…
…

…
பலமுறை ரிஷிகேஷ் -க்கு சென்றிருக்கிறேன்.
ஆனால், இதுபோன்ற ஒரு காட்சி இதுவரை
பார்க்கக் கிடைத்ததில்லை.
பருந்துப் பார்வையில் –
அதாவது ட்ரோன் காமிராவிலிருந்து பார்த்தால் –
ரிஷிகேஷ் எப்படி இருக்கும்….?
நீங்களே பாருங்களேன் அந்த அருமையான காட்சியை…!!!
…
…
.
————————————————————————————————————-



Simply Superb.
An entirely new view.
Thanks for sharing.
அருமை…. நீங்கள் அதிருஷ்டசாலி…பலமுறை ரிஷிகேஷ் சென்றிருக்கிறீர்கள். எனக்கு அந்த ஆசை மட்டுமே உள்ளது…வாய்ப்பு?
புதியவன்,
கவலையே படாதீர்கள்.
போக வேண்டும் என்கிற ஆர்வம்
எப்போது வந்து விட்டதோ –
அப்போது, பிற விஷயங்கள்
தன்னாலேயே தொடர்ந்து வரும்.
(ஆனால் மழைக்காலத்தை தவிர்த்து விடுங்கள்…)
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
இல்லை கா.மை. சார்…அது இந்த ஜென்மத்தில் சாத்தியம் இல்லை. என் ஆசை, ஒரு வண்டியைப் பிடித்து ஹரித்வார் சென்று, அங்கு நடந்து, கங்கையில் குளித்து..இதுபோன்ற ஆசை இல்லை. இது சாத்தியப்படும்தான். ஹரித்வார், ரிஷிகேஷ், அதிலிருந்து கால் நடையாக மேலே மேலே சென்று இன்னும் பல முக்கியத் தலங்களை தரிசிக்கணும், சாதாரண உடையுடன் எதிர்பார்ப்பில்லாமல் மேலும் மேலும் முன்னேறணும் (எதில் என்று புரியும் என நினைக்கிறேன்) என்பது என் ஆசை. உடல் ஃபிட்னஸ் சிறிது குறைந்துவிட்டது. அதனால்தான் இந்த ஜென்மத்தில் சாத்தியம் இல்லை என்று தோன்றிவிட்டது.