…
…

…
சற்றும் எதிர்பார்த்திருக்க முடியாத ஒரு புதிய சிற்றுண்டி வகை
மதுரையில் ஒரு ஓட்டலில் விற்பனைக்கு வந்திருக்கிறது…
காணொளியில் பாருங்களேன் அதன் அழகை….!!!
…
…
.
——————————————————————————————————–
…
…

…
சற்றும் எதிர்பார்த்திருக்க முடியாத ஒரு புதிய சிற்றுண்டி வகை
மதுரையில் ஒரு ஓட்டலில் விற்பனைக்கு வந்திருக்கிறது…
காணொளியில் பாருங்களேன் அதன் அழகை….!!!
…
…
.
——————————————————————————————————–
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

இவர்கள் (புகழேந்தி மற்றும் பலர்) வாடகை வாய்கள். இவர்களைக் கண்டுகொள்ளாமல் செல்வது நல்லது. இவனுங்க ஒரு நாளும் திமுக குடும்பத்தை திக குடும்பத்தைப் பற்றி எழுதமாட்டாங்க. மாற்று…
[…] […]
நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
அய்யா … ! திரு என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் தற்போது இருந்திருந்தால் மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பார் — ஏனென்றால் அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரஸ்யமான விஷயம் : —
// ‘பிரபலங்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள்’ நுாலிலிருந்து: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் நகைச்சுவை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும். ஒரு முறை, என்.எஸ்.கே., தன் வீட்டில், பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, வந்த நண்பர் ஒருவர், கலைவாணரை பார்த்து, ‘என்ன இப்படி பழைய சோற்றை சாப்பிடுகிறீர்கள்… உங்கள் தகுதிக்கு பலகாரம் சாப்பிடக் கூடாதா?’ என்று கேட்டார்.
வந்த நண்பரை உட்கார சொன்ன கலைவாணர், வேலையாளை அழைத்து, ‘ஓட்டலில் போய் பழைய சோறு வாங்கி வா…’ என சொன்னார். சிறிது நேரத்தில் திரும்பி வந்த வேலைக்காரர், ‘ஐயா… எங்கு கேட்டும் பழைய சாதம் கிடைக்கவில்லை. மாறாக, இட்லி, தோசை மற்றும் பொங்கல் இவைகளே உள்ளது…’ என, சொன்னார்.
உடனே, என்.எஸ்.கே., வந்த நண்பரிடம், ‘எல்லாம் ஓட்டலில் கிடைக்கும். ஆனால், பழைய சோறு கிடைக்காது…’ என்று சொன்னார்…. { தற்போது கிடைக்கிறது என்பதில் நமக்கும் கூட சந்தோஷமே } அடுத்து
எம்.ஜி.ஆர்., – என்எஸ்.கே., நடித்த, மதுரை வீரன் படத்தில் ஒரு காட்சி…
என்.எஸ்.கே.,வும், அவர் மனைவி, டி.ஏ.மதுரமும், பழைய சோற்றை நீருடன் சாப்பிட்டுக் கொண்டிருப்பர். என்.எஸ்.கே., சாப்பிட்டு முடித்தவுடன், ‘ஆஹா… என்ன ருசி… இதைத்தான் தேவாமிர்தம்ன்னு சொல்லி இருப்பாங்களோ…’ என பழைய சோற்றின் மகிமையை சொல்வார். … //
எனக்கும் இது தோன்றியது செல்வராஜு சார். ஆனால், முன்புபோல் (அதாவது 30 வருடத்துக்கு) இப்போ நீர் விட்ட சாதம் நன்றாக இருப்பதில்லை. அரிசி, தண்ணீர் எல்லாமே இதன் காரணிகள்னு தோன்றுது.. முன்னெல்லாம் ரொம்ப வெயில் காலத்திலும் நீர் விட்ட சாதம், தயிர் (இல்லை மோர்), ஊறுகாய் சேர்த்து சாப்பிட அவ்வளவு நன்றாக இருக்கும். போன காலம் போனதுதான்.
இந்தக் காணொளியை நான் ரொம்ப முன்பே பார்த்திருக்கிறேன். அந்தக் கடையின் பில்லையும் பார்த்திருக்கிறேன் (ஜி.எஸ்.டி 1.20 ரூ சேர்த்து 1 பழைய சோறுக்கு 50 ரூபாய்)
There was a hotel called ‘Bhojan’ near Nagesh Theatre and they used to serve Pazayadu in those days. Not sure the hotel still exists.