தேட மூன்றாம் அணியின் மூலம் முயற்சிக்கிறார்.
அங்கே ஏற்கெனவே பழந்தின்று கொட்டை போட்டவர்கள் நிறைய பேர் காத்திருக்கிறார்கள்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
பிங்குபாக்: நம்புங்கள் ராவ்’-ஐ – பிரியானியும், வறுத்த மீனும் சாப்பிடத்தான் ஹைதராபாதிலிருந்து வந்தார்… –
When tn was misruled by a criminal u never had the courage to say any thing about that u never wrote anything about that but u people can say anything about dmk and karunanidhi because they will never worry about what dogs r barking about.
John,
// dogs r barking //
This is how you view when comments are made against your party.
As a DMK man you have proved what you are capable of
and what is your quality
இங்கே இப்படி ..! அங்கே : பிரதமர் அவ்வளவு கூறியும் …குஜராத் முதல்வர் ” நாரதர் ” அந்தக்கால கூகுள் என்கிறார் …! இவருக்கு ஒரு படி மேலே பாேய் குஜராத் சட்டசபை சபாநாயகர் கூறுகிறார் : // அம்பேத்கரையும், மோடியையும் பிராமணர் என்றே அழைக்கலாம்… பாஜகவின் அடுத்த சர்ச்சை ரெடி // …. https://tamil.oneindia.com/news/india/b-r-ambedkar-was-brahmin-claims-gujarat-speaker-318485.html விரும்பினால் நிறைய படித்தவர்கள் பிராமணர் என்ற முத்திரையை வாங்கிக்கலாமா …? எதனால் இப்படி ..?
இவர்கள் வளியவந்து ஏன் ஜாதியை நுழைக்கிறார்கள். எதிர்மறையான வற்றிற்கும் உதாரணங்கள் எதிர் கட்சிகள் கொடுக்க வாய்ப்பிருக்கே.
அப்பொழது என்ன சொல்லுவார்கள்.
அவர்களை குற்றம் சொல்லுவார்களா? அல்லது தன் வாயிலேயே போட்டுக்கொள்வார்களா என்று பார்க்கனும்.
Kaviri mainthan sir r u not ashamed of ur self to write about a casual meal given to a cm of an indian state where r u standing may be ur house hold never ever had the minimum amount of manners to give even a cop of water.
ஜான் – நீங்க எழுதினதைப் பார்த்து உங்களுக்கே சிரிப்பு வரலையா? சாதாரண சாப்பாடு சாப்பிட ஒரு மாநில முதல்வர், தமிழக எதிர்கட்சித் தலைவரை/திமுக செயல் தலைவரைச் சந்திக்க வந்தாராம். அவரும் ‘தமிழன் பாரம்பர்யத்தை’ ஒட்டி, சாப்பாடு போட்டாராம். போட்டோ எடுக்கும்போது மருமகன், மகன் எல்லோரும் வந்து போஸ் கொடுத்தார்களாம்.
சிரிப்பு பின்னூட்டத்துக்கு ஏதேனும் பரிசு கா.மை சார் அனொன்ஸ் பண்ணியிருக்கிறாரா என்று நான் செக் பண்ணணும்.
John,
உங்கள் பிரச்சினை என்ன…?
திமுகவை விமரிசிக்கக்கூடாது என்கிறீர்களா…?
ஏன்…?
அவர்கள் பொய் சொல்லவில்லையா …?
சந்திப்பில் மூன்றாவது அணி பற்றி அவர்கள் பேசவில்லையா…?
பிரியானியும், மீன் வறுவலும் சாப்பிடத்தான் ராவ் ஹைதராபாதிலிருந்து
சென்னை வரை வந்தாரா…?
ராவுக்கு இன்று தான் மாநில சுயாட்சி என்று
ஒரு சப்ஜெக்ட் இருப்பதே தெரிந்ததா..?
பொய் பேசினால் விமரிசனம் வரத்தான் செய்யும்.
கிண்டல், கேலி – எல்லாமும் கூட வரத்தான் செய்யும்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
John,
Would you pleaese give any reasonable explain how you are different from the BJP bakht?
Hava you got any moral ground to claim that the DMK supportrs(bakhts) are good.
Distresstful.
Distresstful. = Distressful.
A state which was speaking one language telugu was partioned to please one opportunistic man
mr chandrasekara ra.o He is running the state of Telengana as his own family. Most the relatives
are accomodateed in plum posts. He is now eyeing Delhi which in his own capacity is a distant dream. So he is wooing people like Mamta and Stalin so that he can fulfill his ambitions. But people will not vote for this opportunistic people who can go to any extent for power.
Telengana was revived during UPA rule to help congress . But Rao back stabbed Sonia and hyjacked the political power. He double crossed. If you look at the pattern of agitation it will be to divert from some issue like 2 G. Rao took advantage. All narrow minded politicians.
அப்படி இல்லை. தெலங்கானா எப்போதும் ஆந்திராவிலிருந்து பிரிக்கப்படவேண்டியது. ஆனால் காங்கிரஸ் காலம் தாழ்த்தியது. ராவ் இந்தப் பிரச்சனையை முதன்மையாக எடுத்து பிரிவினை வாதம் பேசி வெற்றிபெற்றார். அதுமட்டுமல்ல, காங்கிரஸ், ராவ் தனக்கு உதவியாக இருப்பார் என்று நம்பி ஏமாந்தது. பிரித்ததனால் ஆந்திராவிலும் அதன் புகழ் மங்கியது.
மற்றபடி சந்திரசேகர ராவ், தெலுங்கானாவின் கருணானிதி/திமுக அரசியல்வாதிதான். (இருவரும் பிரிவினை, மொழி வாதம் பேசி மக்களைப் பிரித்து ஓட்டு அறுவடை செய்பவர்கள்)