…
…

…
எதில் தான் ஏமாற்றுவது என்று
ஒரு வரைமுறை கிடையாதா..?
கொரோனா விஷயத்திலும் கூட மக்களை ஏமாற்றுவதா…?
குஜராத்திக்காரர் என்றால் மனசாட்சி
இருக்கக்கூடாது என்று விதி ஒன்றும் இல்லையே …?
இன்றைய பாலிமர் தொலைக்காட்சி செய்தி கீழே –
…
…
.
————————————————————————————————————————



குஜராத்திக்காரர்கள் தொழில் நுட்பத்தில்
மிகச் சிறந்தவர்கள்.
சென்னைக்கு வந்த குஜராத்திக்கு அறிவாலயத்தின் காற்று பட்டதால் போலித் தொழிற்சாலை துவக்கினார் என்று எனக்கு தலைப்பு தோன்றியிருக்குமோ?
Jokes apart…இந்த கொரோனா வந்தாலும் வந்தது, முக கவசம் போன்ற புதிய தொழில்கள் வந்துவிட்டன. எங்களைச் சுற்றியிருக்கும் வியாபாரிகள் (அதாவது மார்வாரிகள்னு நினைக்கிறேன்.. எங்கள் வளாகத்தில்தான் இருக்கிறார்கள்), டக் என்று சானிடைசர்கள் 5லிட்டர் கேன்கள், முக கவசம் போன்றவற்றை அளவுக்கு அதிகமாக ஸ்டாக் வைத்து, எங்களில் யாருக்காவது வேணுமா என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள் (வியாபார நோக்கில்தான்). நாமெல்லாம் பிரச்சனையைப் பற்றி யோசிக்கும்போது, பிஸினெஸ்மென்கள், அதனை எப்படி காசாக்கலாம் என்று பார்க்கிறார்கள்.
இதில் போலி கிருமி நாசினிகளா? மனசாட்சியே இல்லாதவர்கள் இவர்கள். ஆனா நம்ம சட்டம் இவர்களை 20 வருடங்கள் உள்ளே போடாது. இது சட்டங்களின் தோல்வியா இல்லை பணக்காரர்களின் வெற்றியா?
ஒரு வருடத்துக்கு முன்பு மைலாப்பூர் அருகில்(னு நினைக்கிறேன்) போலி வெண்ணெய் தொழிற்சாலையைக் கண்டுபிடித்தார்கள். அந்த ஓனர் என்ன விளக்கம் சொல்றார்னா, இந்த வெண்ணெய்லாம் மக்களின் உணவுக்கு (அவர் சொன்னது கன்சம்ப்ஷன்) அல்ல, இவை, ஆஞ்சநேயருக்கு வெண்ணைக் காப்பு சார்த்துவதற்காகத் தயாரிக்கப்படுவது என்று. எவ்வளவு மனசாட்சி அந்த வியாபாரிக்கு.
புதியவன் சார் – // சென்னைக்கு வந்த
குஜராத்திக்கு அறிவாலயத்தின் காற்று
பட்டதால் போலித் தொழிற்சாலை
துவக்கினார் என்று எனக்கு தலைப்பு
தோன்றியிருக்குமோ? // என்று
ஒரு திருட்டுப்பயலுக்கு வக்காலத்து
வாங்குகிறீர்களே
அறிவாலயத்தை பார்க்காமலே
எத்தனையோ மோசடி ஸ்பெஷலிஸ்டுகள்
குஜராத்தில் உருவானது உங்களுக்கு
தெரியாதா ?
உ-ம்: லலித் மோடி, நீரவ் மோடி
விஜய் மால்யா etc. etc.
வங்கிமோசடிகள் செய்து விட்டு
நாட்டை விட்டு ஓடிப்போன
பெருந்திருடர்களில் பெரும்பாலானோர்
குஜராத்தைச் சேர்ந்தவர்களே.
அவர்கள் இதில் வல்லவர்கள்.