மதன் கேள்வி – பதில் !
– ஒரு பார்வை !!
மதன் கேள்வி பதில் பகுதியின் முக்கிய நோக்கம் – வெளிப்படையாக தெரிவது – மதன் அவர்களின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவதும், கேள்வி -பதில் பகுதியை சுவையானதாக ஆக்குவதும் தான்.
ஒரு எழுத்தாளர் என்கிற முறையில் இது சரியானதாக இருக்கலாம்.
ஆனால் வாசகர்களை முட்டாள்கள் அல்லது திண்ணைப்பள்ளிக்கூட சிறுவர்கள் என்ற நிலையில் வைத்து பதில் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல.
மதனுக்கு நிறைய புத்தகங்களை – மற்ற சாதாரண வாசகர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லாத புத்தகங்களை –
படிக்கக்கூடிய வாய்ப்பும் வசதியும் சூழ்நிலையும் சுலபமாக கிடைக்கிறது. அவ்வப்போது அவர் படித்துக்கொண்டிருக்கும் புத்தகங்களுக்கு ஏற்ப அவர் கேள்விகளை அமைத்துக்கொள்வதை (பல சமயங்களில் கற்பனையாகவும் ! ) கூர்ந்து கவனிப்பவர்களால் புரிந்து கொள்ள முடியும் !
அண்மையில் வந்த ஒரு கேள்வி பதிலை பாருங்கள் –
கேள்வி -வாய் இல்லாப் பிராணிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்திய சம்பவம் முன்பு எப்போதாவது நிகழ்ந்தது உண்டா ?
பதில் – ஒரு சிறுவன் மீது பெரிய பன்றி ஒன்று பாய்ந்து கடித்து குதறிவிட்டது. பையன் செத்துப்போனான்.பன்றி மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, கோர்ட்டில் நீதிபதி அதற்கு தூக்கு தண்டனை விதித்தார். இது நடந்தது, பிரான்ஸில். 1386-ம் ஆண்டு!
– 14-ம் நூற்றாண்டில், அதுவும் பிரான்ஸில், குழந்தையை கொன்ற பன்றியை உடனே அடித்துக்கொல்லாமல்,
கைது செய்து, வழக்குப்போட்டு, கோர்ட்டுக்கு அழைத்துப்போய், வாதாடி தண்டனை – அதுவும் தூக்கு தண்டனை ( பன்றிக்கு தூக்கு தண்டனை ! )
பெற்றுக் கொடுத்தார்களாம்.
மதனின் கேள்வி பதில் பகுதியில் சில சமயங்களில் அறிவுபூர்வமான – சாதாரணமாக நம் பார்வைக்கு கிடைக்காத – செய்திகள் கிடைத்தாலும், பல சமயங்களில் அவர் வாசகர்களை முட்டாள்களாக கருதும் போக்கு
வெளிப்படையாகவே தெரிகிறது.
மதன் – வாசகர்கள் பற்றிய – தன் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்வது – அவரைப்பற்றைய ந்ம் எண்ணத்தை
மாற்றிக்கொள்ள உதவும் !!



தன்னை புத்திசாலி என்று காட்டிக் கொள்ளும் ஆர்வம் எல்லாப் படைப்பாளிகளுக்குமே பொதுவானது. ஆனால் நீங்கள் சொல்வது போல படித்ததை எல்லாம் கக்குகிற எழுத்துக்கள் வாசகர்களின் அதிருப்தியை சம்பாதிக்கும் என்பது நிஜம்தான்.
http://kgjawarlal.wordpress.com
பழுத்தமரம் கல்லடி படத்தான் செய்யும்..
தேவையானதை எடுத்துக்கொள்ளுங்கள்