…
…

…
மத்திய அரசு வெறுமனே இத்தகைய செய்திகளை மீண்டும் மீண்டும்
வெளியிடுவதை நிறுத்தி விட்டு,
இனியும் நமது வீரர்கள் அநியாயமாக கோழைகளால் கொல்லப்படுவதை தவிர்க்கவும்,
இந்த நாட்டின் கௌரவத்தை காக்கவும்,
உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மக்கள்
விரும்புகிறார்கள்….

…
அதற்கும் முன்னதாக, முதல் நடவடிக்கையாக –
பாதுகாப்பு அமைச்சகத்தை இனியும் ஒரு part time அமைச்சரின்
பொறுப்பில் விடாமல்,
குறைந்த பட்சம் ஒரு முழுநேர ( full time ) பாதுகாப்பு
அமைச்சராவது நியமிக்கப்பட வேண்டும் என்று
எதிர்பார்க்கிறார்கள்….



நீங்கள் சொல்வது சரியே.
35 லிருந்து 55 ஆக தீவிரவாதிகளின் முகாம்கள் அதிகரித்து விட்டன
என்று அரசு செய்தி ஒளிபரப்புவதை விட, இத்தனை முகாம்களை
அழித்து ஒழித்து விட்டோம் என்ற செய்தி வெளிவருவதையே
மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தேவை – சவடால் பேச்சல்ல. செயலாற்றல்.