திரு.ஸ்டாலின், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்ஜி சந்திப்பு …. – சு.சுவாமியின் அடுத்த நகர்த்தலா ?

.

.

” Hinduised DMK …!!! ”

திரு.ஸ்டாலின் –

” ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் அவர்களை எம் இல்லத்தில் வரவேற்றதில்
மகிழ்ச்சி அடைகிறேன். அவருடனான உரையாடல் அற்புதமாக
இருந்தது.”

ஸ்டாலின் விரும்பி அழைத்து ரவிசங்கர்ஜி வந்தாரா ?
அல்லது ரவிசங்கர்ஜி தாமாகவே விரும்பி, ஸ்டாலின்
அவர்களின் இல்லத்திற்கு வந்தாரா என்பதையும் –
ஸ்டாலின் தெளிவுபடுத்தி விட்டால்,

அவரது தந்தையின் பதட்டங்களையும் கவலைகளையும்
பெருமளவிற்கு குறைக்கலாம் அல்லது அதிகரிக்கலாம்…. !!!

( அவர் குலாம் நபி ஆசாத்-ஐ அழைக்க –
இவர் ஸ்ரீ ஸ்ரீ யை அழைக்க –

” ஆயிரம் வாசல் இதயம்
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் –
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது

ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை ” )

sri stalin-3

sri stalin-4

sri stalin-2

sri stalin-5

sri stalin-6

கையில் புத்தகம் -“நெஞ்சுக்கு நீதியா”
அல்லது “பகவத் கீதையா ….?

sri stalin -1

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

29 Responses to திரு.ஸ்டாலின், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்ஜி சந்திப்பு …. – சு.சுவாமியின் அடுத்த நகர்த்தலா ?

  1. இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

    கே.எம். சார்,

    இதுல நீங்க யாரு பக்கம் ?

  2. சேகரன்'s avatar சேகரன் சொல்கிறார்:

    ஒருவர் அரசியலில் மதத்தைக் கலப்பவர்
    இன்னொருவர் மதத்தில் அரசியல் செய்பவர்.

    எல்லாம் ஒரே குட்டையிலே ஊறிய ……
    சாரி
    ஒரே வெள்ளையில் போட்ட
    நாமம் – பட்டை
    இதிலே என்ன பகுத்தறிவு

    எல்லாம் வாழும் கலைதான்.

    பி.கு. : போனமாதம் அன்புமணியும் இதே சுவாமிஜியைத்தான் குடும்பத்தோடு பார்த்துவிட்டு வந்தார். பாமக + ஸ்டாலின் திமுக அணி அமையும்?

  3. சேகரன்'s avatar சேகரன் சொல்கிறார்:

    ஆமாம்? கோலம் போடுவதெல்லாம் பகுத்தறிக்குவுக்குள் வருகிறதா என்ன?

  4. சேகரன்'s avatar சேகரன் சொல்கிறார்:

    //கையில் புத்தகம்//
    குறிஞ்சிமலர் ஸ்க்ரீன் ப்ளேயா இருக்கக்கூடாதா?

    இப்பக்கூட அப்பாவுக்குத்தான் பர்ஸ்ட் ப்ரிபரன்ஸா?

    • ஜேசன்'s avatar ஜேசன் சொல்கிறார்:

      செம இன்டரெஸ்டிங் ஆ போகிறது. அங்கே ஜெ நக்கல் எடுக்க, அந்த நக்கலை மெய்ப்பிக்க இங்கே தனக்குத் தானே ஏதோ செய்து கொண்டிருக்கிறார் தனயன்! கொடுத்த பத்ம விருதுக்கு வஞ்சனை செய்யாமல், பழ, கரு.வுக்கு போன் போட்டு விட்டு பறந்து விட்டார் ஒருவர். இன்னொருவர் இன்று இவரை நேரிலேயே பார்த்து பேசி விட்டுப் போகிறார். கா.மை. சார் போல சரியான சிசுவஷன் பாட்டுப் போடத் தெரியல. ஒண்ணுமே புரியல உலகத்திலே- வா, அல்லது என்னதான் நடக்கும் நடக்கட்டுமே- வா? அல்லது வேறு ஏதாவதா? உங்கள் சாய்ஸ் எது கா.மை சர்?

      • சேகரன்'s avatar சேகரன் சொல்கிறார்:

        நக்கல்ன்னு
        அரசியல்ல அப்பாவைக்கூட நம்பக்கூடாது
        நமக்கு நாமே காப்பாத்திகணும்ன்ற குட்டிக்கதையத்தான சொல்றீங்க.

        யாரு சொன்னாலும் அந்தக் கதை சூப்பர்.

  5. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    ///கையில் புத்தகம் -“நெஞ்சுக்கு நீதியா”
    அல்லது “பகவத் கீதையா ….?///
    ரெண்டுமே இல்லை.

    “இது தலைவரிந் ராமாநுஜம் கதை! ஒருமுறை வாசித்தால் போதும்… வாழ்நாளில் இநிமேல் ஊங்கள் நிகழ்ச்சிகளில் கதைகளையே சொல்லமாட்டீர்கள்” எந்று தளபதி எச்சரிப்பது போல் உள்ளது

  6. R.Gopalakrishnan's avatar R.Gopalakrishnan சொல்கிறார்:

    If we keenly observe the dialogues of Ramanujar play one can visualize that MK wants to
    stress the message of his family unity. Especially for Alagiri.

  7. drkgp's avatar drkgp சொல்கிறார்:

    காசு சேர்ப்பதில் இவர் வெள்ளியங்கிரி மலைக்கார அதிபதிக்கு சலைத்தவர் அல்ல.

  8. CHANDRAA's avatar CHANDRAA சொல்கிறார்:

    Well Ravishanker has a corporate background Corporates had already pushed him into active politics Ravishanker ji often meets srilankan president prime minister Is he talking about our fishermen issue? Never Stalin never possessed nor tried to learn things
    All that he knew was with whom his father was talking …… throughout the day……..This stalin is not an intelligent man may be wicked kalignar knows Stalins limitations……

  9. LVISS's avatar LVISS சொல்கிறார்:

    Cant say whether Mr Swamy had played a part in this part in this –This can only be a guess as of now — –
    Stalin has stated that there wont be alliance with the BJP-(Todays Hindu ) If at all BJP will ally only with AIADMK or have other alliances —

    • ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

      நேற்று இல.கணேசன் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது என தெரிவித்திருக்கிறார். அதிமுக அரசு பிஜெபியுடன் கருத்தொருமித்து நன்றாக செயல்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார். BJP + DMK + DMDK = NOT possible என்றே தோன்றுகிறது.

  10. V.G.Chandrasekaran's avatar V.G.Chandrasekaran சொல்கிறார்:

    எஸ்ரா சற்குணத்திற்க்கு அரசியல் பேசவும் தலைவர்களுடன் மேடை ஏறவும் உரிமை உண்டு என்றால் அதே அளவு கோல் ஏன் ஶ்ரீ ஶ்ரீ க்கோ அல்லது மற்ற காவி கட்டிய ஆன்மீக தலைவர்களுக்கோ இருக்க கூடாது….

    • LVISS's avatar LVISS சொல்கிறார்:

      Mr VG Chandrasekaran sir you have raised a valid point which no sickulars will avoid answering – —But you see sir, in this secular country it is not secularism if a swamiji talks to politicians (it will be branded as spreading Hindutva) and it is secularism if some people from another religion does the same —

      • today.and.me's avatar today.and.me சொல்கிறார்:

        நண்பர்கள் VG சந்திரசேகரன் & எல்விஸ்

        S.R. சற்குணத்திற்கு தனது பேராயர் வேலையை விட்டு அரசியல் பேசவும் தலைவர்களுடன் மேடை ஏறவும் உரிமை உண்டு.
        ஆனால் இந்த சற்குணத்தை
        அவர் சார்ந்த மத அமைப்பும்
        அவர்மூலம் யோசிக்கத்தெரியா அப்பாவி ஆடுகளிள் ஓட்டுக்களை அள்ளும் திமுகவினரும் தான் அவர் ஒரு பேராயர் என்று சொல்லுகிறார்களே ஒழிய

        அவரை ஒரு பேசிக் கிறித்தவராகக்கூட கிறித்தவம் சார்ந்த மற்ற மத அமைப்புகளோ அல்லது அம்மக்களோ ஏற்றுக்கொள்வதில்லை. இது கிறிஸ்தவ உலகத்தில் புரிந்த உண்மை.

        அவரைப் போலத்தான் ரவிசங்கரும் என்றால்
        அவரும் தனது பூஜ்ய வேலையை விட்டுவிட்டு
        அரசியல் பேசவும் தலைவர்களுடன் மேடை ஏறவும் உரிமை உண்டு.

        ரவிசங்கர் அப்படித்தான் என்று ஒப்புக்கொள்ளுகிறீர்களா? நன்றி.
        ———————————–

        அப்படியே நண்பர்கள் இருவரும், விமரிசனம் மற்ற நண்பர்களும் கூட
        நெற்றியில் இருக்கும் சிவப்புப்பொட்டு
        சிவப்பு லைட் என்றும்
        மார்பில் போடும்பூணலை
        பருத்தி பெல்ட் என்றும்
        கழுத்தில் அணியும்தாலியை
        மஞ்சள் நாய்லைசன்ஸ் என்றும்
        இந்துக்கள் என்றாலே திருடர்கள் என்றும்
        முழங்கிய
        ஐந்துமுறை முதல்வராகி
        தன் குடும்பத்தை உலகம் முழுவதிலும் விஸ்தரி்த்துள்ள
        மு கருணாநிதிக்கும்
        அவரது வாரிசுகளுக்கும்

        இந்து மத தலைவர்களுடனோ

        எஸ்ஸாரை எஸ்றாவாக ஏமாற்றியே ஓட்டுவாங்கும்
        கிறித்தவ மத தலைவர்களுடனோ

        கோவையில் ஏமாற்றப்பட்ட
        பல்லாயிரம் இஸ்லாமியமக்களை
        கன்வின்ஸ் செய்ய முக பயன்படுத்திய
        சில இஸ்லாமிய மதத்தலைவர்களுடனோ

        மேடை ஏறவும், அரசியல் செய்யவும் உரிமை உண்டுதான்.

        ஆனால் இந்த திமுக கூட்டத்திற்கு
        இந்த இந்து முஸ்லீம் கிறித்தவ சமுதாய மக்களிடம்
        ஓட்டுக் கேட்கும் உரிமை எப்படிவருகிறது
        என்பதை கொஞ்சம் விளக்கினால் தேவலை.

        இந்த தமிழக மக்கள்தான்
        திமுகவிற்கு ஏன்
        மீண்டும் அந்த உரிமையைக் கொடுக்கவேண்டும்
        என்பதையும் கொஞ்சம் விளக்கினால் தேவலை.

        • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

          வருக நண்பர் டுடேஅண்ட்மீ….

          மீண்டும் உங்கள் ஒரிஜினல் வேகத்துடன் “களத்தினுள்” நுழையும்
          உங்களை வரவேற்பதில் நானும், இந்த தளத்தின் மற்ற நண்பர்களும்
          பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

          வழக்கம்போல் – உங்கள் பணி சிறப்பாகத் தொடர வாழ்த்துக்கள்.

          அன்புடன்,
          காவிரிமைந்தன்

        • Sharron's avatar Sharron சொல்கிறார்:

          Good to see u back. keep continue your postings. Waiting to read your comments

        • ravi's avatar ravi சொல்கிறார்:

          Good Joke Sirs ..

          Esra sargunam belongs to a christian group called ECI, but there are hundreds of other christian groups.. no two group sees eye to eye.
          your logic -> nobody accepts Esra as christian is wrong.

          ditto with ravisankar. he has his own followers , but others will not accept them..

          amma goes out of the way to please christians by participating in arumanai christmas function. gold kavacham for pasumpon thevar, was gifted by amma , for wooing the thevar community . this idea has yielded fantastic results ,as admk sweeps the southern districts.she went out of the way to please sankara mutt and then she went out of the way to hound them.

          politicians will go out of the way to woo anybody and screw anybody .. unfortunately the relegious leaders have never understood it.

          pandering to relegious communities are always the hallmark of our parties. why should amma go all the way to bring manithaneya makkal katchi and kongu parties ?? for their votes. thats it ..

          மார்பில் போடும்பூணலை பருத்தி பெல்ட் என்றும்

          DMK party revolves around anti brahminism. if you find fault with this , i doubt what will be your views on periyar, who was the founder of this ideology in tamilnadu …

          whether AMMA or thalivar, both are same in pandering to relegious/caste groups..

          DMK’s biggest problem is not about relegion or any other issue..
          its about their partymen’s involvement in land grabbing. No common man is ready to accept them, simply for this reason.

          Now, ADMK is almost going in this way .. Lets see how they handle them..

  11. B.Venkasubramanian's avatar B.Venkasubramanian சொல்கிறார்:

    Mr. LVISS

    // ” sickulars ” // –
    This very word exposes you as a Subramanaian Swamy”s Bakt.
    You should please note that
    whatever mission Fr.Esra Sarkunam has undertaken for and
    on behalf of DMK, he has been plain about it.
    He plainly said that he wants other parties to support DMK and DMK should
    come to power. But your so called “Swamiji”
    outwardly says he is a non-political person and he never discusses politics.
    Only this hypocricy is criticised.
    I have many times noticed whenever a valid point is raised
    by k.m. or any other person to you making it impossible or
    inconvenient to answer ( in the pinnoottam column,) you simply
    avoid replying and moving away. If you are sure about your logic
    why you are shy of discussions ? Throwing out something and
    running away without having the courage to face the response is not a thing
    followed in healthy forums.

    • ravi's avatar ravi சொல்கிறார்:

      This very word exposes you as a Subramanaian Swamy”s Bakt.////

      Is there any problems ?? when there can be amma bhakts , why not SuSa!!
      and when situation demands , JJ will not hesitate to join with SuSa..

  12. today.and.me's avatar today.and.me சொல்கிறார்:

    கா.மைஜி
    ஸ்டாலின் கால்ல செருப்பக் காணோம். 🙂
    என்னா (தொழில்) பக்தி 😀

    • ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

      அப்படி இல்லை நண்பரே. ஸ்டாலின் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்து வரவேற்கிறார். ஆகவே அவர் காலில் செருப்பின்றிதானே இருக்க முடியும். ஆனால் ரவிசங்கர் காரில் இருந்து இறங்கி வருகிறார். ஆகவே செருப்பு இருக்கிறது. Analysis.. analysis 🙂

      • today.and.me's avatar today.and.me சொல்கிறார்:

        Analysis எல்லாம் கரெட்டுத்தான்.
        வீட்டுக்குள்ள இருக்கும்போது செருப்பின்றிதான் பொதுவாக இருப்போம், நம்பிவிட்டேன் 😐
        ஆனா, லாஜிக் இடிக்குதே 🙂
        இதைப் பார்க்கும்வரை. 😀

        • ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

          ஹா..ஹா.. ஒன்னும் சொல்றதுக்கில்ல..

          எல்லாருக்கும் கால்ல ஆணி வந்தப்போ எடுத்த படம் போலருக்கு (great escapee!!!)

  13. selvarajan's avatar selvarajan சொல்கிறார்:

    // சென்னை வருகை தந்துள்ள வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை மதிமுக பொதுச்செயலர் வைகோ, ஹோட்டல் ஒன்றில் சந்தித்தார். இதனைத் தொடர்ந்து திமுக பொருளாளர் வீட்டுக்கு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சென்று சந்தித்தார். ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை வீட்டு வாசலில் நின்று வரவேற்ற ஸ்டாலின் அவருக்கு பொன்னாடை அணிவித்தார். இதனைத் தொடர்ந்து இருவரும் அரசியல் நிலவரம் உள்ளிட்டவை குறித்து பேசியதாக தெரிகிறது. //
    Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/srisri-ravi-shankar-meets-stalin-246566.html? —- முதலில் வை.கோ தேடி சென்று சந்தித்தார் — பின்பு ஸ்டாலினை – வீடி தேடி போகிறார் — ஒரு வேளை தேர்தலில் சீட்டு கேட்கவா . ? இல்லை சு.சுவாமியின் ஏற்பாட்டின் படி — ஜெயாவுக்கு ” சும்மா ஒரு பாவ்லா ” காட்டவா … ?குந்து கிடக்கும் ” கருப்பை — வெள்ளையாக்கவா ” …. ? எல்லாம் அந்த ” பெத்த பெருமாளுக்கே ” வெளிச்சம் …. அப்படி தானே …?

    • today.and.me's avatar today.and.me சொல்கிறார்:

      போன மாதம் அன்புமணி இவரைப் போய்ச் சந்தித்தாரே, அதை விட்டுவிட்டீர்களே நண்ப செல்வராஜன்.

      • selvarajan's avatar selvarajan சொல்கிறார்:

        வாருங்கள் … நண்ப … ! மீண்டும் உங்களின் ” smiley ” பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது — இத … இததான் .. எதிர்பார்த்தோம் … !!!

  14. selvarajan's avatar selvarajan சொல்கிறார்:

    தினமலர் பத்திரிக்கையில் வந்த செய்தி : — // பக்தி வேடம் பூணும் பகல் வேடக்காரர்கள் : கருணாநிதி காட்டம்
    மார்ச் 05,2010,00:00 IST
    Front page news and headlines today
    சென்னை: “”ஏமாற்று வித்தைக்காரர்களையும், பக்தி வேடம் பூண்டு பாமர மக்களை படுகுழியில் தள்ளுகிற பகல் வேடக்காரர்களையும் அவர்களிடம் பலியாகி சமுதாயத்தைச் சீரழிக்கிற சபல புத்தி உடையவர்களையும் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது,” என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
    இது தொடர்பாக, முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் பகுத்தறிவு பிரசாரம் பல்லாண்டுகளாக நடந்து வரும் போதும், சாமியார்கள் குறித்த தெளிவு மக்களிடம் இன்னும் ஏற்படாமலேயே உள்ளது. சமூக நலனிலும், கண்ணியத்திலும் அக்கறை காட்டுகிற ஒரு மக்கள் நல அரசு, கயமைத்தன சாமியார்களின் ஏமாற்று வித்தைகளை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. இதுபோன்ற குற்றங்கள் நடைபெறும் போது, அவை எப்படி நடத்தப்பட்டன, எங்கே, யாரால் நடத்தப்பட்டன, எந்த முறையில் நடத்தப்பட்டன என்பதை சான்றாக காட்ட, காட்டப்படும் படங்கள், செய்திகள் அளவுக்கு மீறி விடுகிறது. அவற்றை படங்களாக பார்த்திடும் இளையோர் நெஞ்சங்களில் எத்தகைய மாறுதல்கள் ஏற்படும் என்பதையும், அது இளைய சமுதாயத்தை எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்பதையும் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஏமாற்று வித்தைக்காரர்களையும், பக்தி வேடம் பூண்டு பாமர மக்களை படுகுழியில் தள்ளுகின்ற பகல் வேடக்காரர்களையும் அவர்களிடம் பலியாகி சமுதாயத்தைச் சீரழிக்கிற சபல புத்தி உடையவர்களையும் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார் // …. அன்றைய ” ஆட்சியில் ” கருணாநிதிக்கும் — இன்றைய இவர்— மற்றும் இவரின் ” குடும்பத்தினரின் ” பக்தி பரவசத்திற்கும் — என்ன காரணம் … ? வேஷங்கள் – வெளுக்குமா …?

  15. chandramouly venkatasubramanian's avatar chandramouly venkatasubramanian சொல்கிறார்:

    Mr Stalin is interested in learning “the art of living”.Ellam puriyumpodu vazhkai(life) oru mudivukku(nearing fag end of Life)vandhu vidhukiradhu.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.