…
…

…
கீழே ஒரு காணொளி…
அதில் வரும் நிகழ்வு, பார்க்கும் யாருக்கும்
எந்தவித அதிர்வையும் கொடுக்காது என்றே
நினைக்கிறேன்.
இந்த சமூக சீர்கேட்டிற்கு
எந்த விமோசனமும் இல்லை…
மக்கள் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார்கள்…
இதிலிருந்து விடுபட யாரும் முயற்சிப்பதும் இல்லை…!
( காணொளி – நண்பர் அஜீஸுக்கு நன்றி…)
– ஒரு வேளை இதற்கு அடுத்த ஸ்டேஜு’க்கு போனால்
சிலருக்கு உறை’க்கக் கூடுமோ… ?
…
…
.
———————————————————————————



ஊஹூம் –
யாராவது பயங்கரமாக அடி வாங்கினால்
ஒருவேளை உறை’க்கலாம்.
இன்றைக்கு யாருமே உரையாடல்களை விரும்புவதில்லை. வீட்டிலும் மற்ற இடங்களிலும். எல்லோரும் மொபைல், வாட்சப், முகம் தெரியாதவர்களிடமிருந்து வரும் பகிர்வு இவற்றிலேயே வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள். முந்தைய தலைமுறை ‘தனிக்குடித்தனம்’ என்று கூட்டுக் குடும்பத்தைத் தொலைத்தது. என் ஜெனெரேஷன் இரண்டும் கெட்டான், அதாவது தனிக்குடித்தனம்+தொலைக்காட்சி சீரியல்+வாட்சப்/இணையம், அடுத்த ஜெனெரேஷன் வாட்சப், யூடியூப் மட்டும்தான். அடுத்த ஜெனெரேஷன் போகும் பாதை ரொம்பவும் ஜீரணிக்க கஷ்டமாக இருக்கிறது. உணவு, தேநீர், ஜூஸ்/மில்க் ஷேக் ஆர்டர் பண்ண, உபர், ஸ்விக்கி போன்றவை, டாக்சி/ஆட்டோ ஊபர்,ஓலா, வீட்டுப்பொருட்கள் மற்றவைகள் ஆர்டர் செய்ய அமேசான் போன்றவை என்று நேரடியான இண்டெராக்ஷனே அவர்களுக்கு அந்நியமாக இருக்கிறது.
அப்படி இருக்கும்போது, கணவனை விட, முகம் தெரியாத வாட்சப் நட்புகள் இன்னும் நெருக்கமாக உணர்கின்றார்கள். அதுதான் சொந்த மகன், மகளைக் கொன்று, கணவனையும் கொல்ல முயற்சித்து பிரியாணிக் கடைக்காரனோடு ஓட நினைத்த பெண்களைப்போன்றவர்களின் காலமாக ஆகிக்கொண்டுவருகிறது.