…
…
வேலூர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் திரு.ஸ்டாலின்
பேசி இருப்பது கீழே –
…

…
திரு.ஸ்டாலினுக்கு தமிழக மக்களின் சார்பில் – ஏகோபித்த வேண்டுகோள் –
“ஸ்டாலின் ப்ளீஸ் –
எங்களுக்கு
அலுத்து
விட்டது.
தயவுசெய்து “இப்போதே” நினையுங்களேன்…”
.
———————————————————————————————————–



KM sir,
ஸ்டாலின் மேல் உங்களுக்கு ஏன் இந்த வன்மம். அவர் நிம்மதியாக இருப்பது ஏன் உங்களுக்கு பிடிக்கவில்லை. அவர்பாட்டுக்கு அவர் உண்டு, அவரின் வெளிநாடு மூலதன கணக்குவழக்குக்காக அவ்வப்போது வெளிநாட்டு பயணம் என்று சந்தோசமாக வாழ்க்கையை அனுபவிப்பது உங்கள் கண்களை உறுத்துகிறதா. உங்கள் பேச்சை கேட்டு செயலில் இறங்கினால், வருமான வரித்துறை மற்றும் அமுலாக்க துறை போன்றவற்றின் ரெய்டு அதன் பின்பு கோர்ட் கேஸ் என்று யார் அலைவது .
வேலூர் எம்.பி. தேர்தலுக்கு முன்னால்
ஸ்டாலின் ஒரு ஸ்டாம்ப் பேப்பரில்,
“இன்னும் ஒரு மாதத்திற்குள் ஆட்சியை நிச்சயம் கவிழ்த்து விடுவேன் –
இல்லையென்றால் இனி நான் தேர்தல் பிரச்சாரத்திற்கே வர மாட்டேன்”
-என்று எழுதி கையெழுத்து போட்டு, ரெஜிஸ்டரும்
பண்ணிக் கொடுத்தால், அதற்கு கொடுக்கும் விலையாக
நினைத்து துரை முருக புத்திரனை தேர்ந்தெடுக்கலாம்.
மக்களுக்கும் ஒரு வழியாக, இந்த பிரச்சினையிலிருந்து
ஒரு விடிவு கிடைக்கும்.
சார்…இதன் பின்னணி தெரியாமல் எழுதறீங்களே….
எவ்வளவு காலத்துக்கு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ என்று வரவு இல்லாமல் இருப்பது? இது என்ன கருணாநிதி காலமா..கொள்கை என்றெல்லாம் கதை விட. அதனால் எம்.எல்.ஏக்களை தக்க வைத்துக்கொள்வதற்காக உதார் விடுகிறார் ஸ்டாலின்.
கீரிக்கும் பாம்புக்கும் சண்டை நடக்கப்போகுது…காசு கல்லால போடுங்க – மோடி மஸ்தான் எஃபெக்ட்.
இப்போது அதிமுக ஆட்சி நடப்பதால் திமுக எதிர்க்கட்சியாக
இருந்தாலும் 60:40 என்ற விகிதாச்சார என்கிற அடிப்படையில்
பங்கு பிரிக்கப்படுகின்றன . திமுகஆட்சிக்கு வந்தால் இதே டீல்தான். இப்போதும் டீ ஆர் பாலு டிஸ்டில்லரி ஜெகத் ரக்ஷகன் டிஸ்டில்லரியில் டாஸ்மாக் கொள்முதல் செய்கிறது.
டோல் பிளாசா வசூல் இரு கட்சிகளுக்கும் உண்டு(திரு வேல்முருகன் கவனிக்கவும்) மணல் கொள்ளை, கல் குவாரி போன்ற அட்சய பாத்திரங்கள் இரு கட்சி ஆட்களிடம்
எப்போதும் உண்டு. எட்டு வருடங்கள் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இல்லை
என்ற ஒரு குறைதானே தவிர திமுக செல்வ செழிப்புடன் தான் உள்ளது .