காரணமானவர்கள் நாசமாகப் போகட்டும் …

நேற்றைய இடுகையில் தெரிவித்திருந்த “அச்சம்”
இன்று உண்மையாகி விட்டது. இதுவா “நல்ல தீர்ப்பு” ?
இதில் தீர்ப்பு எங்கே இருக்கிறது ..? அது தெரிந்தால் தானே
அதில் “நல்ல” வைத் தேட முடியும் ?

முதல் கட்ட வழக்கு விசாரணையின் போது அரசியல் அமைப்பு
பென்சுக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்ற ஏற்கெனவே
கூறப்பட்ட தீர்ப்புக்கு நேரெதிராக இன்று
மீண்டும் அரசியல் சாசன பெஞ்சு விசாரணைக்கு வழக்கு
மாற்றப்பட்டிருப்பதை
விந்தை என்று சொல்லாமல் வேறெந்த
மாதிரியும் சொல்ல முடியாது – நீதிமன்ற அவமதிப்பாகி விடும் …!

நல்லது நடக்காமல் குறுக்கே புகுந்து தடுத்தவர்களை,
கதறி அழுகின்ற அந்தத்தாயின் கண்ணீர் சும்மா விடாது.

இது சாபம் அல்ல. கோடிக்கணக்கான தமிழ் இதயங்களின்
குமுறல் – இதய வெடிப்பு – நல்ல தீர்ப்பு வராமல் போக
குறுக்கே நின்றவர்கள் நாசமாகப் போகட்டும். இந்தத் தாய்
படும் அதே வேதனையை அவர்களும் படட்டும்…

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to காரணமானவர்கள் நாசமாகப் போகட்டும் …

  1. paramasivam's avatar paramasivam சொல்கிறார்:

    குறுக்கே புகுந்து தடுத்தவர்கள் இப்போது மகிழ்ச்சி அடைவார்களா? எதில் தான் அரசியல் செய்வது என்பது புரியவில்லை.

  2. Saravana's avatar Saravana சொல்கிறார்:

    yaarum thadukkavillay.. ! appadiyenraal justice sadhasivam theerpai inru kaalaiyil court ku poi mudhalil ezhudhi irundha theerpai maatri ezhuthivittaar endru solkinreera?

  3. Varadhan's avatar Varadhan சொல்கிறார்:

    they all helped to assasinate the PM of a country..along with other 12 tamil people.. they too cried.. cried cried a lot lot and still crying..

  4. Unmai's avatar Unmai சொல்கிறார்:

    காரணமானவர்கள் நாசமாகப் போகட்டும்—>

    http://www.thehindu.com/news/national/2g-kickback-case-ed-files-charge-sheet-against-raja-kanimozhi/article5947720.ece?homepage=true

  5. புது வசந்தம்'s avatar புது வசந்தம் சொல்கிறார்:

    விடை பெரும் தமிழர் விடை தருவார் என எதிர்பார்த்தோம், கேள்வி குறியாகிப் போனதே ?, விடுதலை. என்ன காரணமோ ?.தமிழன் தலை நிமிரவில்லையே…

  6. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    எங்கள் ஊர் பக்கத்தில் நாசமா போகட்டும் என்பதை காட்டிலும் ஒரு படி மேலே போய் புழுத்து போகட்டும் என்பார்கள். அதாவது இறந்து புதைத்து புழு தின்பதற்கு முன் உயிருடன் இருக்கும் போதே புழு தின்ன ஆரம்பிப்பதே அதன் பொருள். இதில் குறிப்பாக பேரறிவாளன் எனும் ஒரு அப்பாவியின் வாழ்க்கையை நாசமாக்கியோரும், அவருக்கு கிடைக்க வேண்டிய நீதியை சுயநலத்துக்கும், நிர்பந்தங்களுக்குமாக மறுத்த கயவர்கள் அனைவரும் – நான் மனம் வெதும்பி சொல்கிறேன்… புழுத்தே போகட்டும்.

  7. Gopalasamy's avatar Gopalasamy சொல்கிறார்:

    Honorable Judge sri Sadasivamji today declared he is ready to accept any posting like Lokpal chairman! Good thinking!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.