” பச்சை மா மலை போல் மேனி ” – அகம் பேண்ட் அருமையான ஒரு இசைக்கோப்பு …

எதேச்சையாக கேட்க / பார்க்க நேர்ந்தது –
ஒரு அருமையான இசைக்கோப்பு ..
திரு.ஹரிஷ் சிவராமகிருஷ்ணனின் அகம் பேண்ட் –
நீங்களும் ரசிக்க ….

“பச்சை மா மலை போல் மேனி “-
“ஸ்ரீரங்கபுர விஹார…..”

கூடவே டி.எம்.எஸ். / சிவாஜி காம்பினேஷனில்
பார்க்க வேண்டாமா…..!!!

https://youtu.be/Pfgfff_MZ00

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ” பச்சை மா மலை போல் மேனி ” – அகம் பேண்ட் அருமையான ஒரு இசைக்கோப்பு …

  1. Aekaanthan ஏகாந்தன்'s avatar Aekaanthan சொல்கிறார்:

    ஹரிஷ் சிவராமகிருஷ்ணனின் பச்சைமாமலைபோல் மேனி.., ஸ்ரீராகமோ.. -இரண்டுமே ப்ரமாதம். நல்ல இசை அனுபவம். நமது பக்திப்பாசுரங்கள் இப்படி புதிய பேண்டுகளின் மூலம் பாடப்பட்டால், இசைக்கப்பட்டால் எளிதாகப் போய்ச்சேரும் இளைஞரிடம். அதுதான் ஆண்டவனின் விருப்பமோ ஒருவேளை…!

  2. தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

    ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் ஆலாப் எடுக்கும்போதே ரங்கபுரவிஹாரா சாயல் வந்துடுத்து. அதில ‘பச்சைமா மலைபோல் மேனி’ கொண்டுவந்து, ரங்க புரவிஹாரா பாடியது ரொம்ப நல்லா இருந்தது. நான் முத்துசுவாமி தீக்ஷிதரின் இந்தப் பாட்டை (ரங்கபுர விஹாரா) எம்.எஸ்.எஸ் பாடித்தான் கேட்டிருக்கிறேன். (அப்புறம் கொஞ்சம் அழுத்தமான குரல்ல, கொஞ்சம் அதிகாரமா இருக்கறமாதிரி, அருணா சாய்ராம் அவர்கள் பாடிக் கேட்டிருக்கேன்). ஹரிஷ், ரொம்ப நல்லா அனுபவித்துப் பாடியிருக்கிறார். அந்தப் பாடலின் உணர்ச்சியைக் கொண்டுவந்திருக்கிறார். என்ன திறமை.. என்ன திறமை…

  3. D. Chandramouli's avatar D. Chandramouli சொல்கிறார்:

    I heard both the versions – Harish’s and TMS/Sivaji’s. Harish’s (my first time listening) is quite energetic and his alapana is fantastic. But, this song, Srirangapura Vihara, with guitar as accompaniment doesn’t gel well. A flute, on the other hand, enhances any type of music. As regards TMS/Sivaji combination, what to say? Both were born for each other. Can anyone ‘sing-act’ like Sivaji? Btw, when I was a teen-ager, I have heard MS singing Sri Rangapura Vihara. I think she alone could bring out the ‘deivagam’ in her music.

  4. தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

    @சந்திரமௌலி – எம்.எஸ்.எஸ். அவர்கள், நிறைய கர்நாடக இசைப் பாடகர்களைவிட வித்தியாசமானவர். பாடும் திறமை எல்லா ஸ்டார் கர்நாடிக் கலைஞர்களுக்கும் உண்டு. எல்லோரும் ராகத்தில் எக்ஸ்பர்ட்தான். எம்.எஸ்.எஸ்சை விட இன்னும் மேம்பட்ட திறமை (SCIENTIFICஆ ராக எக்ஸ்பர்ட் ஆக இருத்தல், கல்பனா ஸ்வரத் திறமை) உள்ளவர்களும் இருந்தார்கள், இருக்கிறார்கள். ஆனால், எம்.எஸ்.எஸ். அவர்கள், என்ன பாடுகிறோம், அந்தப் பாடல் எந்த உணர்ச்சியைத் தருகிறது, அதன் முழு அர்த்தம் என்ன என்று அறிந்து அதில் தோய்ந்து பாடும்போதே, கர்’நாடக இசைப் பாடலின் OBJECTIVEஆன ‘பக்தியையும், ‘Bபாவத்தையும் கொண்டுவந்துவிடுவார். இன்னொரு மொழிப்பாடல் ஆனாலும், இதே DEDICATION. இதனால்தான் அவருடைய பாடல், ‘தெய்வீகமாக’ நமக்குத் தெரிகிறது. அதுபோல, பாரம்பர்யத்தையும் அவர் மீறியதில்லை (சமயத்தில் கே.ஜே.யேசுதாஸ் அவர்கள், பாடலின் அர்த்தம் சரியாக இருக்கவேண்டும் என்று கொஞ்சம் பாரம்பர்யத்தைவிட்டு விலகியிருப்பார். அவரும் பெரிய திறமைசாலிதான்) அவர்தான், கர்நாடக இசையையும் மற்ற மொழி தெய்வீகப்பாடல்களையும் பாடி, எச்.எம்.வி இசைத் தட்டில் கொண்டுவந்து, ஓரளவு இந்தியா முழுவதும் தெரியக்கூடிய PROFESSIONAL ஆனார். அந்தத் திறமையோடு கூடிய, பணத்தைப் பெரிதாக மதிக்காமல் நிறைய CHARITY கச்சேரிகள் செய்வது, எப்போதும் எளிமை (கச்சேரிகளுக்கு மட்டும் அதற்குறிய விதத்தில் வருவார்) என்றிருந்த அவரது மனோபாவம், நமக்கு இன்னும் அவரை உயர்வாகக் காண்பிக்கிறது.

  5. Peace's avatar Peace சொல்கிறார்:

    Enjoyed the post!
    Another Star here!

  6. Peace's avatar Peace சொல்கிறார்:
    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்ப Peace,

      அற்புதமான ஒரு இசைக்கலைஞரை அறிமுகப்படுத்தியதற்கு
      மிக்க நன்றி…. மிகவும் வித்தியாசமான குரல்… இழைந்தோடும் பாவம்…
      பிரமாதம்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.