
2005-ஆம் ஆண்டில், “கற்றதும், பெற்றதும்” தலைப்பில்
பல விஷயங்களைப்பற்றி சுவையாக தொடர்ந்து
எழுதிய சுஜாதா அவர்கள் –
ஒரு கட்டுரையில், 2010-ஆம் வருடத்தில்,
இந்தியா / உலகம் எப்படி இருக்கும் என்பது பற்றி,
கிண்டலாக ஆருடம் ( ! ) கூறி இருந்தார்….
அதைப்படிக்கும்போதே – கூடவே,
சுஜாதாவின் கற்பனையும், நையாண்டியும்
எந்த அளவிற்கு இன்று – 2016-ல் உண்மையாகி இருக்கின்றன
என்பதையும் யோசித்துப் பார்ப்போமே… !
—————–
2010 என்பது அருகிலும் இல்லாத,
தூரத்திலும் இல்லாத
ஒரு ரெண்டுங்கெட்டான் எதிர்காலம்.
அதைப் பற்றி எழுதுவது
‘நிஜமாவதற்கும் பொய்த்துப் போவதற்கும்’
சம சாத்தியங்கள் உள்ளன.
புள்ளி விவரங்களை மட்டும் கவனித்து
எதிர் நீட்டினால் 2010ல் –
– செல் போன்கள் இரட்டிப்பாகும் ….
( பலமடங்கு …?)
– மக்கள் தொகை 118 கோடியாகும் ….
( 130 கோடி…)
– போக்குவரத்து அதிகரித்து நகரங்களில்
அனைவரும் மாஸ்க் அணிவோம் ….
( உண்மை – இருசக்கர வாகனங்களில் போகிறவர்கள்
அதைத்தான் இப்போது செய்கிறார்கள்…!! )
– பெண்கள் வருஷம்
மூன்று தினம் புடவை கட்டுவார்கள்…
( 🙂 🙂 … !!! )
– ஆண்கள் அதிக அளவில்
தலை முடியை இழப்பார்கள்….
(அவ்வளவு மோசமில்லை….! )
– ஒரு பெரிய மதக் கலவரம் இந்தியாவில் வரும்..
( நல்ல வேளை – அப்படியேதும் நடக்கவில்லை…)
– ராகுல் பிரதமர் ஆவார்…
(சுஜாதா இங்கே ஏமாந்து விட்டார்….
ராகுலை அவர் over estimate செய்து விட்டார்…)
– தமிழ்நாட்டில் அ.தி.மு.க அல்லது
தி.மு.க கூட்டணி ஆட்சி நடக்கும்.
( கூட்டணி இல்லை…மற்றபடி சரியே … !! )
– தயாரிப்பாளர்கள் பலரின் பிள்ளைகள்
படம் எடுப்பார்கள்…
(ஒன்றிரண்டு பேர் தான் தேறி இருக்கிறார்கள்…)
– அலுவலகத்தில் செய்வது அத்தனையும்
செல்போனில் செய்ய முடியும்.
(இன்னும் கொஞ்ச நாள்…. போக வேண்டும்…)
– கவிதைத் தொகுப்புகளில் காதல் குறையும்..
(கவிதைத் தொகுப்புகளையே காணோம்….)
– வாரப் பத்திரிகைகளில் தொடர்கதைகளும்
சிறுகதைகளும் அறவே நீக்கப்பட்டு,
முழுக்க முழுக்கப் பெண்கள் படங்களாக, ஒரிரண்டு
வாக்கியங்களுடன் வெளிவரும்….
( கிட்டத்தட்ட அந்த நிலைக்கு தான்
போய்க் கொண்டிருக்கின்றன….)
– செய்தித்தாள்கள் படிப்பதற்குக் காசும்,
இலவச பிஸ்கட் பாக்கெட்டும் கொடுப்பார்கள்.
(இங்கே என்றும் அது நடக்காது என்று நினைக்கிறேன்…)
– தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள்
வெளிநாட்டில் அதிகம் இருப்பார்கள்.
( விரைவில் அதுவும் நடக்கலாம்….)
– அரசியல் மேடைகளில் மட்டும்
தமிழ் உணர்வு மிச்சமிருக்கும்…
( அதுவும் தேர்தல் அறிக்கைகளில் மட்டும்….)
– மற்றொரு சுனாமி வரும்;
ஒரு கடலோர நகரம் அழியும்.
( தப்பினோம் – இயற்கைக்கு நன்றி…)
– முடிவெட்டுக்கு ஆயிரம் ரூபாய்
கொடுக்க வேண்டி வரும்….
( அந்த நிலை வர இன்னும் நீண்ட நாள் ஆகலாம்…)
– புத்தகங்கள் குறையும்.
(அவ்வளவு மோசம் இல்லை…)
– மருத்துவமனைகளில் இடம் போதாது…
( மருத்துவம், ஒரு வெற்றிகரமான வியாபாரம்
ஆகி விட்டதால், நிறைய மருத்துவமனைகள்
தோன்றிக்கொண்டே இருப்பதால் – இது நடக்கவில்லை…)
இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம்….
பிரச்சனை என்னவென்றால் –
2010ல் நான் பிழைத்திருந்து,
‘என்னய்யா.. அப்படிச் சொன்னார்,
நடக்கவில்லையே’
என்று என் வார்த்தைகளை
சர்பத்தில் கரைத்து குடிக்கக் காத்திருபார்கள்.
வயிற்றைப் புரட்டும்.
—————–
இந்த வார்த்தைகளைப் படிக்கும்போது மட்டும்,
அடடா இப்போது சுஜாதா சார் இல்லாமல்
போய் விட்டாரே – என்று நமக்குத்தான்
வயிற்றைப் புரட்டுகிறது.
சுஜாதா – சுஜாதா தான் –
அவர் போல் இன்னொருவர் மீண்டும்
என்றைக்கும் வர முடியாது…



2005 — ல் ” சுஜாதா சொன்னது மட்டும் போதுமா … ! எனக்கு போதாது … ? அதனால் — அய்யா … ! சுஜாதா பற்றி உங்கள் நினைவுகளும் — நீங்கள் சொன்னதும் — அவருடைய நெருங்கிய நண்பருமான தேசிகன் அவர்கள் கூறியதும் — சுஜாதா அவர்களுக்கு ” ஒரு திருவரங்கம் கோயில் ” என்றால் — உங்களுக்கு தஞ்சை பெரிய கோயிலில் பவுர்ணமியில் ரசித்தது போன்றவற்றை மீண்டும் — மீண்டும் படித்து உணர்வுபூர்வமான ரசனையில் ஈடுபட …. // சுஜாதா – சில நினைவுகள் ….
Posted on ஓகஸ்ட் 26, 2014 by vimarisanam – kavirimainthan // ….. இந்த இடுக்கையும் — தேவைதானே … ?
செல்வராஜன்,
மீண்டும் உங்களுக்கு நன்றி சொல்வதைத்தவிர
நான் வேறென்ன செய்ய முடியும்…?
எப்படி கண்டுபிடிக்கிறீர்கள் – தொடர்புள்ள பழைய இடுகைகளை…?
நிறைய புதிய வாசக நண்பர்கள் இந்த வலைத்தளத்திற்கு
வந்து கொண்டே இருப்பதால், சில சமயங்களில், தொடர்புடைய
பழைய இடுகைகளை நினைவுபடுத்திக் கொள்வது
மிகவும் பயனுள்ளதாகவே இருக்கிறது.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
Sujatha was a wonderful writer-I have read some short articles written by him — There was a touch of P G Wodehouse in his writing –He must have been Wodehouse’s ardent reader — Once I remember reading the phrase written by Sujatha ” thappi odi vandha kaidhi pol irundhan” PG Wodehouse used to write “he looked like an escaped convict” —
Most of the things he has said has come about — From the look of things we may go completely digital if not in our times —
JI Yes sujatha was a baffling genius
Amomg his best creations i consider
his thirukkural ….
All verses of thirukkural were translated in
his own grand style…….
The rich meaning of thirukkurals one thousand three hundred and thirty verses were given sharply >>>>
Book available in bharathi pathippagam chennai