அத்தனை ஆய்வுகளுக்குப் பின்னருமா …. இத்தனை கொடுமை…..???



(டாக்டர் ரகுராம் ராஜன், இந்த புத்தக வெளியீட்டிற்காக சென்னை வந்திருக்கிறார்….)

நவம்பர் 2016-ல், 500-1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று
அறிவிக்கப்படும் முன்னர், செப்டம்பர் மாதம் ரிசர்வ் வங்கியின்
கவர்னர் பதவியை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலைக்கு
தள்ளப்பட்ட,

முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் டாக்டர் ரகுராம் ராஜன்
அவர்கள் “I do what I do…” என்கிற தலைப்பில் எழுதி
வெளியாகியுள்ள புத்தகத்தில் பதிவிட்டுள்ளதாக சில செய்திகள்
வெளிவந்துள்ளன…

தான் பதவியில் இருக்கும்போதே, ரூபாய் நோட்டுகளை
செல்லாததாக அறிவிப்பது குறித்து தனது கருத்துகளை மத்திய
அரசு கேட்டதாகவும், அது பற்றிய தனது விரிவான
ஆய்வுக்குறிப்புகளை தான் கொடுத்ததாகவும் அவர் கூறி
இருக்கிறார்.

எதிர்பார்க்கும் இலக்குகளை எட்டுவதற்கு, ரூபாய் நோட்டுகளை
வாபஸ் பெறுவதை விட சிறந்த மாற்று வழிகள் இருப்பதாக,
தான் தெரிவித்ததாகவும்,

ஒருவேளை – அந்த ஆலோசனைகளை ஒதுக்கி விட்டு, வாபஸ்
பெறுவது என்கிற தீர்மானத்திற்கு அரசு வருமேயானால், அதற்கு
தேவைப்படும் குறைந்தபட்ச கால அவகாசம் குறித்தும்,

எடுக்கவேண்டிய முன் நடவடிக்கைகள் குறித்தும் தான்
விவரமான குறிப்புகளை மத்திய அரசுக்கு தயாரித்து
கொடுத்திருந்ததாகவும், அவர் கூறி இருக்கிறார்….

டாக்டர் ரகுராம் ராஜன் இத்தனை முன்னெச்சரிக்கை செய்தும்,
நடந்திருக்கும், இந்த படுமோசமான ஒரு அனுபவத்திற்கு,
யார் பொறுப்பேற்க போகிறார்கள்…?

ஒரு வலுவான எதிர்க்கட்சியோ, மக்கள் நம்பிக்கையைப் பெற்ற
உறுதியான மாற்று தலைவரோ இல்லாத ஒரு துர்பாக்கிய நிலையில் இந்த நாடு இன்னும் என்னென்ன சங்கடங்களை சந்திக்க வேண்டுமோ….!

இது குறித்து தினமணி நாளிதழில் வெளிவந்துள்ள ஒரு
செய்தியின் ஒளிநகல் கீழே –

Jpeg

Jpeg

 

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to அத்தனை ஆய்வுகளுக்குப் பின்னருமா …. இத்தனை கொடுமை…..???

  1. viswa's avatar viswa சொல்கிறார்:

    itha sonna nampala thaesa throkinu sollunanuga

  2. paamaranselvarajan's avatar paamaranselvarajan சொல்கிறார்:

    ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் 99 சதவிகித பழைய நாேட்டுகள் வங்கிக்கு திரும்பி விட்டன என்று கூறுகையில் கறுப்புப் பணம்
    எங்கே? கறுப்புப் பணம் வெள்ளையாகிவிட்டதா அல்லது கறுப்புப் பணமே இல்லையா? ….

    பா.ஜ.க. மற்றும் பலராலும் ” வாயே திறக்காதவர்…மெளனம் காப்பவர் ” என்று விமர்சிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் திரு.மன்மாேகன் சிங் கூட சிலவேளைகளில் வாய் திறந்தது உண்டு …. ஆனால்
    அத்தனை ஆய்வுகள் … விமர்சனங்கள் … பலரின் எதிர்ப்புகள் என்று வந்த பின்னும் பணமதிப்பு நீக்கம் குறித்து பிரதமர் மோடி இன்னும் வாய் திறக்காமலே….மெளனமாக இருப்பது ஏன்? இன்னும் பலவற்றிற்கும் கூட இதே நிலை என்பது ஏன் … ?

  3. இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

    கண்டதை எல்லாம் விவாதம் செய்யும் தொலைக்காட்சிகள்
    இவற்றை எல்லாம் விவாதிக்க பயப்படுவதேன்…?
    பயமா அல்லது விலைக்கு வாங்கப்பட்டு விட்டார்களா ?

  4. Prakash P's avatar Prakash P சொல்கிறார்:

    NEET na ennanae ungalukku teriyatha?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்ப பிரகாஷ்,

      —————–
      “நீட்” னா என்னன்னே உங்களுக்கு தெரியாதா…? ”

      —————–

      இந்த ஒரு வார்த்தையை தமிழில் எழுதக்கூட நேரமோ, பொறுமையோ இல்லாத நீங்கள் என்னை
      கேள்வி கேட்கிறீர்களா…?

      முதலில் “நீட்” பற்றி உங்களுக்கு என்ன தெரியும்…?
      அதைச் சொல்லுங்கள்…

      இதில் யார் என்ன செய்ய வேண்டும்…?
      அதைச் சொல்லுங்கள்..

      யார் இதற்கு காரணம்…?
      அதைச் சொல்லுங்கள்…

      இதற்கு எப்படி தீர்வு காண முடியும்..?
      அதைச் சொல்லுங்கள்..

      எந்தக் கட்சித்தலைவராவது, தொண்டராவது இதை எதிர்த்து ஜெயிலுக்கு போயிருக்கிறார்களா…? ஏன் போகவில்லை…?
      அதைச் சொல்லுங்கள்…

      பள்ளிக்கூட பிள்ளைகளை தூண்டி விடுவதன் மூலம் மட்டும் சுப்ரீம் கோர்ட் உத்திரவை மாற்றி விட முடியுமா…?
      அதைச் சொல்லுங்கள்…

      கயவாளித்தனம் செய்யும் அரசியல்வாதிகளுக்கு உறுதுணையாக நான் இங்கே இடுகை போட வேண்டும்
      என்று எதிர்பார்க்கிறீர்களா…?

      ஆங்கிலத்தில் ஒற்றை வரியில் கேள்வி கேட்பதை விட்டு விட்டு – முதலில் முழுமையாக உங்கள் கருத்தை சொல்லுங்கள்…

      பிறகு நான் “நீட்”னா என்னன்னே
      எனக்கு தெரியுமா தெரியாதா என்று சொல்கிறேன்.

      -காவிரிமைந்தன்

      • Sundar Raman's avatar Sundar Raman சொல்கிறார்:

        Honest reply . Now the statistics says , the village boys stands benefited by this NEET test, more students got into medical from various districts except salem, Namakal, .
        I have told you before also, this Javadekar is a useless minister , Irani would have been far better , she uploaded all the books in to the net. Like that for one year , HRD should have conducted camps , special classes , motivations speeches , tips to approach the exams in rural areas, hand books , and they should have .allotted few hundred crores. . There should haven been regular advt in news paper and tv’s. State govt was any way non functional ( Pandiarajan did not live up to his name on this ) .

        Sweet revenge would be – TN students getting all the rank and performing well in the exams. But the political parties taking the students for a ride . When I passed out , 10th and 11th both came out of the school – so heavy rush in polytechnics and ITI. There were no protests , no editorials , no strike . We all some how studied something – no suicide .
        And lastly the conspiracy angle , it would be interesting to know , what is the custom in Anita’s family – cremation or burial . If it has been burial, why did they cremated ?

        Also it would be interesting to know who all runs medical colleges in TN ?
        And Lastly why that theif Desai is still a chief of indian medical council ? he was caught with gold, money …how these people comes back ? really a big puzzle.

  5. paamaranselvarajan's avatar paamaranselvarajan சொல்கிறார்:

    பெண் பத்திரிக்கையாளர் கெளரி லங்கேஷ் … படுகாெலை .. நாடு எதை நாேக்கி … நகர்கிறது …?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      செல்வராஜன்,

      அதிகாரம் நம்மிடம் என்கிற திமிரில்,
      எதிர்ப்பவர்களை அடக்கும் முயற்சி…!
      மெஜாரிடி மக்களை மூளைச்சலவை செய்து,
      இந்த வழி தான் சரியானது என்று ஏற்றுக்கொள்ள வைக்கும் முயற்சி… வேறென்ன சொல்ல…?

      -காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.