துக்ளக் ஆசிரியர் “சோ” – ஜெ.வழக்கின் தீர்ப்பு பற்றி …..

.

இன்று வெளியாகியுள்ள ( சென்னையில் நாளை தான் வெளிவரும் )”துக்ளக்” வார இதழின் தலையங்கத்தில் ஆசிரியர் சோ அவர்கள்-ஜெயலலிதா அவர்களின் வழக்கு தீர்ப்பு பற்றி தனது கருத்துக்களைவிரிவாகக் கூறி இருக்கிறார்……

நமது வலைத்தள நண்பர்களின் வசதிக்காக அதை கீழே
தந்துள்ளேன்.

( நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் –
“தீர்ப்பில் குழப்பம் இன்னும் ஏன் தொடர வேண்டும்” என்கிற
தலைப்பில்

( https://vimarisanam.wordpress.com/2015/05/16/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D
%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF
%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE
%A9%E0%AF%8D/ )

– இந்த தளத்தில் நான் எழுதியிருந்த இடுகையுடன்
இந்த தலையங்கத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்படி
கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில், நான் எழுதியிருந்த இடுகையும்
கிட்டத்தட்ட சட்ட நுணுக்கங்களை அடிப்படையாகக் கொண்டது தான்…… )

துக்ளக் தலையங்கம் –

 

edit-1

edit-2

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

17 Responses to துக்ளக் ஆசிரியர் “சோ” – ஜெ.வழக்கின் தீர்ப்பு பற்றி …..

  1. ravikumar's avatar ravikumar சொல்கிறார்:

    Thanks for sharing

  2. chollukireen's avatar chollukireen சொல்கிறார்:

    இவ்வளவு புரியும்படியாக யாருமே சொன்னதாகத் தெரியவில்லை. என்ன வேண்டும். காழ்ப்புணர்ச்சியே இல்லாமல் கஷ்டப் படுகிறவர்களின் துயர் நீக்கிக் கொண்டு ராஜ ஸந்நியாசினியாக பதவியில் இருந்து பதவிக்கு பெருமை சேர்க்கட்டுமே.. இப்படிதான் எனக்கு நினைக்கத் தோன்றுகிறது. நாட்டுக்கு நன்மை செய்ய எவ்வளளவோ இருக்கிறது.. குற்றங்களும்,மன்னிப்பும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிரது. பரிசுத்தமான நபர் இனிதான் பிறக்க வேண்டுமோ என்னவோ? வயதான என்னால் ஸரியோ தப்போ இப்படியெல்லாம் தான் யோசிக்கத் தோன்றுகிறது. யாரானாலும் பட்டது போதும் என்ற தகுதி உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள், இதெல்லாம் ஒரு கமென்ட்டா என்று நினைப்பார்கள். பரவாயில்லை. அன்புடன்

    • today.and.me's avatar today.and.me சொல்கிறார்:

      //இதெல்லாம் ஒரு கமென்ட்டா என்று நினைப்பார்கள்.//
      வெறுப்பை உமிழும் கமெண்ட்டுகளுக்குக் கூட இங்கேமதிப்பு உண்டு.

      உங்கள் கருத்தை எப்படி அப்படி நினைக்க முடியும்.
      இதுவும் சரிதான்…

      உங்கள் அனுபவங்கள் மற்றவர்களுக்குப் பாடங்கள். ஒரு கருத்திலிருந்து மற்றொரு கருத்து அல்லது ஞானம் தோன்றுவதில்லையா என்ன?

      தொடர்ந்து உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் நண்பரே.
      🙂

  3. நெல்லைத் தமிழன்'s avatar நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    சோ சரியாகத்தான் எழுதியிருக்கிறார். காவிரி ஐயாவின் கருத்தும் இதேபோன்றுதான் இருந்தது. இதைத்தான் நடுனிலையாளர்கள் கருத்து என்று எடுத்துக்கொள்ளலாம் (level headed people’s opinion). தி.மு.கா ரசிகர்கள், பா.மா.கா ரசிகர்கள், தே.தி.மு.கா ரசிகர்கள், கம்யூன்ஸ்ட் ரசிகர்கள் (ரசிகர்கள்-அனுதாபிகள்) இவர்கள் எல்லோரும் தீர்ப்புக்கு எதிராகக் கருத்து சொல்வதால் (as it affects their agenda) சோ மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்று எழுதியுள்ளார்.

    என்னைப் பொறுத்தவரையில், குன்’ஹா சரியான தீர்ப்பளித்தார் என்று நம்பினோமென்றால், குமாரசாமியும் சரியாகத்தான் தீர்ப்பளித்தார் என்று நம்புவதுதான் சரியான முடிவாக இருக்கும்.

    இன்றைக்கு நேர்மை, நியாயம் என்று பேசுகின்ற எல்லோரும் (சுப்ரீம்கோர்ட் முதற்கொண்டு), பாபர் மசூதி வழக்கில் சுப்ரீம்கோர்ட் எப்படித் தீர்ப்பளித்தது என்று எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். வழக்கைவிட, நாட்டு நலம் மிகவும் உயர்ந்தது. தமிழ்னாட்டு நலன் (அதாவது 1 1/2 கோடி வாக்காளர் எண்ணம்) புறக்கணிக்க முடியாதது. அனுமானத்தின் பேரில் கடுமையான தீர்ப்பு வழங்கமுடியாது.

    • கோபாலன்'s avatar கோபாலன் சொல்கிறார்:

      10 சதவீதத்துக்குக் குறைவாகவே சொத்து சேத்திருக்கிறார், சட்டம் அதை ஏற்றுக் கொள்கிறது என்கிறார் குமாரசாமி.

      தன் வீட்டிற்குள் நுழைந்த திருடன் மாட்டிக்கொண்டபொது வீட்டில் ஒரு லட்சம் ருபாய் இருந்தது. அதிலிருந்து 900 ரூபாய்தான் எடுத்தேன் என்று காட்டினால் சோ என்கிற வக்கீல் அதை சரி என்று கருதி விட்டுவிடுவாரா. தீர்ப்பைப் புகழும் தாங்கள்தான் மனசாட்சிப்படி விட்டுவிடுவீர்களா.

      கோபாலன்

  4. MANI's avatar MANI சொல்கிறார்:

    அம்மா எப்போது உள்ளே போவார் நாம் அந்த இடத்தை பிடிக்கலாம்
    என்று காத்திருந்த கருணா,ஸ்டாலின் அன்புமணி விஜயகாந்த்
    எல்லோருக்கும் குமாரசாமியின் தீர்ப்பு ஆப்பு வைத்துவிட்டது .
    இப்போது தீர்ப்பில் எதாவது குற்றம் கண்டுபிடித்து சைக்கிள்
    கேப்பில் நுழைந்து விடலாம் என்று எதிர் பார்கிறார்கள். ஆனால்
    மோடியின் ஆசீர்வாதம் அருண் ஜெட்லி வடிவில் எப்போதோ
    வந்துவிட்டது. தமிழ்நாட்டு மக்களின் குறிப்பாக தாய்மார்களின்
    ஆதரவு எப்போதுமே ஜெயாவுக்கு உண்டு. ஆகையால்
    2021 தேர்தலில் உங்கள் கட்சிகளும் நீங்களும் இருந்தால் ஏதாவது
    நடக்கலாம். பெட்டெர் லக் இன் 2021.

  5. Chinthu's avatar Chinthu சொல்கிறார்:

    துக்ளக் ஆசிரியர் சோவின் கருத்துக்கள் புலிகள், இலங்கை விடயத்தில் இதைவிட பெறுமதி வாயந்தவையாகும்.

  6. Roaj's avatar Roaj சொல்கிறார்:

    Thanks for sharing. Nice analysis..

  7. பிங்குபாக்: துக்ளக் ஆசிரியர் “சோ” – ஜெ.வழக்கின் தீர்ப்பு பற்றி ….. | Classic Tamil

  8. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    Great ….!!!
    இந்த வலைத்தளத்தின் வளர்ச்சியில், உங்களுக்கும் பெரும் பங்கு
    உண்டு நண்பர் டுடேஅண்ட்மீ…. மிக்க நன்றி.

    இந்த வலைத்தளத்தின் வளர்ச்சிக்கும், பெருமைக்கும் காரணமான
    இந்த வலைத்தள நண்பர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களும்
    நன்றியும்.

    -காவிரிமைந்தன்

  9. divmee's avatar divmee சொல்கிறார்:

    Great News. Congrats Mr. K. M.

  10. ns raman's avatar ns raman சொல்கிறார்:

    “Mr Cho also pointed out this is again subject SC review”
    in case of JJ case reversed in SC Mr Cho use the same sentence in his editorial.
    He once again proved he is a clever lawyer. Though he is pro Modi and JJ he is a critics of both parties when they do mistake not like a blind follower of any leader.

  11. nithya's avatar nithya சொல்கிறார்:

    ayya neengal vikatanum padipperkal endru nambukiren.. Cho JJ aatharavaalar endru theriyum..athi pottathu pool ithayum pathiva podungalen..

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் நித்யா,

      விகடன் ஒரு கைதேர்ந்த வியாபாரி. நடிகைகளின்
      ஆபாசப் புகைப்படங்களை ஒரு பக்கமும்,
      புரட்சிகரமான கருத்துக்களை இன்னொரு பக்கமும்
      போட்டு “பிசினஸ்” செய்பவர்கள்.
      எந்த நேரத்தில் எதைப்போட்டால் விற்கும் என்று
      யோசித்து அதைப் போட்டு பணம் பண்ணுபவர்கள்….

      இந்த இடுகையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் குறித்து
      உங்களுக்கு எதாவது கருத்து கூற வேண்டியிருந்தால்
      அதை தாராளமாக இங்கு கூறலாம். விகடனின் இடுகை
      ஒருதலைப்பட்சமானது – வியாபார நோக்கில் எழுதப்பட்டது.
      அதை இங்கு போட வேண்டுமானால், ஒவ்வொரு பத்திக்கும்
      நான் விளக்கம் கொடுக்க வேண்டும். இந்த விஷயத்தில்
      என் கருத்து என்ன என்பதை நான் ஏற்கெனவே கூறிவிட்டேன்
      என்பதால் அது வேண்டாத வேலை.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • nithya's avatar nithya சொல்கிறார்:

        Anbin Aiyaa.. Thiru Cho avarakal ezuthiyullathu mattum oruthalai patchamaanathaaga theriyavilaya.. neethipathi Kumarasamy seithulla thappukkal kuriththu avar just like that endru kadanthu sendru viduvathu oru thalai patchamaanathu endru theriyavillayaa..

  12. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் நித்யா,

    இது விஷயத்தில் என்னுடைய கருத்து என்ன என்பதை –

    “தீர்ப்பில் குழப்பம் – இன்னும் ஏன் தொடர வேண்டும் …..?”
    https://vimarisanam.wordpress.com/2015/05/16

    – என்கிற தலைப்பில் வெளிவந்துள்ள இடுகையில்
    விரிவாக எழுதி இருக்கிறேன்.
    இன்னும் படிக்கவில்லையென்றால் –
    இப்போது படித்துப் பாருங்கள்.
    இது “சோ” அவர்களின் கருத்து வெளியாகும் முன்னரே
    நான் எழுதியது.

    படித்த பின்பு தான் நீங்கள் இவ்வாறெல்லாம் எழுதுகிறீர்கள்
    என்றால் – மன்னிக்கவும்,
    இதற்கு மேல் சொல்வதற்கு எனக்கு எதுவுமில்லை….

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.