…
…

…
மிகவும் வித்தியாசமான ஒரு குரலுக்கு சொந்தக்காரர் கண்டசாலா…( கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் ( 1922-74 )
தெலுங்கு பட உலகில் மிகப்புகழ்பெற்ற இசையமைப்பாளர், பாடகர். சங்கீதத்தையே ஜீவிதமாகக் கொண்ட தந்தையிடமிருந்து பெற்ற இயற்கை குரல் வளத்துடன், சாஸ்திரீய சங்கீதமும் பயின்றவர்.
தெலுங்கு திரையுலகில் உச்சத்தில் இருந்த அவர் தெலுங்கோடு நின்று விடாமல், 1950-60 -களில் தமிழ் திரையுலகிலும் பல வித்தியாசமான பாடல்களை தந்தார்.
கேட்டவுடனே அவரது தனித்தன்மை விளங்கும் அளவிற்கு வித்தியாசமான குரல் ….. தமிழில் சிதம்பரம் ஜெயராமன் அவர்களைப் போல்…!!
தெலுங்கர்கள் தமிழில் பாடுவது அதிசயமில்லை என்றாலும் கூட அவருடைய தமிழ் உச்சரிப்புகள் எடுபடவில்லை…
அதையும் மீறி, தமிழர்கள் அதனை ஏற்றுக்கொண்டு ரசித்தார்கள். காரணம் அவரது கரகரத்த, வித்தியாசமான குரல்.
மேலும், இவர்கள் புகழ்பெற்றிருந்த 50 -60 களில், தமிழ் தெலுங்கு என்றெல்லாம் வித்தியாசம் பார்ப்பவர்கள் மிகக்குறைவு.
இன்றைய என் விருப்பத்தில் கண்டசாலா அவர்கள் தனியாகவும், மற்றவர்களுடன் சேர்ந்தும் பாடிய சில புகழ்பெற்ற பாடல்கள் –
அனார்கலியில் ஆதிநாரயண ராவ் சாஸ்திரீய இசை பின்னணியில் –
எனக்கு மிகவும் பிடித்த கல்கியின் கள்வனின் காதலி படத்திலிருந்து
பானுமதியுடன் இணைந்து பாடியது
இதே பாடல் தனியாக – ( சிவாஜிக்கு கண்டசாலா பாடுவது பார்க்கவே சிரிப்பு வரும்…)
சண்டிராணியில் – பானுமதியுடன் இணைந்து பாடியது –
மறக்கவே முடியாத தேவதாஸ் சோகப்பாடல் –
அமைதி இல்லாதென் மனமே – பாதாள பைரவி



that karakara voice suited best for bagavath gita rendition and even now if we hear it, it looks like other voices cannot match that… which is played in tirumala even today… he will be remembered for this ever.
உண்மை தான் ஸ்ரீநி,
காலம் உள்ளளவும் கண்டசாலாவின் குரல் திருப்பதி மலைச்சாரலில் எதிரொலித்துக் கொண்டே இருக்கும். அதே போல் தான் எம்.எஸ். அவர்களின் குரலும்….
நான் கூட, முதலில் கண்டசாலாவின் பகவத் கீதை சாம்பிள் எடுத்துப் போடலாமென்று முயற்சித்தேன். எல்லா வெர்ஷனுமே நீளமாக இருக்கிறது… எனவே முயற்சியை கைவிட்டு விட்டேன்.
இருந்தாலும் இப்போது நீங்கள் இங்கே அதைப்பற்றி கூறி இருப்பதால், இதை படிப்பவர்கள் தேடி, பார்ப்பார்கள் /கேட்பார்கள்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்